திங்கள், 13 ஜூன், 2022

இரக்கம் காட்ட...(14.6.2022)

இரக்கம் காட்ட...



இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் 



நடக்கின்ற தவறுகள் அனைத்தையும் கண்டும் காணாதவர் போல இருப்பவர் அல்ல கடவுள் என்பதை இன்றைய முதல் வாசகத்தின் வழியாக நாம் உணர்ந்து கொள்கிறோம். நாபோத்து என்ற எளியவரின் நிலத்தை உரிமையாக்கிக் கொள்ள சென்ற அரசனாகிய ஆகாபையும் அவன் மனைவி ஈசபேலையும் எலியா இறைவாக்கினர் வழியாக இறைவன் தடுக்கின்றார்....

        இன்றைய நற்செய்தி வாசகத்தில் நம்மை இகழ்ந்து தூற்றுபவர்களையும் ஏற்றுக்கொள்ள, பகைவரிடத்திலும் அன்பு செய்ய வேண்டும் என்பதை ஆண்டவர் வலியுறுத்திக் கூறுகின்றார்.... 

       ஆயிரம் மதங்கள் இருந்தாலும், கிறிஸ்தவ மதத்தின் தனித்துவம் பகைவரையும் அன்பு செய் என்பதாகும்... வெறும் வார்த்தைகளல்ல இவை, வாழ்வாக்கப்பட வேண்டியவை என்பதை வாழ்வாக்கிக் காட்டியவர் நமது இயேசு கிறிஸ்து.  இந்த இயேசு கிறிஸ்து பின்பற்றுகின்ற நாமும் இந்த வாழ்வுக்கான பாடத்தை வாழ்வில் செயல்படுத்த இன்றைய வாசகங்கள் அழைப்பு தருகின்றன.

அனுதினமும் நாம் பயன்படுத்துகின்ற விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே என்ற இறைவேண்டலில் கூட பிறருடைய குற்றங்களை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும் என நாம் சொல்லி செபிக்கிறோம்.   அடுத்தவர் மீது இரக்கம் காட்டாது நம் மீது மட்டும் இறைவன் இரக்கம் காட்ட வேண்டும் என எண்ணுவோமாயின் அது அர்த்தமற்றது என்பதை உணர்ந்தவர்களாக நமக்கு துன்பம் இழைத்தவர்களுக்கும் நன்மை செய்யும் மனிதர்களாகிட இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம் ....

அன்னை தெரசாவை போல 
வெறுப்பது யாராக இருந்தாலும், இன்னும் நேசிப்பது நாமாக இருப்போம்! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...