வியாழன், 7 ஏப்ரல், 2022

கடவுளின் வார்த்தையைப் பெற்றுக் கொண்டவர்களே தெய்வங்கள் எனப்படுகிறார்கள்.....(8.4.2022)

கடவுளின் வார்த்தையைப் பெற்றுக் கொண்டவர்களே தெய்வங்கள் எனப்படுகிறார்கள்.

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். 
கடவுளின் வார்த்தையைப் பெற்றுக் கொண்டவர்கள் தெய்வங்கள் ஆகிறார்கள் என்று இன்றைய வாசகத்தில் இயேசு குறிப்பிடுகிறார்.

" வாக்கு மனிதர் ஆனார் நம்மிடையே குடிகொண்டார்" என்று யோவான் நற்செய்தியாளர் கூறுவது போல, நம் மத்தியில் குடிகொள்ள வந்த வார்த்தையான இறைவன், நாம் ஒவ்வொருவரும் அவரது தெய்வீக தன்மையில் பங்கு பெற வேண்டும் என விரும்புகிறார். 

இன்றைய முதல் வாசகத்தில், இறைவாக்கினர் எரேமியா உலகின் யதார்த்த நிலையை சுட்டிக் காட்டி, அவைகளின் மத்தியிலும் ஆண்டவரின் உடனிருப்பை உணர்த்துகிறார் . 

               சுற்றி இருக்கின்ற சூழல் திகிலை ஏற்படுத்தினாலும், மனிதர்கள் நம்மை தீமையிலும் பொறாமையிலும் வீழ்த்த நினைத்தாலும்,   இறைவன் இருக்கிற இடத்தில் அவரை வெற்றி கொள்ள யாருமில்லை. அவரே வலியவரின் கையினின்று வறியவரை மீட்கக் கூடியவர். 

       எனவே, இமைகள் மூடாது நம்மை கண்ணின் மணி போல காத்திடும் நம் இறைவனின் வார்த்தையில் ஆழமான நம்பிக்கை கொண்டவர்களாக, அவரது வார்த்தைகளை இதயத்தில் நிறைத்தவர்களாக, அவரது அன்பில் நம்மை இணைத்துக் கொண்டவர்களாக, அவரது தெய்வீக தன்மையில் நாமும் பங்கு பெற இறையருள் வேண்டி இணைந்து தொடர்ந்து இத்திருப்பலயில் செபிப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...