செவ்வாய், 21 ஜூன், 2022

நமது செயல்களே சான்று....(22.6.2022)

நமது செயல்களே சான்று....


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில்  மகிழ்ச்சி அடைகிறேன்.
 இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் இலக்கியா ஆண்டவரின் நூலை கண்டெடுத்தேன் எனக் குறிப்பிடுகிறார்.  அவர் கண்டெடுத்த அந்த திருச்சட்ட நூலில் இஸ்ரயேல் மக்கள் எதைப் பின்பற்ற வேண்டும்? என்பதற்கான சட்டதிட்டங்கள் இடம்பெற்றிருந்தன.  இந்த சட்ட திட்டங்கள் அனைத்துமே அவர்களின் வாழ்வை நெறிப்படுத்துவதற்காக கொடுக்கப்பட்டவை.  அது போலவே, நாம் வாழுகிற இந்து சமூகத்திலும் பலவிதமான சட்டதிட்டங்கள் இருக்கின்றன.  அனைத்தும்  நம்மை நெறிப்படுத்துவதற்காக.  ஆனால் அதில் இருக்கின்ற சில துளைகளை மட்டும்,  குறைகளை மட்டும் எடுத்துக் கொண்டு வாழ்வைத் தொடர்கின்ற போக்கு இன்று அதிகரிக்கிறது.

           இந்த இறைவார்த்தைப் பகுதியோடு நமது வாழ்வை ஒப்பிடுகிற போது, மரத்தின் கனி கொண்டு  மரம் அறியப்படுவது போல, நமக்கு நாமே உருவாக்கி இருக்கக்கூடிய சட்டத்திட்டங்களை கொண்டே நாம் யாரென  அறியப்படுகிறோம். 

 அனுதினமும் ஆலயத்திற்கு வருவது, என்பது நமக்கு நாமே உருவாக்கிக் கொண்ட சட்டம்.   திரு அவை இதனை முன்மொழிந்து இருந்தாலும், அதனை ஏற்றுக் கொள்ளவும் நிராகரிக்கவும் உரிமை உடையவர்கள் நாம்.  ஏற்றுக்கொண்டிருக்கிறோம்; அச்சட்டத்தின் படி செயல்பட்டுக் கொண்டும் இருக்கிறோம். அதுபோலவே ஆண்டவர் இயேசு கிறிஸ்து இந்த மண்ணில் வாழ்ந்த போது விதைத்த ஒவ்வொரு வார்த்தைகளுமே பலவிதமான அர்த்தங்களைக் கொண்டது. பலவிதமான வாழ்வுக்கான வழிகளை உள்ளடக்கியது. சில நேரங்களில் அது சட்டம் போலவும் தோன்றலாம்.  பல நேரங்களில் ஆண்டவரின் வார்த்தைகள் அனைத்தும் ஒரு சட்டம் போல தோன்றலாம். 

 ஆனால் ஆண்டவரின் வார்த்தைகளை சட்டமாக இதயத்தில் ஏற்றுக்கொண்டு, அந்த சட்டத்தை பின்பற்றுகின்ற மனிதர்களாக நாம் செயல்பட வேண்டும்.  நமது செயல்களைக் கொண்டே நாம் பின்பற்றுகின்ற இயேசுவை மற்றவர்கள் உணர்ந்து கொள்ளக்கூடிய வகையில் நமது வாழ்வு அமைய வேண்டும்.  மரத்தின் கனி கொண்டு மரம் அறியப்படுவது போல,  நமது செயல்களைக் கண்டு நாம் கிறிஸ்தவர்கள் என்பது புலப்பட வேண்டும்  என்பதை நாம் இன்றைய நாள் இறைவார்த்தை வழியாக இறைவன் உணர்த்துகின்றார். 

           இறைவன் உணர்த்தும் வாழ்வுக்கான பாடத்தை இதயத்தில் ஏற்றுக் கொண்டவர்களாய்,  நமது செயல்களால் இயேசுவை வெளிப்படுத்த இறையருள் வேண்டுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...