வியாழன், 30 ஜூன், 2022
பலியை விட இரக்கமே கடவுள் விரும்புவது....(1.7.2022)
புதன், 29 ஜூன், 2022
இயேசுவின் பணியை செய்வதில் நிலைத்திருக்க...(30.6.2022)
திங்கள், 27 ஜூன், 2022
நம்பிக்கையோடு தொடர...(28.6.2022)
ஞாயிறு, 26 ஜூன், 2022
அன்னை மரியாவின் திரு இருதயம்...(25.6.2022)
இயேசுவைப் பின்பற்ற....(27.6.2022)
ஆண்டவருக்கு உகந்த ஒரு வாழ்க்கை வாழ....(26.6.2022)
வியாழன், 23 ஜூன், 2022
திரு இருதய பெருவிழா....(24.06.2022)
புதன், 22 ஜூன், 2022
இறைவனுக்கு ஊழியம் புரிகின்ற மனிதர்களாகிட....(23.6.2022)
செவ்வாய், 21 ஜூன், 2022
நமது செயல்களே சான்று....(22.6.2022)
திங்கள், 20 ஜூன், 2022
நம் எண்ணங்கள் பிறருக்கு நலம் தரட்டும்....(21.06.2022)
ஞாயிறு, 19 ஜூன், 2022
கற்பித்தவற்றை கடைபிடிப்போம்...(21.6.2022)
சனி, 18 ஜூன், 2022
கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழா (19.6.2022)
வெள்ளி, 17 ஜூன், 2022
செல்வமா...? இறைவனா...?(18.6.2022)
வியாழன், 16 ஜூன், 2022
விண்ணகச் செல்வத்தை நாட...(17.6.2022)
புதன், 15 ஜூன், 2022
இறைவனோடு உரையாட...(16.6.2022)
செவ்வாய், 14 ஜூன், 2022
இறைவனா?... மனிதனா...?(15.6.2022)
திங்கள், 13 ஜூன், 2022
இரக்கம் காட்ட...(14.6.2022)
ஞாயிறு, 12 ஜூன், 2022
மன்னிப்பே மகத்துவம்....(12. 6.2022)
மன்னிப்பே மகத்துவம்....
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
ஆகாபு அரசன் நாபோத்தின் நிலத்தை உரிமையாக்கிக் கொள்ள விரும்பி அதை அடைய முயன்றதையும், ஆகாபின் மனைவி ஈசபெல் நயவஞ்சகத்தால் நாபோத்தைக் கொன்று அந்த நிலத்தை தன் கணவனுக்கு உரிமையாக கொடுத்ததையும் நாபோத்து என்ற ஏழைக்கு இழைக்கப்பட்ட அநீதியை குறித்தும் இன்றைய முதல் வாசகம் எடுத்துரைக்கிறது
இன்றைய நற்செய்தி வாசகத்தில் கண்ணுக்கு கண்’, ‘பல்லுக்குப்பல்’ என்ற சட்டங்கள் இருந்தாலும், பழைய ஏற்பாட்டு காலத்தில் அதுமுறையாகப் புரிந்து கொள்ளப்படவில்லை .... சட்டத்தின் நோக்கம் பாதிக்கப்பட்டவருக்கு முழு நீதி கிடைக்க வேண்டும் என்கிற கருத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு தான் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டது. குற்றம் இழைத்தவருக்கு வெறுமனே தண்டனை கொடுப்பது மட்டும் சட்டமாக இருக்கவில்லை. மாறாக, குற்றம் இழைத்தவர் 5 வகைகளில் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு செய்ய வேண்டும்.
காயத்திற்கு,
அதனால் ஏற்பட்ட வலிக்கு,
மருத்துவ செலவிற்கு,
இந்த காலகட்டத்தில் வேலைக்கு செல்ல முடியாததால் ஏற்படும் இழப்பிற்கு
இந்த சமுதாயத்தில் அவர் இழந்த மாண்பிற்கு
என இவை அனைத்திற்கு சேர்த்து குற்றம் செய்தவர் இழப்பீடு தர வேண்டும்.
இந்த அடிப்படையில் நீதியை தழைத்தோங்கச்செய்வதற்காகவே இந்த சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
இயேசு இதையும் தாண்டி இன்னும் ஒருபடி மேலே சென்று, மன்னிப்பை முன்னிறுத்துகிறார். அன்பை வெளிப்படுத்த அறிவுறுத்துகிறார்.
எத்தகைய இழப்பையும் அன்பால் மட்டும்தான் இழப்பீடு செய்ய முடியும் என்பது இயேசு நமக்கு வெளிப்படுத்தும் பாடம். நமக்கு துன்பம் தருகிற மனிதர்களையும் மன்னித்து ஏற்றுக் கொண்டு அவர்களை அன்பு செய்து வாழ இன்றைய நாளில் இறைவன் அழைப்பு தருகிறார் இறைவனின் அழைப்பை உணர்ந்து கொண்டு நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொள்வோம் ...
