வெள்ளி, 10 ஜூன், 2022

கிறிஸ்துவை ஏற்றவர்கள் நாம் என்பதை செயலில் காட்டுவோம்(11.6.2022)

கிறிஸ்துவை ஏற்றவர்கள் நாம் என்பதை செயலில் காட்டுவோம்


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
அந்தியோக்கு நகரில் முதன்முதலாக கிறிஸ்தவர்கள் என்ற பெயரை அதாவது கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்கள் கிறிஸ்தவர்கள் என பெயர் பெற்றுக்கொள்கிறார்கள்.

இயேசுவின் சீடர்கள் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை உலகெங்கும் சென்று அறிவிக்கக்கூடிய நபர்களாக இருந்தார்கள் இந்த அறிவிப்பில் பலவிதமான இன்னல்களையும் இடையூறுகளையும் சந்தித்தார்கள் அனைத்திற்கும் மத்தியிலும் ஆண்டவர் இயேசுவின் இறையாட்சி பணியை இன்முகத்தோடு நிறைவேற்றினார்கள் என்பதை முதல் வாசகம் நமக்கு சுட்டிக் காட்டுகிறது.

இந்த கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட நாமும் விண்ணக வாழ்வுக்கு உரிய செயல்களை நமது செயலாகக் கொண்டு ஆண்டவர் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவிப்பதில், நோயாளிகளுக்கு உதவுவதிலும், தனிமையிலும், சிறையிலும் வாடுபவர்கள் சந்திப்பதிலும், சந்திக்கும் நபர்கள் எல்லாம் வாழ்த்துவதில் நிலைத்து இருக்க வேண்டுமென இன்றைய நற்செய்தி வாசகத்தில் வழியாக இயேசு குறிப்பிடுகிறார்.

இயேசு கூறுகின்ற இந்த இறைவார்த்தையின் வழியில் நமது வாழ்வை சீரமைத்துக் கொண்டு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட நாம் நமது செயல்களால் அவரின் சீடர்கள் என்பதை வெளிக்காட்டும் வகையில் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...