புதன், 20 ஏப்ரல், 2022

இறையாட்சியின் பணியினை முன்னெடுக்கும் மனிதர்களாக...(21.4.2022)

இறையாட்சியின் பணியினை முன்னெடுக்கும் மனிதர்களாக...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
கலங்கிய உள்ளத்தோடு இருந்த சீடர்களுக்கு, கலக்கத்தைப் போக்கும் வண்ணமாய் இயேசு அவர்கள்  மத்தியில் தோன்றி அவர்களது குழப்பத்தை சரி செய்வதை இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு வெளிப்படுத்துகின்றது.  
               இங்கும் அங்குமாக, ஒருவருக்கும் இருவருக்குமாக தோன்றிக் கொண்டிருந்த இறைவன் இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் பார்க்கின்றபோது, சீடர்கள் குழாம்  முழுவதற்குமாக காட்சி தருகின்றார்.  தன்னுடைய சீடர்கள் குழப்பத்தில் இருந்த போது அந்த குழப்பத்தை   போகக் கூடிய நபராக உயிர்ப்பு பற்றிய தெளிவினை அவர்களுக்கு விளக்கக் கூடியவராக இயேசு செயல்பட்டதை இன்றைய வாசகத்தில் நாம் வாசிக்க கேட்டோம்.  
              ஒரு மந்தையில் இருக்கின்ற நூறு ஆடுகளுள் ஒரு ஆடு காணாமல் தவறிப் போனால் தவறிப்போன ஒரு ஆட்டை ஒரு  நல்ல ஆயன் தேடிச் செல்வார் என இயேசு முன்மொழிந்த வார்த்தைகளின் அடிப்படையில்,  குழப்பத்தோடு இருந்த சீடர்கள் குழாம் முழுவதற்கும் குழப்பத்தை போக்கும் வண்ணம்,  வழிதவறியவர்கள் வாழ்வில் ஆண்டவரின் வாழ்க்கைப் பாதைக்கான தடத்தினை உணர்ந்து கொள்ளக்கூடிய வகையில்,  அவர்கள் மத்தியில் தோன்றி அவர்களுக்கு தெளிவைத் தந்து, அவர்களோடு உண்டு,  அவர்களுடைய அச்சத்தையும்,  கலக்கத்தையும்,  குழப்பத்தையும் நீக்கி, தெளிவுபடுத்தி அவர்களை இறையாட்சிப் பணி செய்வதற்கு தகுதி உள்ளவர்களாக மாற்றுகிறார். இந்த இறைவன் நமது வாழ்விலும் பல நேரங்களில் பல மனிதர்கள் வழியாக, நாம் குழம்பிய நேரங்களிலும்,  தயக்கத்தோடு தடுமாறுகின்ற நேரங்களிலும், நம் குழப்பத்தை நீக்குபவராக,  நம் தயக்கத்தை தகர்த்தெரியக்கூடிய நபராக செயல்படுகிறார்.

    இறைவன் அவ்வாறு செயல்படுகின்ற தருணங்களில், நம்மோடு உடன் இணைந்து பயணிக்கின்ற இறைவனின் உடனிருப்பை உணர்ந்து கொண்டவர்களாய், நாம் அச்சத்தையும் கலக்கத்தையும் தவிர்த்து,  ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய ஆழமான புரிதலில் நாளும் வளரவும்,  அதன் வழியாக இறைவன் விரும்பும் இறையாட்சியின் பணியினை முன்னெடுக்கும் மனிதர்களாக இந்த சமூகத்தில் தொடரவும் இறையருள் வேண்டி இணைந்து தொடர்ந்து இன்றைய நாள் திருப்பலி வழியாக  செபிப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...