சனி, 30 ஏப்ரல், 2022
உயிர்த்த ஆண்டவருக்கு சான்று பகர...(1.5.2022)
வெள்ளி, 29 ஏப்ரல், 2022
ஆண்டவரைக் கண்டு கொண்டு, அச்சம் களைவோம்!(30.4.2022)
வியாழன், 28 ஏப்ரல், 2022
நின்று நிலைத்திடும் ஆண்டவரின் வல்லமை!(29.4.2022)
புதன், 27 ஏப்ரல், 2022
இயேசுவின் பெயருக்கான ஆற்றல் அறிவோம்....(28.4.2022)
இயேசுவின் பெயருக்கான ஆற்றல் அறிவோம்....
இயேசுவின் அன்பர்களே,
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் ....
இயேசுவின் பெயருக்கு உள்ள ஆற்றலையும், பெருமையையும் இன்றைய நற்செய்தி வாசகத்தின் மூலம் அறிந்துகொள்ள அழைக்கப்பட வேண்டும் .
"நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதை எல்லாம் அவர் உங்களுக்குத் தருவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்று வாக்களிக்கிறார் இயேசு.
அந்நாளில் நீங்கள் என் பெயரால் வேண்டுவீர்கள்” என்றும் இயேசு முன் அறிவித்துள்ளார்.
இயேசுவின் திருப்பெயரை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம்? என சிந்திக்க இந்த நாளில் அழைக்கப்படுகிறோம்....
உலகில் உள்ள அனைத்துப் பெயர்களிலும் மேலான பெயர் இயேசுவின் திருப்பெயர்தான் ( பிலி 2:6-11). அந்தப் பெயருக்குத்தான் விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர். அந்தப் பெயரைக் கேட்டுத்தான் அலகைகள் அலறி அடித்துக்கொண்டு ஓடுகின்றன. அந்தப் பெயரால்தான் நோயாளர்கள் நலம் பெறுகின்றனர்;. அந்தப் பெயரில்தான் தந்தை இறைவன் பெருமை அடைகின்றார்.
பெருமை நிறைந்த இறைவனது பெயரை வீணாக பயன்படுத்துவதை தவிர்த்துநம்பிக்கையோடு இறைவனது திருப்பெயரை பயன்படுத்திஇறைவனின் ஆசி பெற்றுக் கொள்ள இறையருள் வேண்டி இணைந்து தொடர்ந்து இன்றைய நாள்திருப்பணியில் ஜெபிப்போம்....
செவ்வாய், 26 ஏப்ரல், 2022
உண்மைக்கு ஏற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள்!(27.4.2022)
மறுபடியும் பிறக்க வேண்டும்!(26.4.2022)
ஞாயிறு, 24 ஏப்ரல், 2022
நம்மில் செயலாற்றும் இறைவன் ...(25.4.2022)
நம்மில் செயலாற்றும் இறைவன் ...
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
நற்செய்தியைப்பறைசாற்ற இயேசு தனது சீடர்களை அனுப்புகிற நிகழ்ச்சி இன்றை வாசகமாக நமக்குத்தரப்படுகிறது.
இயேசு தனது சீடர்களை நற்செய்தி அறிவிக்க அனுப்பியதோடு தனது கடமை நிறைவேறிவிட்டது என்று கருதவில்லை . மாறாக, சீடர்களோடு உடனிருந்து செயலாற்றுகிறார். பல்வேறு சூழ்நிலைகளில் அவர்களை உறுதிப்படுத்துகிறார்.
கடவுள் எங்கே இருக்கிறார்...? என கேட்டால் பலர் கூப்பிடும் தூரத்தில் என்பார்கள். கூப்பிடும் தூரத்தில் இருப்பதனால்தான் பலர் கடவுளை கூப்பிடுவது இல்லை.ஆனால் கடவுள் நம்மை விட்டு வெகுதூரம் இருக்கக்கூடிய கடவுள் அல்ல. மாறாக, நம்மில் ஒருவராக இருந்து செயலாற்றுகிறவர்.
இயேசுவின் பிரசன்னம் இந்த உலகத்தில் அவர் வாழ்ந்ததோடு முடிந்துவிடவில்லை.
