ஞாயிறு, 26 ஜூன், 2022

இயேசுவைப் பின்பற்ற....(27.6.2022)

இயேசுவைப் பின்பற்ற....


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்...
இன்றைய முதல் வாசகத்தில் விற்பதும் வாங்குவதும் பற்றி பேசப்படுகிறது.  விற்பதும் வாங்குவதும் என்பது பொருளை இங்கு  குறிப்பிடவில்லை, மனிதர்களை.  ஒரு மனிதன் கடனாக  ஒருவரிடம் பெற்ற பணத்தை திருப்பிச் செலுத்த இயலவில்லை என்றால் அவரை அடிமையாக ஏற்றுக் கொள்ளக்கூடிய வழக்கம் இருந்தது. இப்படி அடிமையாக ஏற்றுக் கொள்ளப்பட்ட மனிதர்களை சுரண்டுவதை இறைவன் என்றும் ஏற்றுக்கொள்வதில்லை. எனவே தான் சட்டம் இதை அனுமதித்திருந்தாலும்,  அதை பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை லேவியர் புத்தகம் முப்பதாம் அதிகாரத்தில் ஆறாவது வசனம் சுட்டிக்காட்டுகிறது. 

      கடவுளின் வழியாக நாம் பெற்ற சகோதரர் ஒருவர் அடிமை என்ற நிலைக்குச் சென்று இருந்தால்,  அவரை நாம் ஒரு வீட்டுக் கூலியாள் போலவோ, விருந்தினர் போலவோ  உபசரிக்கவேண்டும். யூபிலி ஆண்டு முடியும் வரை அவரை ஆதரிக்க வேண்டும் என்ற வாழ்வுக்கான நெறிமுறைகள் அனைத்தையும் தருகிறது. இந்த நெறிமுறைகள் அனைத்துமே மனிதன் எப்படி வாழ வேண்டும், மற்றவர்களை எப்படி மதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. 

   இத்தகைய வழிகாட்டுதலின் அடிப்படையில்,  மனிதன் தன் வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும்.  இன்று முதல் அப்படி  அமைத்துக் கொள்ளுகிறவன், ஆண்டவர் இயேசுவைப் பின்பற்றுகிற,  ஏற்றுக் கொண்ட மனிதனாக மாறுகிறான். 
 இயேசுவைப் பின்பற்றுகிறேன் என்று  சொல்லிவிட்டு பிறகு தன் சுய விருப்பத்தையும், சுய லாபத்தையும்  மட்டும் மனதில் கொண்டு, ஒருவன் பயணிக்கின்றான் என்றால், அது இறைவனுக்கு ஏற்புடையது ஆகாது. இறைவனை பின்பற்ற  விரும்புகிற ஒவ்வொருவருமே, தன்னலம் துறந்து பொது நலத்தோடு தன்னைப் போல மற்றவர்களையும், நேசிக்கக் கூடியவராக, அன்பு செய்யக்கூடிய மனிதர்களாக, வாழ இன்றைய நாளில் இறையருள் வேண்டி இந்த திருப்பலியில் இணைந்து செபிப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...