வியாழன், 21 ஏப்ரல், 2022

நம்பிக்கையின் ஆணிவேர் எது?(22.4.2022)

நம்பிக்கையின்  ஆணிவேர் எது?

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்


இன்றைய நற்செய்திப்பகுதி, இயேசு உண்மையிலே உயிர்த்தார் என்பதை வலியுறுத்திக்கூறுவதாக அமைந்திருக்கிறது. 


தொடக்க காலத்தில் ஆங்காங்கே உயிர்த்த இயேசுவை சீடர்கள் பார்த்ததாகக் கூறியதைப் பலவற்றுக்கு ஒப்பிட்டனர். 

சீடர்கள் ஏதாவது கனவு கண்டிருக்கலாம் அல்லது ஒருவிதமான பிரம்மையில் அவர்கள் இரு்ந்திருக்கலாம் அல்லது இயேசுவோடு நெருங்கி இருந்ததால், அவர்கள் பார்ப்பது எல்லாம் இயேசுவைப்போல இருக்கிறது என்று பல விளக்கங்கள் கொடுக்கப்பட்டன.

 இவையெல்லாம் தவறான விளக்கங்கள், உண்மையில் இயேசு உடலோடு உயிர்த்தார் என்பதற்குத்தான் இன்றைய நிகழ்ச்சி, யோவான் நற்செய்தியாளரால் எழுதப்படுகிறது.

உயிர்த்த இயேசுவின் உடல் எப்படிப்பட்டது என்பதை  நற்செய்தி வாசகம் நமக்கு விளக்குகிறது 

 இயேசு மீன்களை சமைத்து அவர்களுக்கு உண்ணக் கொடுக்கிறார். அவர்களோடு பேசுகிறார். அவர்களில் ஒருவராக இருக்கிறார். இவ்வாறு உடலோடு இருப்பதை அவர் உறுதிப்படுத்துகிறார். அவர் ஆவி அல்ல. 

இயேசு உயிர்த்தார், என்பது நமது நம்பிக்கையின்  ஆணிவேர். அந்த நம்பிக்கை  தான் கிறிஸ்தவ மறை இந்த அளவுக்கு வளர்வதற்கு அடித்தளமாக இருந்திருக்கிறது. அந்த நம்பிக்கையில்  நாம் ஒவ்வொருநாளும் வளா்வதற்கும், வளர்த்தெடு்ப்பதற்கும் அழைக்கப்படுகிறோம்.

உயிர்த்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை உள்ளத்தில் இருத்தி அவரது வார்த்தைகளை உள்வாங்கிக்கொண்டு உயிர்த்த ஆண்டவருக்கு சான்று பகரும் மனிதர்களாக மாறிட இறையருள் வேண்டி இணைந்து தொடர்ந்து இத்திருப்பலி வழியாக செபிப்போம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...