செவ்வாய், 27 ஜூலை, 2021

தேட வேண்டியது உனக்குள்ளே...;(28.7.2021)

தேட வேண்டியது உனக்குள்ளே...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
 இறையாட்சி மண்ணில் மறைந்திருக்கக் கூடிய  புதையலுக்கு ஒப்பிடப்பட்டு,  ஆண்டவர் இயேசுவால் கற்பிக்கப்படுகிறது. மண்ணுக்குள் மறைந்து இருக்கும் புதையலை எப்படி நாம் உரிமையாக்கிக் கொள்ள வேண்டும், என்று எண்ணம் கொண்டவர்களாய் இருப்பதை எல்லாம் விற்று அதனை உரிமையாக்கிக் கொள்ள விரும்புகிறோமோ, அது போலத்தான் இந்த உலகத்தில் நாம் நம்மிடம் இருப்பதை எல்லாம் அடுத்தவரோடு பகிர்ந்து, நமக்குள் மறைந்திருக்கும் மனிதநேயத்தை கண்டு கொண்டு, அதை நம்முடையதாக மாற்றிக்கொள்ள இன்றைய நாளில் அழைக்கப்படுகின்றோம். 

அவ்வாறு நாம்  மறைந்திருக்கும் மனிதநேயத்தை கண்டு கொள்ளும் போது,  இறையாட்சியின் மதிப்பீடுகளின்படி வாழக்கூடிய மனிதர்களாக மாறுவோம்.  அப்போது நாம் இறைவனிடத்தில் மோசேயைப் போல முகமுகமாக தரிசித்து அவருடன் உரையாட முடியும். ஆண்டவர் எப்போதும் நம்மை கண்காணிக்கின்றார். நம்மோடு பேச ஆவலாக காத்திருக்கின்றார். காத்திருக்கும் இறைவனிடத்தில் நாம் நேரம் செலவிடுவதில்லை. காரணம், பல விதமான பணிகளுக்கு மத்தியில் பரபரப்பாக அனுதினமும் இயங்கிக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்து நமத பரபரப்பான பணிகளுக்கு மத்தியில்,  நம்முள் மறைந்திருக்கக் கூடிய அவரைக் கண்டு கொள்ளவும், அவருக்கு நேரம் ஒதுக்கவும், அவருடன் உரையாடவும், அதன் வழியாக நமக்குள்ளாக மறைந்திருக்கும் மனிதநேயத்தை கண்டுகொண்டு, இந்த சமூகத்தில் நாம் நிலையானது என கருதக் கூடிய அனைத்தையும் அடுத்தவருக்கு என தியாகம் செய்து, மனிதநேயத்தை நம்முடையதாக்கி இறையாட்சியின் மதிப்பீடுகளின்படி வாழ்வை அமைத்துக் கொள்ளக் கூடியவர்களாக மாறிட இறைவன் அழைக்கின்றார்.

அழைக்கும் இறைவனின் குரலினை உணர்ந்து கொண்டவர்களாய்,  நாம் நமக்குள் மறைந்திருக்கும் மனிதநேயத்தை கண்டுகொள்ள, அதன் வழியாக இறையாட்சியின் மதிப்பீடுகளின்படி வாழக்கூடிய மக்களாகிட இறையருள் வேண்டுவோம்.

1 கருத்து:

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...