எண்ணங்கள் சிறக்க வேண்டும்(10.6.2022)
சனி, 11 ஜூன், 2022
மூவொரு கடவுளின் திருவிழா....(12.6.2022)
வெள்ளி, 10 ஜூன், 2022
கிறிஸ்துவை ஏற்றவர்கள் நாம் என்பதை செயலில் காட்டுவோம்(11.6.2022)
வியாழன், 9 ஜூன், 2022
எண்ணங்கள் சிறக்க வேண்டும்(10.6.2022)
புதன், 8 ஜூன், 2022
உடன்பிறப்புகளோடு இணைந்த வாழ்வு...(9.6.2022)
செவ்வாய், 7 ஜூன், 2022
கடவுளின் திருவுளத்தை அறிவதே திருச்சட்டம்....(8.6.2022)
கடவுளின் திருவுளத்தை அறிவதே திருச்சட்டம்....
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எலியா உண்மையான தெய்வம் யார்? யாவே இறைவனா? அல்லது பாகால் தெய்வமா? என்ற வகையில் அவர் மெய்யான தெய்வத்தை உணர்ந்து கொள்ள தான் கொண்டிருந்த நம்பிக்கையின் அடிப்படையில் நிரூபிக்க முயலுகிறார்கள் அதில் வெற்றியும் கண்கிறார். வரலாற்றின் அடிப்படையில் இந்நிகழ்வு நிகழ்ந்ததா? இல்லையா? என்ற கேள்வியை எழுப்புகிறது. மதத்தின் பெயரால் பரப்பப்பட்ட பல தப்பறை கொள்கைகளுக்கு கொள்கைகளுக்கு மாற்றாக யாவே இறைவனை வழிபட கூடியவர்கள் இருந்தார்கள் என்பதுதான் உண்மை. எனவே தான் உண்மையான இறைவனை நிரூபிக்க அவர்களால் இயன்றது. இன்றும் இந்த நிகழ்வு நிகழ்ந்த இடமாக கார்மேல் மலை அடையாளம் காட்டப்படுகிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து திரு சட்டத்தை நிறைவேற்றுவதற்காக உலகத்திற்கு வந்ததாக, இயேசு சொல்கிறார்.
திருச்சட்டம் என்பது மோசே வழியாக மக்களுக்கு கொடுக்கப்பட்ட சட்டங்களை குறிக்கும்.
இத்திருச்சட்டம் என்கிற மோசேயின் சட்டத்தினை, கடவுள் கொடுத்திருந்தாலும், அதனுடைய முழுமையான புரிதல், அதனை விளக்கக்கூடிய பரிசேயர்களுக்கும், சதுசேயர்களுக்கும், மறைநூல் அறிஞர்களுக்கும் இல்லை. அவர்கள் அதனை தவறாகத்தான் மக்களுக்குப் போதித்தார்கள். அதனுடைய உண்மையான அர்த்தத்தை போதிக்கவில்லை. ஆனால், இயேசு அந்த புரிதலை தனது போதனையின் மூலமாக முழுமைப்படுத்துகிறார். அந்த முழுமையை, உண்மையென பரிசேயர்களாலும், மற்றவர்களாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
திருச்சட்டம் பற்றிய இயேசுவின் பார்வை... நாம் எதைச்செய்தாலும் கடவுளின் பார்வையில் இருந்து செய்ய வேண்டும். அவரின் திருவுளத்திற்கு ஏற்றதா? என்று ஆராய்ந்து செய்ய வேண்டும்.
இந்த இறைவார்த்தை பகுதி வழியாக இறைவன் இன்று நமக்குத் தருகின்ற வாழ்வுக்கான பாடம் அனுதினமும் நாம் செய்கின்ற ஒவ்வொரு செயல்களும் இந்த இறைவனின் திருவுளத்திற்க்கு ஏற்ற செயல்களா? என்ற கேள்வியை எழுப்பி பார்க்க நமக்கு அழைப்பு தருகிறது. நமது செயல்கள் அனைத்துமே கடவுளுக்கு ஏற்றது என நாம் எண்ணுகிறோம் என்றால் இறைவனுக்கு தொடர்ந்து நன்றி கூறவும் ஒருவேளை நமது செயல்களில் பல நேரங்களில் கடவுளின் திருவுளம் செயல்படுவது போல இல்லை என்ற எண்ணம் இதயத்தில் உருவாகிறது என்றால் இனி வருகின்ற நாட்களில் கடவுளின் திருவுளம் எது என்பதை அறிந்து செயல்படுகின்ற மனிதர்களாகிட இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம் ....
நமது இதயத்தை எண்ணங்களை ஆய்ந்து அறிகின்ற இறைவன் நம்மை நல் வழி நடத்துவார் எனும் நம்பிக்கையோடு இன்றைய நாளை இனிய நாளாக தூங்குவோம் ...
