சனி, 27 மார்ச், 2021

பக்கபலமாவோம்.... (28.3.2021)

பக்கபலமாவோம்....

சமூகத்தில் இணைந்து வாழும் இனியவர்களே...! வணக்கம்.

இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்கின்றேன்.

எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் ....திரும்பும் திசை எங்கும் இதோ உங்கள் வெற்றி வேட்பாளர் வந்து கொண்டிருக்கிறார் என்ற குரலோசை ....யார் வந்தாலும் ஆரத்தி எடுக்க வேண்டும் அப்போதுதான் 200 ரூபாய் கிடைக்கும் என்ற நோக்கத்தோடு சாலையில் ஆரத்தி தட்டுகளோடு மகளிர்.... கூட்டத்திற்கு சென்றால் குடிக்க மது கிடைக்கும் என்ற நோக்கத்தோடு பல ஆண்கள் .....இவைகளுக்கு மத்தியில் இயேசு பாடுகளை எதிர்கொள்ளப் போகிறார் என்பதை வலியுறுத்தும் வகையில் மக்கள் கூட்டம் கையில் குரு தோலைகளுடன் ஒருபுறம் பவனி செல்கின்றனர் ஆலயம் நோக்கி....தேர்தல் வந்தால் வாக்குறுதிகளை அள்ளி தெளிப்பது போல ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்காக இந்த ஆரவார பவனியில் பலர் தாவீதின் மகனுக்கு ஓசான்னா என்று குரல் எழுப்பியவர்களாய் ஆண்டவர் வெற்றிபெற போகின்றார் அவர் வாழ்க வாழ்க என கத்திக் கொண்டு சென்ற ஒரு கூட்டம் ...ஆனால் வெகு விரைவிலேயே அந்தக் கூட்டத்தினர் இணைந்து இவன் ஒழிக ஒழிக சிலுவையில் இவனை அறையும் என கத்தினார்கள். இதையே இன்றைய வாசகத்தில் நாம்  வாசிக்க கேட்கின்றோம். 
எனது கல்லூரி ஆசிரியர்  திரு. செல்வராஜ் ஐயா அவர்கள்  என்னிடம் கூறுவார் அடிக்கடி ஒருவரை கைதட்டி உயர்த்துவதும் நீங்கள்தான் ஒருவரை கைதட்டி தாழ்த்துவதும் நீங்கள்தான் என்று அவர் கூறிய வார்த்தைகளுக்கு அன்று பெரியதாக அர்த்தம் புரியவில்லை. ஆனால் இன்று இந்த பவனி வழியாக ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த நிகழ்வை சித்தரிக்கும் போது தான் புரிகிறது இவ்வார்த்தைகளின் அர்த்தம் என்னவென்று...

ஒருவிதத்தில் இதனை அறியாமையின் குரல் என எண்ணலாம் ...ஆனால் விழிப்போடு இருக்க இன்றைய நாள் வாசகங்கள் அழைப்புக் தருகின்றன ... நல்லதைச் சொன்னதற்காக இயேசு  குற்றவாளியாக சித்தரிக்கப்படுகிறார் பலரின் சூழ்ச்சியால் ... ஆனால் இன்று  பவனி வந்தது போல் நாம் பவனி வந்தது போல அன்று இயேசுவோடு  பவனி வந்த மக்கள் கூட்டம் ஏராளம்... இவர்கள் எல்லாம் எங்கே சென்றார்கள்? இயேசுவை குற்றவாளியாகக் ஏற்படும்போது என சிந்திக்க நாம் அழைக்கப்படுகிறோம்.

நம்மோடு இருப்பவர்கள் எல்லாம் எப்போதும் நம்மோடு இருப்பார்கள் என்பது அல்ல. நேரத்திற்கும் சூழலுக்கும் ஏற்றவாறு நம்மை விட்டு விலகிச் செல்லக் கூடியவர்கள் தான் மனிதர்கள். இதனை இயேசுவும் நன்கு அறிந்திருந்தார்.    எனவேதான் இயேசு தான் சென்ற இடமெல்லாம் நல்லது செய்வது  இறைவன் தனக்குத் தந்த பணி என எண்ணி அதனை தொடர்ந்து செய்தார்.அவரிடம் இருந்து நன்மைகளை பெற்றவர்கள் கூட அவரை விட்டுவிட்டு ஓடுவார்கள் என்பதை நன்கு அறிந்து செயல்பட்டால் இன்று நாம் வாழும் இவ்வுலகத்திலும் நாம் நல்லது செய்யும் பொழுது அடுத்தவர் நம்மோடு இருப்பார்கள் நம்மை புரிந்து கொள்வார்கள் என்ற எண்ணங்களின் அடிப்படையில் எதையும் முன் எடுக்காமல் இறைவனை மையமாகக்கொண்டு கிடைக்கக்கூடிய அனைத்து செயல்களிலும் மனிதநேயத்தை மனதில்  முன் நிறுத்தி  தொடர்ந்து மக்களுக்கு பணி செய்யக்கூடிய மகத்துவமான மனிதர்களாக நாம் உருவாக அழைக்கப்படுகிறோம். வெறுமனே தேர்தல் நேரங்களில் வாக்குறுதிகளை மட்டும் கொடுக்கும் மனிதர்களாக அல்லாமல் சொல்லானது செயலாக்க கூடியவகையில் சொல்வதை  செய்யக்கூடியவர்களாகவும், நலமான பணிகளை முன்னெடுக்கும் நல்லவர்களுக்கு  எப்போதும் அவர்களை கைவிட்டு விடாது பக்கபலமாக இருக்க கூடியவர்களாகவும் உருவாகிட இன்றைய நாளில் இறையருளை வேண்டுவோம். 

1 கருத்து:

  1. தொடக்கமே அருமை சகோ.. 👏👏👍
    நன்று.. 👌
    குருத்தோலை ஞாயிறு வாழ்த்துகள்.. 🙏

    பதிலளிநீக்கு

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...