ஞாயிறு, 12 ஜூன், 2022

மன்னிப்பே மகத்துவம்....(12. 6.2022)

மன்னிப்பே மகத்துவம்....

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே


 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.


ஆகாபு அரசன் நாபோத்தின் நிலத்தை உரிமையாக்கிக் கொள்ள விரும்பி அதை அடைய முயன்றதையும், ஆகாபின் மனைவி ஈசபெல்  நயவஞ்சகத்தால் நாபோத்தைக் கொன்று அந்த நிலத்தை தன் கணவனுக்கு உரிமையாக கொடுத்ததையும் நாபோத்து என்ற ஏழைக்கு இழைக்கப்பட்ட அநீதியை குறித்தும் இன்றைய முதல் வாசகம் எடுத்துரைக்கிறது  


இன்றைய நற்செய்தி வாசகத்தில் கண்ணுக்கு கண்’, ‘பல்லுக்குப்பல்’ என்ற சட்டங்கள் இருந்தாலும், பழைய ஏற்பாட்டு காலத்தில் அதுமுறையாகப் புரிந்து கொள்ளப்படவில்லை .... சட்டத்தின் நோக்கம் பாதிக்கப்பட்டவருக்கு முழு நீதி கிடைக்க வேண்டும் என்கிற கருத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு தான் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டது. குற்றம் இழைத்தவருக்கு வெறுமனே தண்டனை கொடுப்பது மட்டும் சட்டமாக இருக்கவில்லை. மாறாக, குற்றம் இழைத்தவர் 5 வகைகளில் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு செய்ய வேண்டும். 

காயத்திற்கு, 

அதனால் ஏற்பட்ட வலிக்கு, 

மருத்துவ செலவிற்கு, 

இந்த காலகட்டத்தில் வேலைக்கு செல்ல முடியாததால் ஏற்படும் இழப்பிற்கு  

இந்த சமுதாயத்தில் அவர் இழந்த மாண்பிற்கு 

என இவை அனைத்திற்கு சேர்த்து குற்றம் செய்தவர் இழப்பீடு தர வேண்டும். 

இந்த அடிப்படையில் நீதியை தழைத்தோங்கச்செய்வதற்காகவே இந்த சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். 

இயேசு இதையும் தாண்டி இன்னும் ஒருபடி மேலே சென்று, மன்னிப்பை முன்னிறுத்துகிறார். அன்பை வெளிப்படுத்த அறிவுறுத்துகிறார்.

எத்தகைய இழப்பையும் அன்பால் மட்டும்தான் இழப்பீடு செய்ய முடியும் என்பது இயேசு நமக்கு வெளிப்படுத்தும் பாடம். நமக்கு துன்பம் தருகிற மனிதர்களையும் மன்னித்து ஏற்றுக் கொண்டு அவர்களை அன்பு செய்து வாழ இன்றைய நாளில் இறைவன் அழைப்பு தருகிறார் இறைவனின் அழைப்பை உணர்ந்து கொண்டு நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொள்வோம் ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...