அவருடைய பணி உயிர்ப்போடு நிறைவுபெறவில்லை.
அவருடைய கடமை விண்ணேற்றத்தோடு நின்றுவிடவில்லை.
இன்றும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது அவர் ஏற்படுத்திய கிருத்துவத்தின் வழியாக ...
அவர் ஒவ்வொரு நாளும் தனது பணியைச்செய்யும் பணியாளர்களை உறுதிப்படுத்துகிறார். துவண்டுபோகிறபோதெல்லாம் அவர்களைத் தாங்கிப்பிடிக்கிறார். தோளோடு தோள் கொடுக்கிறார். இயேசுவின் சீடர்களும் தங்களின் வாழ்க்கையில் இதனை அதிகமாக உணர்ந்தனர். எனவே அந்த இயேசுவுக்காக தங்களது என் உயிரையும் தியாகம் செய்யத் துணிந்தனர்.
இன்றைய இறைவார்த்தை பகுதி நமக்கு உணர்த்தும் வாழ்வுக்கான பாடம். இயேசுவின் பணியை நாம் அனைவருமே முன்னெடுத்துச்செல்ல வேண்டும். குருக்கள் மட்டுமல்ல, கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு, அறிக்கையிடுகிற அனைவருமே நற்செய்தியின் பணியாளர்கள்தான். இயேசு நம்மிலே தொடர்ந்து செயலாற்ற, நம்மையே முழுவதுமாக இயேசுவிடம் ஒப்படைக்க இறையருள் வேண்டி இணைந்து தொடர்ந்து இந்த திருப்பலி வழியாக ஜெபிப்போம் .
சனி, 23 ஏப்ரல், 2022
நானே உங்களை அனுப்புகிறேன்!...(24.4.2022)
வெள்ளி, 22 ஏப்ரல், 2022
துன்பத்தில் இறைவன் தெரிவாரா?...(23.4.2022)
வியாழன், 21 ஏப்ரல், 2022
நம்பிக்கையின் ஆணிவேர் எது?(22.4.2022)
நம்பிக்கையின் ஆணிவேர் எது?
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்
இன்றைய நற்செய்திப்பகுதி, இயேசு உண்மையிலே உயிர்த்தார் என்பதை வலியுறுத்திக்கூறுவதாக அமைந்திருக்கிறது.
தொடக்க காலத்தில் ஆங்காங்கே உயிர்த்த இயேசுவை சீடர்கள் பார்த்ததாகக் கூறியதைப் பலவற்றுக்கு ஒப்பிட்டனர்.
சீடர்கள் ஏதாவது கனவு கண்டிருக்கலாம் அல்லது ஒருவிதமான பிரம்மையில் அவர்கள் இரு்ந்திருக்கலாம் அல்லது இயேசுவோடு நெருங்கி இருந்ததால், அவர்கள் பார்ப்பது எல்லாம் இயேசுவைப்போல இருக்கிறது என்று பல விளக்கங்கள் கொடுக்கப்பட்டன.
இவையெல்லாம் தவறான விளக்கங்கள், உண்மையில் இயேசு உடலோடு உயிர்த்தார் என்பதற்குத்தான் இன்றைய நிகழ்ச்சி, யோவான் நற்செய்தியாளரால் எழுதப்படுகிறது.
உயிர்த்த இயேசுவின் உடல் எப்படிப்பட்டது என்பதை நற்செய்தி வாசகம் நமக்கு விளக்குகிறது
இயேசு மீன்களை சமைத்து அவர்களுக்கு உண்ணக் கொடுக்கிறார். அவர்களோடு பேசுகிறார். அவர்களில் ஒருவராக இருக்கிறார். இவ்வாறு உடலோடு இருப்பதை அவர் உறுதிப்படுத்துகிறார். அவர் ஆவி அல்ல.
இயேசு உயிர்த்தார், என்பது நமது நம்பிக்கையின் ஆணிவேர். அந்த நம்பிக்கை தான் கிறிஸ்தவ மறை இந்த அளவுக்கு வளர்வதற்கு அடித்தளமாக இருந்திருக்கிறது. அந்த நம்பிக்கையில் நாம் ஒவ்வொருநாளும் வளா்வதற்கும், வளர்த்தெடு்ப்பதற்கும் அழைக்கப்படுகிறோம்.
