வெள்ளி, 3 ஜூன், 2022

சாட்சிய வாழ்வு வாழ.....(4.6.2022)

சாட்சிய வாழ்வு வாழ.....

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். 
இன்றைய முதல் வாசகத்தில் திருத்தூதர் பவுல் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையிலும் யூதர்கள் பலரை அழைத்து அவர்களிடத்தில் தன் நிலை குறித்து உரையாடுகிறார் பவுலின் இந்த உரையாடல் தன்னை காத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் அமைந்தது அல்ல மாறாக கடவுளின் பணியை தான் செய்து கொண்டிருக்கிறேன் என்பதை உணர்த்தும் வண்ணமாகவே அமைந்திருந்தது.

அதுபோலவே இன்றைய நற்செய்தி வாசகத்தில் யோவானை குறித்து அவரின் எதிர்காலம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்றும்  இயேசு கூறியவற்றின் உண்மையான அர்த்தம் என்னவென்று திருஅவை வரலாற்றில் பல நேரங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டது உண்டு.... இயேசுவால் அழைக்கப்பட்ட அவரது பன்னிரண்டு சீடர்களுக்கும் இறுதியாக மரணத்தை சந்தித்தவர் இந்த இயேசுவின் அன்புச் சீடரான  யோவான்...

இயேசுவினுடைய சீடர்கள் அனைவருமே இயேசுவின் வார்த்தைகளை பாரெங்கும் சென்று அறிவித்து அதன் விளைவாக சிலர் தனது இன்னுயிரை இயேசுவுக்காக தியாகம் செய்தார்கள். அவர்களின் வரிசையில் இந்த திருத்தூதரான யோவான் இயேசுவின் வார்த்தைகளை தன் வாழ்வாக மாற்றிக் கொண்டு தனது வாழ்வால் மற்றவருக்கு ஒரு சான்று பகர்கின்ற வாழ்வினை வாழ்ந்தார்.   காட்சிகள் மூலமாக இறைவனின் திட்டம் என்ன என்பதை மக்களுக்கு எடுத்துரைத்த ஒரு மாமனிதராக வாழ்ந்து இறந்து போனார் என்பது வரலாறு இவரை குறித்து நமக்கு கொடுக்கின்ற பாடமாக உள்ளது...

இயேசுவை இதயத்தில் ஏற்றுக்கொண்ட நாம் ஒவ்வொருவருமே நமது வாழ்வில் இயேசுவின் வார்த்தைகளுக்கு சான்று பகர கூடிய மனிதர்களாக இருக்க இந்த நாளில் அழைக்கப்படுகின்றோம் நமது வாழ்வு இயேசுவின் வார்த்தைகளின் படி அமைந்திருக்கிறதா? அல்லது தனது மனம் போன போக்கில் வாழ்வானது நகர்கிறதா கேள்வியை இதயத்தில் இருத்துவோம். ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளுக்கு ஏற்ப நமது வாழ்வு சான்று பகர்கின்ற சாட்சிய வாழ்வாகிட இறைவனிடத்தில் அருள்வேண்டி தொடர்ந்து ஜெபிப்போம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...