திங்கள், 11 ஏப்ரல், 2022

இயேசுவைப் போல வாழ சாத்தியமா?...(12.4.2022)

இயேசுவைப் போல வாழ சாத்தியமா?

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இயேசு இந்த மண்ணில் வாழ்ந்த போது தம்மோடு இருப்பவர்களைப் பற்றி நன்கு அறிந்திருந்தார் உடன் பயணிக்கின்ற ஒருவன் தன்னைக் காட்டிக் கொடுப்பான் என்பது எப்போதும் எல்லா சூழ்நிலையிலும் உடன் பயணித்த ஒருவர் தன்னை தெரியவே தெரியாது என மறுத்து அளிப்பார் என்பதையும் உம்மோடு பின்தொடர்வது எங்கள் வாழ்வு என பின் தொடர்ந்தவர்கள் இயேசு கைது செய்யப்படுகின்ற சூழல் வரும்போது தங்களின் ஆடைகளை கூட விட்டு விட்டு ஓட கூடியவர்களாக மாறுவார்கள்  என்பதையும் இயேசு நன்கு அறிந்திருந்தார். ஆனாலும் இயேசு அவர்களோடு தொடர்ந்து பயணம் செய்தார்.

இன்றைய நற்செய்தியில் இயேசுவால் தேர்ந்தெடுக்கப்பட்டு அன்பு செய்யப்பட்ட இருவரின் உண்மை முகமானது கிழிக்கப்படுகிறது. ஒருவர் யூதாசு, மற்றொருவர் பேதுரு. வயதில் முதிர்ந்தவர் பேதுரு, இளையவர் யூதாசு. அனைத்து நிகழ்வுகளிலும் இயேசுவோடு இருந்தவர் பேதுரு. அப்பப்பம் வந்து செல்பவர் யூதாசு.இந்த யூதாசிடம்தான் பலவிதமான பொறுப்புகளை இயேசு ஒப்படைத்திருந்தார். இந்து பேதுருவை தான் திருஅவையின் தலைவர் எனவும் இயேசு அறிவித்திருந்தார்...ஆனாலும் அவர்களோடு தனது இறையாட்சி  பயணத்தை மேற்கொண்டார்...
இந்த இயேசுவின் மனநிலை இன்று நம்மில் இருக்கிறதா? என்ற கேள்வியை நாம் நமக்குளாக எழுப்பிபார்ப்போம்....

சுயநலமிக்க மனிதர்களுக்கு மத்தியில் பொது நலத்தோடு செயல்படக்கூடிய இயேசுவின் மனநிலை கொண்ட மனிதர்களாக நாம் இந்த சமூகத்தில் செயல்பட இறையருள் வேண்டி இணைந்து தொடர்ந்து இந்த திருப்பலி வழியாக ஜெபிப்போம் ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...