உயிர்த்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை உள்ளத்தில் இருத்தி அவரது வார்த்தைகளை உள்வாங்கிக்கொண்டு உயிர்த்த ஆண்டவருக்கு சான்று பகரும் மனிதர்களாக மாறிட இறையருள் வேண்டி இணைந்து தொடர்ந்து இத்திருப்பலி வழியாக செபிப்போம்.
புதன், 20 ஏப்ரல், 2022
இறையாட்சியின் பணியினை முன்னெடுக்கும் மனிதர்களாக...(21.4.2022)
செவ்வாய், 19 ஏப்ரல், 2022
இறைவனை அடையாளம் காண்டிட...(20.4.2022)
திங்கள், 18 ஏப்ரல், 2022
சாட்சிகளாய் மாறிட...(19.4.2022)
ஞாயிறு, 17 ஏப்ரல், 2022
அன்பு சீடர்களாகிட...(18.4.2022)
அன்பு சீடர்களாகிட...(18.4.2022)
சனி, 16 ஏப்ரல், 2022
கிறிஸ்து உயிர்த்தார்! அல்லேலூயா!...(17.4.2022)
வெள்ளி, 15 ஏப்ரல், 2022
இயேசு இன்று அடக்கம் செய்யப்படுகிறார்!...(16.4.2022)
வியாழன், 14 ஏப்ரல், 2022
இன்று நமக்காக உயிர் துறந்தார் இயேசு!...(15.04.2022)
புதன், 13 ஏப்ரல், 2022
பணியின் நிறைவு! பகிர்வின் மேன்மை! ...(14.4.2022)
செவ்வாய், 12 ஏப்ரல், 2022
என்ன கிடைக்கும் ...?(13.4.2022)
என்ன கிடைக்கும் ...?
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் ...
யூதாசு இஸ்காரியோத்து தலைமைக் குருவிடம் வந்து "இயேசுவை உங்களுக்குக் காட்டிக்கொடுத்தால் எனக்கு என்ன தருவீர்கள்?" என்று கேட்டான். அவர்களும் முப்பது வெள்ளிக் காசுகளை எண்ணி அவனுக்குக் கொடுத்தார்கள். அதுமுதல் அவன் அவரைக் காட்டிக்கொடுப்பதற்கு வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான். என்பதை இன்றைய நாள் இறைவார்த்தை வாயிலாக வாசிக்க கேட்டோம்...
"எந்த வீட்டு வேலையாளும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்யமுடியாது. ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்புகொள்வார், அல்லது ஒருவரைச் சார்ந்துகொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்யமுடியாது" (லூக் 16: 13) வசனம் குறிப்பிடுகிறது.
இன்று நாம் வாசித்த வாசக பகுதியோடு இந்த இறைவார்த்தையை ஒப்பிட்டுப் பார்க்க நாம் அழைக்கப்படுகிறோம் செல்வத்துக்கும் இயேசுவுக்கும் இடையே பணிபுரிய துணிந்தான் ... யூதாசு ஒப்பற்ற செல்வமாகிய இயேசுவைப் புறக்கணித்து, முப்பது வெள்ளிக் காசுகளுக்கு ஆசைப்பட்டு, அடிமையாகிவிட்டான். இன்று பல நேரங்களில் இந்த யூதாசை போலவே நாமும் இச்சமூகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். பல நேரங்களில் நாமும் இந்த உலக இச்சைகளுக்கு அடிமையாகி உலக இச்சைகளுக்கும் கடவுளுக்கும் இடையே யாரை சார்ந்து வாழ்வது என தெரியாத வண்ணம் பல நேரங்களில் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இறை வார்த்தைகளின் அடிப்படையில் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என எண்ணினாலும் உலக இச்சைகளும் உலக இன்பங்களும் நம்மை இயேசுவின் வார்த்தைகளின் படி வாழ விடாது தடுக்கக்கூடிய வகையில் செயல்படுகின்றன... இத்தகைய ஒரு நிலையே யூதாசு இயேசுவை புறக்கணித்து முப்பது வெள்ளிக் காசுகளை தனதாக்கிக் கொள்ள முயன்றான்.
