வெள்ளி, 26 மார்ச், 2021

சூழ்ச்சிகளுக்கு மத்தியில் சாட்சிகளாவோம்... (27.3.2021)

சூழ்ச்சிகளுக்கு மத்தியில் சாட்சிகளாவோம்...

அறம் செய்ய விரும்பும் அன்பர்களே வணக்கம் 

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
சூழ்ச்சிகள் நிறைந்த இவ்வுலகத்தில் நாம் ஒவ்வொருவருமே நமக்கான பாதையில் பயணம் செய்ய அழைக்கப்படுகின்றோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவை கொள்வதற்காக வழி தேடிக் கொண்டிருந்த பரிசேயர் சதுசேயர் குறித்து நாம் வாசிக்கின்றோம் ஏன் இவர்கள் இயேசுவை சதி செய்து கொலை செய்ய வேண்டும் என எண்ணுகிறார்கள் என சிந்திக்கும் பொழுது அவர்களின் சூழ்ச்சிகளுக்கு காரணமாய் இருப்பது இயேசு தன் பாணியில் தனது பணியை செய்து கொண்டிருப்பதுதான் என்பதை நாம் உணர்ந்து கொள்ள முடியும். இயேசு இம்மண்ணில் வாழ்ந்த போது அவர் போதித்த போதனைகளுக்கு ஏற்றவகையில் சென்ற இடமெல்லாம் நல்லதை செய்து கொண்டு இறைவனது திட்டம் எது என்பதை அறிவித்தவர் ஆய் இறையாட்சிக்கு வடிவம் கொடுத்தவர் தனது வாழ்வை அமைத்துக் கொண்டு சென்றார் இதனை ஏற்றுக்கொள்ள இயலாத அப்போது மக்களை அடிமைப்படுத்தி கசக்கிக் கொண்டிருந்த பல அதிகார வர்க்கத்தினருக்கு இயேசுவின் செயல் பேரிடியாக இருந்தது எனவே தான் பலரும் சூழ்ச்சி செய்து இயேசுவை குற்றவாளியாக சித்தரித்து அவருக்கு மரண தண்டனை விதிப்பதற்கு இன்று வழி தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் நற்செய்தியில் வாசிக்கின்றோம்.

நமது வாழ்விலும் பல நேரங்களில் நாம் நலமான நல்ல பணிகளை முன்னெடுத்துச் செல்லும் பொழுது பலரின் நகைப்புக்கு பலரின் பகைக்கும் காரணமாக மாறலாம். ஆனால் நாம் செய்கின்ற பணி நலமான பணி அது அடுத்தவருக்கு நலன் தருகின்ற பணி என்றால் அதனை இயேசுவைப் போல தொடர்ந்து முன்னெடுத்து சோதனைகளை எதிர்கொண்டு சூழ்ச்சிகளுக்கு மத்தியில் சாதனை புரியக்கூடிய சாட்சிகளாக இயேசுவின் சாட்சிகளாக மாறிட நாம் அனைவரும்  வாசகங்கள் வழியாகஅழைக்கப்படுகிறோம் .

சூழ்ச்சிகள் பல செய்து நம்மை வீழ்த்த எண்ணி நாளும் நாம் சாட்சிகளாய் வாழ இறையருளை வேண்டி இன்றைய நாளில் தொடர்ந்து பயணிப்போம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...