செவ்வாய், 12 ஏப்ரல், 2022

என்ன கிடைக்கும் ...?(13.4.2022)

என்ன கிடைக்கும் ...?


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் ...


யூதாசு இஸ்காரியோத்து தலைமைக் குருவிடம் வந்து "இயேசுவை உங்களுக்குக் காட்டிக்கொடுத்தால் எனக்கு என்ன தருவீர்கள்?" என்று கேட்டான். அவர்களும் முப்பது வெள்ளிக் காசுகளை எண்ணி அவனுக்குக் கொடுத்தார்கள். அதுமுதல் அவன் அவரைக் காட்டிக்கொடுப்பதற்கு வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான். என்பதை இன்றைய நாள் இறைவார்த்தை வாயிலாக வாசிக்க கேட்டோம்...

"எந்த வீட்டு வேலையாளும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்யமுடியாது. ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்புகொள்வார், அல்லது ஒருவரைச் சார்ந்துகொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்யமுடியாது" (லூக் 16: 13)  வசனம் குறிப்பிடுகிறது.


இன்று நாம் வாசித்த வாசக பகுதியோடு இந்த இறைவார்த்தையை ஒப்பிட்டுப் பார்க்க நாம் அழைக்கப்படுகிறோம் செல்வத்துக்கும் இயேசுவுக்கும் இடையே பணிபுரிய துணிந்தான் ... யூதாசு ஒப்பற்ற செல்வமாகிய இயேசுவைப் புறக்கணித்து, முப்பது வெள்ளிக் காசுகளுக்கு ஆசைப்பட்டு, அடிமையாகிவிட்டான். இன்று பல நேரங்களில் இந்த யூதாசை போலவே நாமும் இச்சமூகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். பல நேரங்களில் நாமும் இந்த உலக இச்சைகளுக்கு அடிமையாகி உலக இச்சைகளுக்கும் கடவுளுக்கும் இடையே  யாரை சார்ந்து வாழ்வது என தெரியாத வண்ணம் பல நேரங்களில் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இறை வார்த்தைகளின் அடிப்படையில் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என எண்ணினாலும் உலக இச்சைகளும் உலக இன்பங்களும் நம்மை இயேசுவின் வார்த்தைகளின் படி வாழ விடாது தடுக்கக்கூடிய வகையில் செயல்படுகின்றன... இத்தகைய ஒரு நிலையே யூதாசு இயேசுவை புறக்கணித்து முப்பது வெள்ளிக் காசுகளை தனதாக்கிக் கொள்ள முயன்றான்.

பல நேரங்களில் நாமும் பரபரப்பான இந்த உலகத்தில் பல பணிகளுக்கு மத்தியில் எதிர்காலத் தேவைக்கான பணத்தை இருப்பதற்காகவே ஓடிக்கொண்டிருக்கும் இந்த ஓட்டத்தில் இறைவனது வார்த்தைகளை பின்பற்றுவதில் இருந்து நமது வாழ்வு நிறைவு பெறுகிறது இறைவார்த்தையை பின்பற்றுவதை விட எதிர்காலத் தேவைக்கான பணத்தை சேர்ப்பதே முதன்மையானது என எண்ணக்கூடிய மனிதர்களாக நாம் நம்மை அறியாமலேயே செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற எதார்த்த நிலை தான் இன்று தொடர்ந்துகொண்டிருக்கிறது.

இந்நிலையிலிருந்து நாம் ஒவ்வொருவரும் மாற்றம் பெற இந்த நாள் நமக்கு அழைப்பு தருகிறது 

நாம் யூதாசை போல செயல்படாமல் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகள் மீது அதிகமான நம்பிக்கை கொண்டவர்களாய் அவரது வார்த்தைகளை வாழ்வாக்கமவும் அதன் வழி ஆண்டவர் இயேசுவை நம்மவராக மாற்றிக் கொண்டு பயணிக்க இறையருள் வேண்டி இந்த திருப்பலியில் பக்தியோடு இணைவோம்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...