பல நேரங்களில் நாமும் பரபரப்பான இந்த உலகத்தில் பல பணிகளுக்கு மத்தியில் எதிர்காலத் தேவைக்கான பணத்தை இருப்பதற்காகவே ஓடிக்கொண்டிருக்கும் இந்த ஓட்டத்தில் இறைவனது வார்த்தைகளை பின்பற்றுவதில் இருந்து நமது வாழ்வு நிறைவு பெறுகிறது இறைவார்த்தையை பின்பற்றுவதை விட எதிர்காலத் தேவைக்கான பணத்தை சேர்ப்பதே முதன்மையானது என எண்ணக்கூடிய மனிதர்களாக நாம் நம்மை அறியாமலேயே செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற எதார்த்த நிலை தான் இன்று தொடர்ந்துகொண்டிருக்கிறது.
இந்நிலையிலிருந்து நாம் ஒவ்வொருவரும் மாற்றம் பெற இந்த நாள் நமக்கு அழைப்பு தருகிறது
நாம் யூதாசை போல செயல்படாமல் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகள் மீது அதிகமான நம்பிக்கை கொண்டவர்களாய் அவரது வார்த்தைகளை வாழ்வாக்கமவும் அதன் வழி ஆண்டவர் இயேசுவை நம்மவராக மாற்றிக் கொண்டு பயணிக்க இறையருள் வேண்டி இந்த திருப்பலியில் பக்தியோடு இணைவோம்.
திங்கள், 11 ஏப்ரல், 2022
இயேசுவைப் போல வாழ சாத்தியமா?...(12.4.2022)
ஞாயிறு, 10 ஏப்ரல், 2022
கிறிஸ்துவின் மனநிலை நமது மனநிலையாகிட...(11.4.2022)
இயேசுவுக்கு தன்னுடைய சீடர்களைப்பற்றி முழுமையாகத் தெரிந்திருந்தது. யூதாஸ் எப்படிப்பட்டவர்? அவரை நம்பலாமா? அவர் என்ன செய்யப்போகிறார்? என்பதையும் இயேசு அறிந்திருந்தார். ஆனாலும் யூதாசோடு தன் பயணத்தை தொடர்கிறார்.
இவ்வளவுக்கு யூதாசைப்பற்றித் தெரிந்தவர், ஏன் யூதாசிடம் முக்கியமானப் பொறுப்பைக் கொடுக்க வேண்டும்? என்ற கேள்வி நமக்குள் எழலாம்.
இயேசு யூதாசுக்கு திருந்துவதற்கு பல சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி தருகிறார். ஆனால் யூதாசு கிடைக்கிற சந்தர்ப்பங்களில் எல்லாம் சிறிது, சிறிதாக பயன்படுத்தி தன்னையே கறைபடித்துக்கொள்கிறார்.
அதுபோலவே பரிசேயர்களும் இலாசரை உயிர்த்தெழச்செய்த நிகழ்ச்சி வாயிலாக ஏராளமான யூதர்கள் மனம் மாறினார்கள். அவர்கள் இயேசுவில் நம்பிக்கை வைக்க ஆரம்பித்தார்கள். இயேசுவிடம் பலர் நம்பிக்கை கொள்வது, அதிகாரவர்க்கத்தினருக்கு பெருத்த தலைவலியை ஏற்படுத்த தொடங்கியது. அதற்காக அவர்கள் இலாசரை கொல்வதற்கும் துணிந்து விட்டார்கள். இயேசு செய்த அரும் அடையாளங்களைக் கண்டும், இயேசுவின் போதனை மற்றும் வாழ்வு அடிப்படையில் தங்கள் வாழ்வை சரியான பாதையில் அமைத்துக் கொள்வதற்கு பதிலாக கரை படுத்துக் கொள்ளக் கூடியவர்கள் ஆகவே பரிசேயர்களும் செயல்பட்டார்கள் என்பதை இன்றைய நாள் நற்செய்தி வாசகம் நமக்கு தெளிவுபடுத்துகிறது.
