வெள்ளி, 8 ஏப்ரல், 2022

பலருக்கு வாழ்வு கொடுப்போம்....(9.4.2022)

பலருக்கு வாழ்வு கொடுப்போம்....


அன்பார்ந்த இணையதள நண்பர்களே!


"ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது" (யோவா 11:50) தலைமைக்குரு கயபாவின் இவ்வறிக்கை ஒரு இறை வாக்கு. அறிவுள்ள விவாதம். உண்மையின் வெளிப்பாடு. ஒரு முன்னறிவிப்பு. ஆதாம் என்னும் ஒரு மனிதனால் வந்த பாவத்தையும் சாபத்தையும்,இயேசு தன் இறப்பால் அழிக்க இருப்பதை, கயபா தலைமைக்குரு தன்னை அறியாமல் முன்னறிவிக்கிறார். பவுலடியார் இதை உறுதிசெய்கிறார். "ஒரே ஒரு மனிதன் வழியாய்ப் பாவம் இந்த உலகத்தில் நுழைந்தது; அந்தப் பாவத்தின் வழியாய்ச் சாவு வந்தது. அதுபோலவே, எல்லா மனிதரும் பாவம் செய்ததால், எல்லா மனிதரையும் சாவு கவ்விக்கொண்டது".( உரோ5 :12)

ஒரு மனிதனின் பாவத்தால் மனிதன் சிதறினான். நாடுகள் சிதறின. பல மொழிகள் உண்டாயின. ஆனால் இயேசு என்ற ஒற்றை மனிதனின் வாழ்வு இவை அனைத்தையும் மாற்றிக் கொடுத்தது ...இன்னும் பலவிதமான பிரிவினைகளுக்கு மத்தியில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 

இன்றைய நடைமுறை இதுதான். ஒருசில நல்லவர்களின் இறப்புதான் பலருக்கு வாழ்வைக் கொடுக்கிறது. ஒருவருடைய தவறான வாழ்வு பலருக்கு அழிவைக் கொண்டுவருவதும் உண்மையே. நல்லவர் ஒருவர் இன்று அறிதாக உள்ளது. பொல்லாதவர் கூட்டம் பெரிதாக உள்ளது. நல்லவர் ஒருவராக நாமிருப்போம். பலருக்கு வாழ்வு கொடுப்போம். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...