செவ்வாய், 13 ஜூலை, 2021

நான் உனக்கு துணையாக இருப்பேன் ..(14.7.2021)

நான் உனக்கு துணையாக இருப்பேன் ...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்
இன்றைய நாள் வாசகங்கள் இறைவன் நம்மை பாதுகாப்பார் என்ற நம்பிக்கையில் நமக்கு தருகின்றன.  அவரிடத்தில் நாம் ஆழமான நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும் என்ற செய்தி இன்றைய நாளில் நமக்கு தரப்படுகிறது.

மக்களின் துன்பங்களைக் கண்டு மகிழ்வு வல்ல இறைவன் மாறாக துன்பத்தில் இருந்து மக்களை விடுவிக்க என்பவரை இறைவன் இன்றைய நாளில் முதல் வாசகத்தில் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரயேல் மக்களை மீட்டெடுப்பதற்காக மோசேவை அனுப்புகிறார்.
எகிப்துக்கு செல்ல அஞ்சக்கூடிய மோசே வுக்கு நான் உனக்கு துணையாக இருப்பேன் என்ற வாக்குறுதியை கொடுக்கின்றார். மக்களின் அழுகுரல் கேட்ட இறைவன் மக்களை மீட்பதற்கான முயற்சியில் ஈடுபட்டார். 
இன்று நிலவும் இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் கூட நம்மில் பலர் என்ன செய்வது எப்போது இந்த நிலை மாறும் என்ற எண்ணத்தோடு பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
விரைவில் இந்நிலை மாறும் கண்டிப்பாக அன்று இஸ்ரயேல் மக்களை காத்த இறைவன் என்று நம்மையும் அப்பார் என்ற ஆழமான நம்பிக்கை நமது உள்ளத்தில் இருக்க வேண்டும்.   அத்தகைய நம்பிக்கையோடு இந்த சமூகத்தில் நாம் பயணிக்கின்ற போது கடவுளின் திருவுளத்தை நாம் கண்டுகொள்ள இயலும்.

வாழ்வில் நிகழக் கூடிய இக்கட்டான சூழ்நிலைகளுக்கு மத்தியில் எல்லாம் நாம் ஆண்டவரின் திருவுளத்தை கண்டுகொண்டு அவர் மீது நம்பிக்கையோடு இந்த சமூகத்தில் தொடர்ந்து பயணிக்க இறை அருள் வேண்டுவோம்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...