இந்த இறைவார்த்தை பகுதிகள் என்று நமது வாழ்வுக்கு தருகின்ற வாழ்வுக்கான பாடம் என்ன என சிந்திக்கின்ற போது நாம் ஒவ்வொருவருமே இயேசுவின் மனநிலையை கொண்ட மனிதர்களாக இருக்க இந்த நாள் நமக்கு அழைப்பு தருகிறது தன்னோடு இருப்பவன் தன்னை காட்டிக் கொடுப்பான் என அறிந்திருந்தும் ஆண்டவர் இயேசு கிறிஸ்து அவனும் மீட்புப் பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு இயேசு செயல்பட்டார். தனக்கு எதிராக எப்போதும் செயல்பட்டுக் கொண்டிருந்த பரிசேயர்களும் சதுசேயர்கள் மறைநூல் அறிஞர்களும் தங்கள் தவறான வாழ்வை மாற்றிக் கொண்டு இறைவனின் மக்களாக செயல்பட வேண்டும் என்பதே இயேசுவின் வாழ்வும் பணியும் நமக்கு வெளிப்படுத்துகிறது.
மரியாவின் திருத்தலம் பூசுதல் இயேசுவின் இறப்பை நினைவுத்துவது போல நம் வாழ்வில் நடக்கின்ற ஒவ்வொரு நன்மை தனங்களும் ஆண்டவர் இயேசு கிறிஸ்து இன்னும் நம்மை அதிகமாக அன்பு செய்கிறார் என்பதை நமக்கு வலியுறுத்துகின்றன. வழிகாட்டும் இறைவனின் வாழ்க்கை வழித்தடத்தில் பயணம் செய்கின்ற நாம் ஒவ்வொருவருமே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மனநிலையை நமது மனநிலையாக கொண்டு வாழ இறையருள் வேண்டி இந்த திருப்பலியில் பக்தியோடு ஜெபிப்போம்.
சனி, 9 ஏப்ரல், 2022
திருமண திருப்பலிக்கன மன்றாட்டுக்கள்
வாழ்வை எதிர்க்க கொள்ள துணிவோம்… (10.04.2022)
வாழ்வை எதிர்க்க கொள்ள துணிவோம்…
இயேசுவின் நண்பர்களே!
குருத்து ஞாயிறு என்றாலும் இன்றைய நாள் ஆண்டவரின் பாடுகளின் ஞாயிறு என்றுதான் அழைக்கப்படுகிறது. ஆண்டவருடைய துன்பங்களையும், இறப்பையும் பற்றி இந்த வாரம் முழுவதும் நாம் சிந்திக்க அழைக்கப்படுகிறோம்;.
பொதுவாகவே, ஒரு மனிதர் எப்படி வாழ்கிறாரோ, அப்படித்தான் இறக்கிறார். இயேசுவும் அப்படியே! அவர் வாழ்ந்தபோது, தன்னை முழுமையாக இறைவனுக்குக் கையளித்தார். இறந்தபோதும் அவ்வாறே.
இன்று இயேசு எருசலேம் நகரில் நுழைந்ததே தமதுப் சாவினை சந்திப்பதற்காகவே. இன்றைய முதல் இரண்டு வாசகங்களும் நற்செய்தியும் கிறிஸ்துவின் திருப்பாடுகளை நமக்கு நினைவூட்டுகின்றன. கிறிஸ்துவின் பாடுகளின் மறைபொருளை அறிந்து, நமது துன்பங்களை கிறிஸ்துவின் பாடுகளுடன் இணைத்து பார்க்க நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகிறோம். இந்நாளில் இன்றைய வாசகங்கள் வழியாக நாம் கோட்ட வார்த்தைகளின் உண்மையான அர்த்தத்தை உணர முயல்வோம்.
ஏன் இயேசு எருசலேம் செல்ல வேண்டம்?
இதுவரை இறைவாக்கினர் யாரும் எருசலேமில் மடிவதில்லை என்பதை இயேசு நன்கு அறிந்திருந்தார். ஆனால் தன்னால் அந்நிலையை பரிசேயரும், சதுசேயரும், மறைநூல் அறிஞர்களும் தங்களின் சுயலாபத்தால் மாற்ற வல்லவர்கள் என்பதை நன்றாக அறிந்தே எருசலேம் நகருக்குள் இயேசு நுழைகிறார்.
