திங்கள், 29 மார்ச், 2021

வார்த்தை அல்ல வாழ்வே சொல்ல வேண்டும்.... (30.3.2021)

வார்த்தை அல்ல வாழ்வே சொல்ல வேண்டும்.... 

இயேசுவின் பணியை செய்ய விரும்பும் அன்பர்களே...! வணக்கம்.

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய வாசகங்கள் அனைத்தும் நாம் இயேசுவின் சீடர்களாக வாழ்வதற்கு அழைப்பு தருகின்றது. இயேசுவின் சீடராவது மிகவும் எளிதான காரியம்தான், அவருடைய கருத்துக்களின் படி, அவருடைய போதனைகளின் படி நமது வாழ்வை அமைத்துக் கொள்ளும்போது நாம் இயேசுவின் சீடர்களாக இருக்க முடியும். ஆனால் இயேசுவின் சீடராக வாழ முடியுமா? என்பதுதான் இன்று நம்முன் இருக்கக்கூடிய கேள்வியாக உள்ளது.

இயேசுவோடு இருந்த சீடர்கள் எல்லாம் இயேசுவைப் போல வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டு இருந்தார்கள் ஆனால் வாழவில்லை என்பதனை இன்றைய வாசகங்கள் நமக்கு வெளிப்படுத்திக் காட்டுகின்றன. 
இயேசுவினுடைய இறப்புக்கு முன்பாக இயேசுவோடு பயணித்த ஒவ்வொருவருமே தங்களுடைய விருப்பங்களை மனதில் சுமந்து கொண்டு  செயல்பட்டார்கள்.  ஒருவர் பணத்தின் மீது ஆசை கொண்டவராய் பயணிக்கின்றார். சிலர் பதவியின் மீது ஆசை கொண்டவர்களாக பயணிக்கிறார்கள். சிலர் நான் உன்னை எப்போதுமே மறுதலிக்க மாட்டேன்.... எப்போதும் நீ எனக்கு முதன்மை... எனக் கூறியவர்கள் கூட  சந்தர்ப்பமும் சூழ்நிலையும் மாறும்  போது ஒவ்வொருவரும் மாறி போனார்கள். இதைத்தான் இன்றைய வாசகங்கள்  மிகவும் தெளிவாக எடுத்துரைக்கின்றன.
இன்றைய முதல் வாசகம் கூட ஆண்டவரின் ஊழியராக இருக்க நம்மை அழைக்கின்றது. அவரின் சீடராக இருப்பது எளிதான காரியம் ஆனால் ஆண்டவர் இயேசுவின் சீடராக வாழ்வதுதான் என்று இன்று நம் முன் இருக்கக்கூடிய மிகப்பெரிய சவாலாக உள்ளது. இயேசுவோடு இருந்தவரை வெறும் வார்த்தைகளால் அவரின் சீடர்கள் நாங்கள் எனக் கூறிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம்.... இயேசுவின் உயிர்ப்பு பிறகு புத்துயிர் பெற்றவர்களாக..., புத்துணர்வு கொண்டவர்களாக.... உண்மையை எடுத்துரைக்க கூடிய, நீதியின் பங்காளிகளாக மாறி இயேசுவின் பணியை முன்னெடுத்துச் சென்று இயேசுவின் சீடர்கள் நாங்கள் என்பதை தங்கள் வார்த்தைகளால் அல்ல தங்களின் வாழ்வால் வெளி காட்டினார்கள்....

இன்றைய நாளில் நாமும் வெறும் வார்த்தைகளால் அல்ல நமது வாழ்வு வழியாக நாம் ஆண்டவர் இயேசுவின் சீடர்கள் என்பதை வெளிகாட்டிட அழைக்கப்படுகிறோம். எனவே இன்று நாம் வாழக்கூடிய இந்த பரபரப்பான உலகத்தில் அனுதினமும் அழிந்து கொண்டிருக்கக்கூடிய மனிதநேயத்தை மனதில் கொண்டு, மனிதநேய செயல்களை முன்னெடுப்பதன் மூலம் நீதிக்காகவும்.... உண்மைக்காகவும்.... தேவையில் இருப்போரின் தேவையை நிவர்த்தி செய்யக்கூடிய.... நல்ல ஒரு மனிதநேயம் கொண்ட மனிதர்களாக இம்மண்ணில் வாழ்ந்து,  நமது வாழ்வு வழியாக நாம் ஆண்டவர் இயேசுவின் உண்மை சீடர்கள் என்பதை வெளிகாட்டிட இன்றைய நாளில் உள்ளத்தில் உறுதி ஏற்றவர்களாக.... இறையருளை வேண்டி தொடர்ந்து பயணிப்போம்...

வார்த்தைகளால் நாம் இயேசுவின் சீடர்கள் என்பதை விட வாழ்வால் வெளிக்காட்டுவோம்.

1 கருத்து:

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...