ஞாயிறு, 31 அக்டோபர், 2021
புனிதர் அனைவர் பெருவிழா(1.11.2021)
சனி, 30 அக்டோபர், 2021
அன்பு செய்து வாழ்வதே நம் இலக்கு ...(31.10.2021)
வெள்ளி, 29 அக்டோபர், 2021
முதன்மையான இடம் பெறுவதா? தரப்படுவதா? (30.10.2021)
வியாழன், 28 அக்டோபர், 2021
நன்மை செய்து வாழ்வோம் ...29.10.2021
புதன், 27 அக்டோபர், 2021
திருத்தூதர்களின் பாதையில் பயணிக்க ...(28.10.2021)
செவ்வாய், 26 அக்டோபர், 2021
துணையாளரை கண்டுகொண்டு துணிவு பெற்று வாழ்வோம்.(27.10.2021)
ஞாயிறு, 24 அக்டோபர், 2021
இறையாட்சி மலர்வது நம் செயல்களால் தான் ...(26.10.2021)
தூய ஆவியாரால் இயக்கப்படும் மக்களாவோம்...(25.10.2021)
வெள்ளி, 22 அக்டோபர், 2021
நம்பிக்கையின் மனிதர்களாக பிறந்திட ...(24.10.2021)
வியாழன், 21 அக்டோபர், 2021
கனிகளால் கடவுளோடு இணைந்திடுவோம் ... (23.10.2021)
புதன், 20 அக்டோபர், 2021
தன்னையறிதல் பலவீனத்தை பலமாக மாற்றும் ....(22.10.2021)
தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடு
சம்பாத்யம் இவையுண்டு தானுண் டென்போன் சின்னதொரு கடுகுபோல் உள்ளங் கொண்டோன்..... என குறிப்பிடுகின்றார்.
இன்றைய நாள் வாசகங்கள் அனைத்தும் நாம் எத்தகைய (எண்ணம் கொண்டவர்களாக) உள்ளம் கொண்டவர்களாக இருக்கின்றோம் என்பதை சுய ஆய்வு செய்து பார்க்க நம்மை அழைக்கின்றன.
உன்னையறிந்தால்....
நீ உன்னையறிந்தால் .....
உலகத்தில் போராடலாம்....
என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப
நம்மை பற்றிய ஆழமான அறிவே நம்மைப் போலவே மற்றவரும் என அடுத்தவரை அறிந்து கொள்வதற்கான வழியாக அமைகிறது. திருத்தூதர் பவுல் தன்னை அறிந்திருந்தார். தன் எண்ண ஓட்டத்தை சீர் தூக்கி பார்த்தார். அதன் விளைவு ஆண்டவர் இயேசுவின் பாதையில் சிறப்பான சீடராக மாறினார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
இன்று நாமும் நம்மை சுய ஆய்வு செய்து நமது பலவீனங்களுக்கு மத்தியில் நாம் ஆண்டவர் இயேசுவின் சீடர்களாக விளங்கிட அவரது அருளைப் பெற்றிட இன்றைய நாள் வாசகங்கள் நமக்கு அழைப்பு தருகின்றன.
நமது செயல்களையும், சிந்தனையையும் சீர்தூக்கி பார்ப்பதன் அடிப்படையில் தேவையற்ற வாதங்கள், தேவையற்ற சண்டைகள், தேவையற்ற சச்சரவுகள், இவைகளையெல்லாம் முளையிலேயே கிள்ளி எரிவதற்கான ஆற்றலை நாம் பெற்றுக்கொள்ள முடியும். இவைகளை சரிசெய்து கொண்டு நாம் இச்சமூகத்தில் பயணிக்கின்ற போது நலமான நல்ல பணிகளை திருத்தூதர் பவுலைப் போல முன்னெடுத்துச் செல்ல முடியும்.
மண்ணில் வாழுகின்ற நாட்களில் வஞ்சகத்தை மனதில் வளர்த்திக்கொண்டு, உறவுகளை விட்டு பிரிந்து நின்று வாழ்வதைவிட, கருத்து வேறுபாடுகளையும், சண்டை சச்சரவுகளையும் சரி செய்துகொண்டு ஆண்டவர் இயேசுவின் பாதையில் நம்மை முழுமையாக அறிந்தவர்களாய் இந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை அறிய கூடியவர்களாக மாறிட இறைவனது அருளை இன்றைய நாளில் தொடர்ந்து வேண்டுவோம்...
செவ்வாய், 19 அக்டோபர், 2021
தூய வாழ்வு நிலை வாழ்வுக்கு வழிவகுக்கும்...(21.10.2021)
திங்கள், 18 அக்டோபர், 2021
உங்கள் குரல் கேட்கப்படும்....( செபம்) (24.10.2021)
விருப்பப்படி வாழ அல்ல அவர் (இயேசு) விரும்பும்படி வாழவே...(20.10.2021)
விழிப்போடு செயல்பட....(19.10.2021)
ஞாயிறு, 17 அக்டோபர், 2021
இயேசுவின் பணியைசெய்ய....(17.10.2021)
சனி, 16 அக்டோபர், 2021
இயேசுவின் பாதையில்....(17.10.2021)
வெள்ளி, 15 அக்டோபர், 2021
எதிலும் நம்பி கை வைக்க என்ன தேவை ?...(16.10.2021)
வியாழன், 14 அக்டோபர், 2021
இந்த உலகத்தில் நிலையானது எது? (15.10.2021)
இந்த உலகத்தில் நிலையானது எது?
கடவுள் ஒருவரே. அவர் ஒருவரையே பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். அவர் ஒருவருக்கே அஞ்சுங்கள், என்ற செய்திதான் இன்றைய வாசகங்களின் மையமாக நமக்கு தரப்படுகிறது.