ஏன் இன்றைய நாளில் இயேசு எருசலேமுக்குள் நுழைய வேண்டும்?
யூதர்களின் ஆண்டுகளில் ‘நிசான்’ என்னும் மாதம் மிகவும் முக்கியமானது. காரணம் அவர்களுக்கு இதுவே முதல்மாதம், இந்த மாதத்தின் பத்தாம் நாள் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் நாள், அந்த நாளில் தான் யூதர்கள் தங்கள் பாஸ்கா விழாவினைக் கொண்டாடுவார்கள்.( வி.ப 12:2) இதில் பலியிடுகின்ற ஆட்டினை நான்கு நாட்களுக்கு முன்பாக தேர்ந்தெடுப்பார்கள் (லேவி 23) அதாவது குருத்து ஞாயிறான இன்று தான் மாசற்ற ஆட்டுக்குட்டியினை தேர்ந்தெடுத்து புனித வெள்ளியன்று பலியிடுவர். இயேசுவும் தன்னையே பலியிடப்படுகின்ற செம்மறியாக இந்நாளில் கையளிக்கின்றார். இதனால் தான் இயேசு இன்று எருசலேமில் நுழைகிறார்.
ஏன் இயேசு கழுதை மீது பயணம் செய்ய வேண்டும்?
இறைவாக்கினர் செக்கரியாவின் இறைவாக்கை நிறைவேற்றுகிற வகையில் கழுதையின் மீது இயேசு அமர்ந்து வருகிறார்.
கழுதை தாழ்ச்சியின் அடையாளம், ஒதுக்கப்பட்டவர்களின் சின்னம், அடிமையின் விலங்கு, அமைதியின் சிகரம், பொதுவாக வெற்றிப் பெற்றவர்கள் தன்னை அரசனாகக் காண்பித்துக் கொண்டவர்கள் குதிரையின்மீது தான் பவனி வருவார்கள் ஆனால் இயேசு அனைத்தையும் தலைகீழாக்க மாற்றப்போட்டவார். அதன் விளைவே கழுதை பயணம். மேலும் விரைவில் தாம் பலரால் எள்ளி நகையாடப்படுவதன் உருவகம்.
ஏன் மக்கள் ஓசன்னா கீதம் இசைத்தனர்?
இயேசுவின் மீது நம்பிக்கைக் கொண்டு பின் தொடர்ந்த மக்கட்கூட்டம் அவரை அரசராக வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தனார். அவரை ஓர் அரசராக ஏற்றுக் கொண்டதை அவர்களின் செயல்கள் வெளிப்படுத்துகின்றன. வழிகளில் தங்கள் மேலுடைகளை விரித்து அரசருக்கு தங்கள் மரியாதையை செலுத்துகின்றனர்.
ஏன் ஒலிவமரகிளை பயன்படுத்தப்பட்டது?
ஒலிவமரம் என்றாலே வெற்றியின் அடையாளம். அதன் கிளைகளைத் தறித்து வெற்றிக்கீதம் பாடுகின்றனர். இதோ எம் அரசர் எருசலேமுக்குள் நுழைந்து விட்டார் என்று புகழ்கின்றனர். எனவே ஓசான்னா! ஓசான்னா என ஆர்ப்பரிக்கிறார்கள். இதை அனைத்தையும் பார்க்கின்ற பரிசேயர், சதுசேயர், மறைநூல் அறிஞர்கள் அதனை ஜீரணிக்க முடியவி;ல்லை.