திங்கள், 6 ஜூன், 2022
நமது வாழ்வு அடுத்தவருக்கு பயன் தரவே...(7.6.2022)
உலகிற்கு உப்பாக இருப்பதற்கு இயேசு நமக்கு அழைப்புவிடுக்கிறார். உப்பு உவர்ப்பற்று போனால், அது வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும் என்றும் இயேசு கூறுகிறார்.
இயேசு என்ன அர்த்தத்தில் இங்கே சொல்கிறார் என சிந்திக்கும் போது? பாலஸ்தீனத்தில் பொதுவாக சாதாரண ஏழை மக்களின் வீடுகளிலும், வீட்டிற்கு வெளியே ஓடுகள் பதித்த அடுப்புகள் காணப்படும். இந்த அடுப்பில் சூடு இருக்க தங்கியிருக்க வேண்டும் என்பதற்காக, அடுப்பின் அடியில் ஓட்டிற்கு கீழே உப்பு கொட்டப்பட்டு, அதன் மேல்தான் ஓடுகள் பதிக்கப்படும். ஏனென்றால், உப்பு வெப்பத்தை அதிகநேரம் தக்கவைக்கும் தன்மையுடையது. குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு, அந்த உப்பு, வெப்பத்தை தாங்கும் ஆற்றலை இழந்துவிடும். அப்போது, அது வெளியே எடுக்கப்பட்டு, கொட்டப்படும். இயேசு இந்த பிண்ணனியில், உப்பைப்பற்றிச்சொல்லியிருக்கலாம்.
அதுப்போலவே “மிதிபடும்“ என்கிற வார்த்தை பாலஸ்தீனத்தில் வாழ்ந்த யூதர்களிடையே . யூதநம்பிக்கையை கைவிட்டு, வேறு தெய்வத்தை வணங்கிவிட்டு, மீண்டும் தாய்மதத்திற்கு திரும்பும் யூதர்களுக்கு, மனம்மாறியதற்கு அடையாளமாக, தாய்மதத்திற்கு திரும்பிய யூதர், தொழுகைக்கூடத்தின் நுழைவாயிலில், மக்கள் நுழையும் வாயிலருகில், நெடுஞ்சாண்கிடையாக படுத்துக்கிடக்க வேண்டும். தொழுகைக்கூடத்திற்கு வரும் மக்கள் அவர் மீது மிதித்துச்செல்வர். இதனுடைய பொருள்: நம்பிக்கைக்குரிய வாழ்வை வாழ மறுத்த என்னை தண்டியுங்கள் என்பதாகும். இந்த பிண்ணனியில், இயேசு இந்த உவமையைச் சொல்லியிருக்கலாம்.
மொத்தத்தில் கிறிஸ்தவ வாழ்க்கை என்பது மற்றவர்களுக்கு பயன்தரக்கூடிய வாழ்க்கை. சாரிபாத்தில் வாழ்ந்த ஏழைக் கைம்பெண் தனக்கும் தன் பிள்ளைக்கும் அடுத்த வேலைக்கு வழியில்லை என்ற நிலையிலும் கூட இறைவாக்கினரின் வார்த்தைகளை இதயத்திலிருந்து அவரின் பசியைப் போக்க முயன்றார் ஆண்டவரும் அவரது வாழ்வில் புதுமை நிகழச் செய்தார் என முதல் வாசகத்தில் நம் வாசிக்க கேட்டோம். மற்றவர்களுக்கு உதவும் நோக்கில் நமது வாழ்வு அமைகிறது என்றால் நமது வாழ்வு மலைமீது உள்ள நகர் போலவும், உப்பாகவும், விளக்குத் தண்டின் மீது வைக்கப்பட்ட விளக்கு போலவும் பலருக்கு பயன் தரும் இத்தகைய வாழ்வை நமது வாழ்வாக்கி கொள்ள இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம் இன்றைய நாளில்....
ஞாயிறு, 5 ஜூன், 2022
திருச்சபையை வழிநடத்தும் அன்னை....(6.6.2022)
சனி, 4 ஜூன், 2022
வாக்கு மாறாதவர் கடவுள்...(5.6.2022)
வெள்ளி, 3 ஜூன், 2022
சாட்சிய வாழ்வு வாழ.....(4.6.2022)
புதன், 1 ஜூன், 2022
நமது செயல்கள் மூலம் வெளிகாட்ட ...(3.6.2022)
எல்லோரும் இணைந்த வாழ்வு...(2.6.2022)
புனித மார்த்தா விழா! ( 29-7-2024)
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...
-
மன்றாட்டுகள் 1) அன்புத்தந்தையே இறைவா உம் திருஉடலாம் திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், கன்னியர், துறவறத்தார் மற்ற...
-
செபம்: உன்னதங்களிலே உன்னதங்களிலே கடவுளுக்கு மாட்சி உண்டாகுக. உலகினிலே நன்மனத்தோருக்கு அமைதி ஆகுக. உம்மைப் புகழ்கின்றோம். உம்ம...