புதன், 14 ஜூலை, 2021

கற்றுக்கொள்ளவோம்... (15.7.2021)

கற்றுக்கொள்ளவோம்...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
 இன்றைய நாள் வாசகங்கள் நமக்கு கற்றுக்கொள்ள அழைப்பு தருகின்றன. இயேசு கிறிஸ்து தனது நற்செய்திப் பணியை இவ்வுலகத்தில் ஆற்றியபோது, "என்னிடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள்" என்று கூறினார். இந்த இயேசுவிடமிருந்து  கற்றுக் கொள்வதற்கு பல பாடங்கள் உண்டு.  இந்த இயேசுவினிடத்தில் கனிவு இருந்தது, பரிவு இருந்தது, பாசம் இருந்தது, அன்பு இருந்தது, மன்னிக்கும் குணம் இருந்தது. இந்த இயேசுவிடம் இருக்கக்கூடிய ஏதேனும் ஒரு நற்பண்பை நாம் நம்முடைய வாழ்வில் கற்றுக்கொண்டு அதனை செயலாக்கப்படுத்திட இன்றைய நாளில் அழைக்கப்படுகின்றோம். கடவுள் எப்போதும் நம்மை பாதுகாத்துக் கொண்டிருக்கின்றார். நாம் படும் துன்பங்களை அவர் கண்ணோக்குகின்றார்.  துன்பங்களில் இருந்து நமக்கு விடுதலையை தருபவரும் அவரே. எப்படி இஸ்ரயேல் மக்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து கானான் நாட்டிற்கு அழைத்துச் சென்றாரோ, அதுபோல நமது வாழ்வில், துன்பம் துயரம் போன்றவற்றிலிருந்து கடந்து, இறைவன் நம்மையும் மகிழ்வான வாழ்வை நோக்கி அழைத்துச் செல்வார். அதற்கு நாம் ஆண்டவர் இயேசுவைப் போல கனிவு உள்ளவர்களாகவும், பரிவுள்ளம் கொண்டவர்களாகவும்,  அன்பு உள்ளம் கொண்டவர்களாகவும், மன்னிக்கும் மனம் படைத்தவர்களாகவும் இருத்தல் அவசியமாகிறது. ஆண்டவரிடம் காணப்பட்ட பண்புகளுள் ஏதேனும் ஒன்றை இன்றைய நாளில் நாம் நம்முடைய பண்பாக மாற்றிக் கொள்வதற்கான முயற்சியில் ஈடுபடுவோம். இந்த நாளை அழகாக்குவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...