இந்நிலையில் இயேசுவின் மனநிலை எப்படிப்பட்டதாக இருந்திருக்கும் என சிந்திக்கின்ற போது…
இந்த வெற்றியின் ஆர்பரிப்பு, இன்னும் சில நாட்களில் புலம்பலாக மாறும்…. என்பதையும்,
இந்த ஓசான்னா கீதம், ஒழிக என்ற குரலாக மாறி ஒழிக்கும்… என்பதையும்,
இந்த ஒலிவ மரத்தின் இலைகள், கிளைகள் அனைத்தும் முள்முடியாக மாறும்…. ஏன்பதையும்,
இவர்களின் ஆடைவிரிப்பு அனைத்தும் அவரின் ஆடையையே கழற்றிவிடுவதாக மாறும்… என்பதையும்,
கூட்டமாக பின் தொடர்ந்தவர்கள், தான் கைதுச் செய்யப்பட்ட பின்பு தம் பின்னால் ஒருவரும் நிற்கா வண்ணம் ஓடி மறைவாhர்கள்… என்பதையும்,
மக்களின் மத்தியில் அரசராக பவனி வந்தவர், இரு கள்வர்களின் நடுவில் அசைய முடியாமல் அறையப்பட்டு விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே சிலுவையில் தொங்குவார்… என்பதையும் இயேசு நன்றே அறிந்திருந்தார். மரணத்தைக் கண்முன் கொண்டிருந்தாலும், தான் அடைய இருந்த இலக்கினை மிகத் தெளிவாக கடந்து சென்றாhர் இயேசு. இயேசு தன் வாழ்வில் போற்றலையும் தூற்றலையும் சமமாக எடுத்துக் கொண்டாhர். மனிதத்தின் பாவத்தின் விளைவாக கிடைத்த சாவினை வெற்றிக்கொள்ள சாவினை ஏற்க துணிந்தார்.
இந்த இயேசுவின் வாழ்வு இன்று நமக்கு தரும் பாடம் இயேசு வாழ்வின் எதார்த்தங்களை துணிவோடு சந்தித்து சாதித்ததுப் போல வாழ்வில் வரும் இன்ப துன்பங்களை இறைத்திட்டம் எனக்கருதி துணிந்து ஏற்க சிலுவையில் தொங்கும் இயேசுவை நமது மனக்கண்முன் இருத்தி வாழ்வை எதிர்க்க கொள்ள இறையருள் வேண்டுவோம்.
வெள்ளி, 8 ஏப்ரல், 2022
பலருக்கு வாழ்வு கொடுப்போம்....(9.4.2022)
பலருக்கு வாழ்வு கொடுப்போம்....
அன்பார்ந்த இணையதள நண்பர்களே!
"ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது" (யோவா 11:50) தலைமைக்குரு கயபாவின் இவ்வறிக்கை ஒரு இறை வாக்கு. அறிவுள்ள விவாதம். உண்மையின் வெளிப்பாடு. ஒரு முன்னறிவிப்பு. ஆதாம் என்னும் ஒரு மனிதனால் வந்த பாவத்தையும் சாபத்தையும்,இயேசு தன் இறப்பால் அழிக்க இருப்பதை, கயபா தலைமைக்குரு தன்னை அறியாமல் முன்னறிவிக்கிறார். பவுலடியார் இதை உறுதிசெய்கிறார். "ஒரே ஒரு மனிதன் வழியாய்ப் பாவம் இந்த உலகத்தில் நுழைந்தது; அந்தப் பாவத்தின் வழியாய்ச் சாவு வந்தது. அதுபோலவே, எல்லா மனிதரும் பாவம் செய்ததால், எல்லா மனிதரையும் சாவு கவ்விக்கொண்டது".( உரோ5 :12)
ஒரு மனிதனின் பாவத்தால் மனிதன் சிதறினான். நாடுகள் சிதறின. பல மொழிகள் உண்டாயின. ஆனால் இயேசு என்ற ஒற்றை மனிதனின் வாழ்வு இவை அனைத்தையும் மாற்றிக் கொடுத்தது ...இன்னும் பலவிதமான பிரிவினைகளுக்கு மத்தியில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இன்றைய நடைமுறை இதுதான். ஒருசில நல்லவர்களின் இறப்புதான் பலருக்கு வாழ்வைக் கொடுக்கிறது. ஒருவருடைய தவறான வாழ்வு பலருக்கு அழிவைக் கொண்டுவருவதும் உண்மையே. நல்லவர் ஒருவர் இன்று அறிதாக உள்ளது. பொல்லாதவர் கூட்டம் பெரிதாக உள்ளது. நல்லவர் ஒருவராக நாமிருப்போம். பலருக்கு வாழ்வு கொடுப்போம்.
