வியாழன், 25 மார்ச், 2021

செயலே சிறந்தது... (26.3.2021)

செயலே சிறந்தது...

செயல்பட துணிவு கொண்ட அன்பு நண்பர்களே...! வணக்கம். 

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்கின்றேன்.
எதையாவது செய்ய வேண்டும் என விரும்பினால் அதனை பற்றி பேசுவதைவிட முதலில் செயலில் இறங்குபவன் நான் என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப நாம் அனைவரும் செயல்பட இன்றைய வாசகங்கள் அழைப்பு தருகின்றன.

நமது செயல்களுக்கு ஏற்ற வகையில் தான் நமது நண்பர்களும் உறவுகளும் நம்மைச் சூழ்ந்து இருப்பார்கள் என்பதனை இன்றைய வாசகங்கள் வழியாக நாம் அறியலாம் இயேசுவின் செயல்கள் அனைவருக்கும் நலம் தரக்கூடிய வகையில் அமைந்திருந்தது. ஆனால் இயேசுவின் செயல்களில் குற்றம் காண வேண்டும் என்ற நோக்கத்தோடு அவரை ஏற்றுக்கொள்ள தயங்கும் சிலர் அவரோடு உரையாடுகிறார்கள். அவர்களுக்கு இயேசு தான் தந்தையிடம் இருந்து வந்தவர் தந்தையின் பணியை செய்பவர் என்பதை எடுத்துரைக்கிறார். ஏற்க மனமில்லாத அவர்களிடத்தில் என் வார்த்தைகளின் பொருட்டு என்னை நம்பவில்லை என்றாலும் என் செயல்களின் பொருட்டு என்னை நம்புங்கள் என்கிறார். பல நேரங்களில் மனிதர்கள் நம் பேச்சை விட நமது செயல்பாட்டை கொண்டு தான் நம் மீதான நம்பகத்தன்மையை உருவாக்கிக் கொள்கிறார்கள்.  

இன்று நாம் வாழும் இந்த உலகத்தில் நமது செயல்கள் அடுத்தவருக்கு  நம்பிக்கையை தருகிறதா? என்பதை சிந்திப்போம். நமது செயல்களால் நம்மைச் சுற்றியுள்ளவர்களின் நம்பிக்கைக்குரியவர்களாக இன்றைய நாளில் இறையருளை வேண்டுவோம்.

1 கருத்து:

  1. ஆண்டவர் இயேசுவுக்காக செயல் வீரர்களாக வாழ்வோம் என்று ஆர்வத்தோடு அழைக்கும்
    அருட்சகோதரர் சகாய ராஜ் அவர்களுக்கு நமது வாழ்த்துக்களும்! நன்றிகளும்!

    பதிலளிநீக்கு

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...