சனி, 18 ஜூன், 2022

கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழா (19.6.2022)

கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழா

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்று தாய்த் திரு அவையானது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழாவினை கொண்டாடி மகிழ்கின்றது. ஆண்டவர் இயேசுவின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழாவினை கொண்டாடும் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்.

   ஒரு ஊரில் ஒரு ஏழை சிறுவன் இருந்தானாம். அவன்  இறைவனிடத்தில் சென்று,  ஆண்டவரே! நீர் என்னை அன்பு செய்வதாக மறைக்கல்வி ஆசிரியர் கூறினார்.  என்னை எந்த அளவிற்கு அன்பு செய்கிறீர்கள் என்று கேட்டானாம்.  அதற்கு இயேசு சொன்னாராம்,  என்னை உற்றுப்பார் என்று.  அவனும் உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்தானாம், ஒன்றும் தெரியவில்லையாம்.  வீட்டிற்கு சென்று விட்டான்.  

          மறு நாளும் வந்தானாம்.  ஆண்டவரே! இன்று நான் வீட்டிற்குச் சென்று என் அம்மாவிடம் பேசினேன். என் அம்மாவும் சொன்னார், நீர் என்னை அதிகமாக அன்பு செய்கிறீர் என்று.  நீர் என்னை எந்த அளவிற்கு அன்பு செய்கிறீர்? எனக்கு சொல்லித் தாரும். கடவுள் மீண்டுமாக அவனிடம், "என்னை உற்றுப் பார்!" என்றார்.  அவனும்  உற்று நோக்கினான்.  அவனுக்கு ஒன்றும் புலப்படவில்லையாம்.  மீண்டுமாக மூன்றாம் நாளும் அவன் இயேசுவின் முன்னால் வந்து நின்று, ஆண்டவரே என்றும் என்னுடைய
நண்பர்களிடம் பேசினேன்.  அவர்களும் சொன்னார்கள், நீர் என்னை அதிகமாக அன்பு செய்கிறீர் என்று. எந்த அளவுக்கு நீர் என்னை அன்பு செய்கிறீர்? எனக்கு நீர் சொல்ல வேண்டும்.  இல்லையென்றால், உன்னை விட்டு நான் போக மாட்டேன் என்றானாம்.  கடவுள் சொன்னார், "என்னை உற்றுப் பார்!" என்று.  இப்படித்தான் மூன்று நாளும் சொல்லிக்கிட்டு இருக்கீங்க.  நான் பார்க்கிறேன்.  ஒன்னுமே தெரிய மாட்டேங்குது. நீங்க  கண்ண மூடிக்கிட்டு நிற்கிறீங்க என்று சொன்னானாம். 

      அப்போது கடவுள்  நான் உனக்கு எப்படி தென்படுகிறேன்?  எனக் கேட்டாராம்.   நீங்க சிலுவையிலே உங்க கை கால் எல்லாம் ஆணியடிச்சு,  தென்படுறீங்க. 

     "நான் என்னுடைய உயிரை கொடுக்கும் அளவிற்கு உன் மீது அன்பு கூர்ந்தேன், அதனால் தான் என்னை உற்றுப் பார் என்று சொன்னேன் என்று சொன்னாராம்.  

        அப்போது தான் அவனுக்கு புரிந்ததாம்.  கடவுள் அவனிடம், எனது   இரு கைகளையும் கால்களையும் பார்.
உன் மீது நான் கொண்ட அன்பின் காரணமாக என்னுடைய உயிரையும் கொடுக்கத் துணிந்ததன் அடையாளமாகத் தான் உன்னை உற்று நோக்கச் சொன்னேன் என்றாராம். 

               இன்று நாமும் ஆண்டவர் இயேசுவின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழாவை கொண்டாடுகின்ற நாம், இந்த கல்வாரி இயேசுவை உற்றுநோக்குவோம்.  இவர் இங்கு இரத்தம் சிந்தி உயிரை விட்டது, நமக்காக. நம் மீது கொண்ட அன்பின் காரணமாக என்பதை உணர்ந்து கொள்ள இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம்.

நமக்காக தன் இன்னுயிரைத் அந்த இந்த இறைவனை நினைவு கூருகின்ற இந்த நல்ல நாளில் நாம் இந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை உற்று நோக்குவோம்.  நமக்காக தமது உயிரை தியாகம் செய்த இறைவனின் தியாகத்தை உணர்ந்து கொண்டு, நம் மீது அவர் கொண்டுள்ள ஆழமான அன்பை உணர்ந்து கொண்டு, நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொள்ள இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...