வியாழன், 7 ஏப்ரல், 2022
கடவுளின் வார்த்தையைப் பெற்றுக் கொண்டவர்களே தெய்வங்கள் எனப்படுகிறார்கள்.....(8.4.2022)
புதன், 6 ஏப்ரல், 2022
நிலை வாழ்வை நமதாக்கிக்கொள்ள...(7.4.2022)
செவ்வாய், 5 ஏப்ரல், 2022
பாவத்திலிருந்து விடுதலை பெறுவதற்கான அழைப்பு...(6.4.2022)
இன்றைய வாசகத்தில் இயேசுவுக்கும் யூதர்களுக்கும் இடையே விடுதலை குறித்தும் அடிமைத்தனம் குறித்தும் விவாதம் நடக்கிறது
கடவுளின் வார்த்தை அவர்களுக்கு விடுதலை அளிக்கும் என்கிறார் இயேசு. அவர்களோ "நாங்கள் யாருக்கும் ஒருபோதும் அடிமைகளாய் இருந்ததில்லை என்கின்றனர். இயேசுவோ "பாவம் செய்யும் எவரும் பாவத்துக்கு அடிமை" என்று சொல்லி, அவர்களின் அறிவுக்கு கண்களைத் திறக்க முயல்கிறார்.
ஆபிரகாமின் வழிமரபினரான யூதர்கள் பல ஆண்டுகள் எகிப்தில் அடிமைகளாய் இருந்தனர், பின்னர், பாபிலோனுக்கு அடிமைகளாய் நாடு கடத்தப்பட்டனர். இயேசுவின் காலத்தில்கூட அவர்கள் உரோமைப் பேரரசின் அடிமைகளாய்த்தான் இருந்தனர். இந்த உண்மையை ஒத்துக்கொள்ள மறுத்ததே அவர்களின் பொய்மையின் அடிமை என்பதைக் காட்டுகிறது.
எனவேதான், இயேசு அவர்களுக்கு நினைவூட்டுகிறார், "பாவம் செய்யும் எவரும் பாவத்துக்கு அடிமை" என்று. அந்தப் பாவ அடிமைத்தனத்திலிருந்து விடுதலை அளிக்கவே இயேசு இந்த உலகிற்கு வந்தார்.
ஆனால் யூதர்கள் இயேசு கொண்டு வந்த விடுதலையை அறியவுமில்லை, அதனைப் பெற விரும்பவுமில்லை. ஆனால், கிறித்தவராகிய நாம் இயேசு சொன்ன வார்த்தைகளை அறிந்திருக்கிறோம். ஆனால் பல நேரங்களில் பாவங்களுக்கும், அடிமைகளாய் வாழ்ந்து வருகிறோம். இந்த உண்மையை அறிக்கையிட்டு, இயேசுவின் மன்னிப்பையும், விடுதலையையும் இத்தவக்காலத்தில் பெற்றுக் கொள்ள முயல்வோம் அதற்கான அருளை வேண்டி இறைவனிடத்தில் இன்றைய நாளில் இறைவேண்டல் செய்வோம்.
திங்கள், 4 ஏப்ரல், 2022
ஆண்டவரின் வழிகள் செம்மையானவை...(5.4.2022)
ஞாயிறு, 3 ஏப்ரல், 2022
தன்னையறிதல்...(4.4.2022)
சனி, 2 ஏப்ரல், 2022
புதிய பாதையில் புதிய வாழ்வு வாழ....(3.4.2022)
புனித மார்த்தா விழா! ( 29-7-2024)
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...
-
மன்றாட்டுகள் 1) அன்புத்தந்தையே இறைவா உம் திருஉடலாம் திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், கன்னியர், துறவறத்தார் மற்ற...
-
செபம்: உன்னதங்களிலே உன்னதங்களிலே கடவுளுக்கு மாட்சி உண்டாகுக. உலகினிலே நன்மனத்தோருக்கு அமைதி ஆகுக. உம்மைப் புகழ்கின்றோம். உம்ம...