ஒரு மயில் இறகு ஒன்று காற்றில் பறந்து வந்தது. அது ஒரு ஓவியனுடைய கையில் கிடைத்தது. அந்த ஓவியன் அதை எடுத்து ஒரு அழகிய படத்தை அதை பயன்படுத்தி வரைந்தான். பின்னர் அந்த மயில் இறகு மீண்டும் காற்றில் பறந்து வந்து ஒரு மருத்துவனுடைய கையில் கிடைத்தது. அதை எடுத்து அவன் எண்ணெயை தொட்டு காயத்திற்கு மருந்திட்டான். அதே மயிலிறகு மீண்டும் காற்றில் பறந்து சென்றது. இறுதியில் அது ஒரு இளைஞனுடைய கையில் கிடைத்தது. அவன் அதில் சில பகுதிகளை சரிசெய்து தனது காதுகளைக் குடைந்து கொண்டான்.
ஒரே இறகு தான், ஆனால் அதனை ஒவ்வொருவரும் பயன்படுத்திய விதம் வெவ்வேறாக இருந்தது. ஆண்டவர் ஒருவரே. அந்த ஆண்டவர் ஒருவருக்கே நாம் இந்த சமூகத்தில் அஞ்ச வேண்டும். அவர் ஒருவரையே நாம் ஆழமாக் பற்றிப் பிடித்துக்கொள்ள வேண்டும். அவரைப் பற்றிப் பிடித்துக் கொண்டு இந்த சமூகத்தில் நாம் நலமான நல்ல பணிகளைச் செய்ய வேண்டும். இந்த ஆண்டவர் எங்கோ இருப்பவர் அல்ல. இவர் எப்போதும் நம்மோடு இருப்பவர்.
இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்” என்ற மத்தேயு 28:20, இறைவார்த்தைகளுக்கு ஏற்ப, எப்போதும் நம்மோடு இருப்பவர். நூம் அஞ்ச வேண்டியதும் அவர் ஒருவருக்கு மட்டுமே. அஞ்ச வேண்டிய ஆண்டவரை விட்டுவிட்டு இந்த அகிலத்தில் இருக்கக்கூடிய அதிகாரிகளுக்கு அஞ்சி அவர்களின் வழியில் நடக்கக் கூடியவர்களாக தான் பல நேரங்களில் நாம் இம்மண்ணில் இழந்து கொண்டிருக்கிறோம். ஆனால் இன்றைய முதல் வாசகத்தில் கூட ஆண்டவரை மட்டும் மனதிறக் கொண்டு நம்பிக்கையோடு தன் பணயத்தை மேற்கொண்ட ஆபிரகாமை ஆண்டவர் நீதியோடு நோக்கினார் என்று பவுல் சுட்டிக்காட்டுகிறார்.
நாம் வாழும் இவ்வுலகத்தில் பொதுவாக இந்தச் சமூகத்தில் தீமைகள் வளர்வதற்கான காரணம் தீமை செய்வோர் தீமை செய்து கொண்டே இருக்கிறார்கள் என்பதற்காக மட்டுமல்ல மாறாக நல்லவர்கள் பலரின் மௌனமும் தேவையற்ற அச்சமுமே காரணம் என்பார்கள். இன்றைய நற்செய்தி வாசகம் நாம் அஞ்ச வேண்டியது ஆண்டவருக்கு மட்டுமே என்பதை எடுத்துரைப்பதன் வழியாக தேவையற்ற அச்சங்களை கலைந்து எப்போதும் நம்மோடு எல்லாச்சூழலிலும் உடனிருக்கும் ஆண்டவரை மனதிற் கொண்டு துணிவோடு வாழ அழைப்பு தருகிறது.
இந்த இறைவனை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம்? இந்த இறைவனை பயன்படுத்தி இந்த சமூகத்தில் நல்ல செயல்களைச் செய்கிறோமா? அல்லது அவரைக் கண்டும் காணாமல் நகர்ந்து செல்கிறோமா? அல்லது நமது தேவைக்கு மட்டும் அவரை பயன்படுத்தக் கூடியவர்களாக இருக்கின்றோமா? கேள்வி உங்கள் முன்னால். பதில்களை நீங்களே சுய ஆய்வு செய்து, தெரிந்து கொள்ளுங்கள். இனி வருகின்ற நாட்களில் நம்மோடு என்றும் இருக்கும் இறைவனை உணர்ந்துக் கொண்டு, இச்சமூகத்தில் நலமான பணிகளை முன்னெடுக்க, இறையருளை வேண்டி இந்த திருப்பலியில் தொடர்ந்து செபிப்போம்.
அச்சம் நம்பிக்கையை மறைக்கிறது ... (15.10.2021)
புதன், 13 அக்டோபர், 2021
ஆண்டவருக்கு ஏற்புடையவராக...(14.10.2021)
செவ்வாய், 12 அக்டோபர், 2021
நமது மனம் பரிசேயர்களின் மனதை போன்றதா? ....(13.10.2021)
புனித மார்த்தா விழா! ( 29-7-2024)
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...
-
மன்றாட்டுகள் 1) அன்புத்தந்தையே இறைவா உம் திருஉடலாம் திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், கன்னியர், துறவறத்தார் மற்ற...
-
செபம்: உன்னதங்களிலே உன்னதங்களிலே கடவுளுக்கு மாட்சி உண்டாகுக. உலகினிலே நன்மனத்தோருக்கு அமைதி ஆகுக. உம்மைப் புகழ்கின்றோம். உம்ம...