ஞாயிறு, 12 ஜூன், 2022

எண்ணங்கள் சிறக்க வேண்டும்(10.6.2022)

எண்ணங்கள் சிறக்க வேண்டும்


நமது எண்ணங்கள் சிறப்பானதாக அமைகின்ற போது நமது செயல்களும் சிறப்பானதாக மாறுகிறது. 

எண்ணங்களின் தொகுப்பாக விளங்குகின்ற மனித வாழ்வில் எண்ணங்கள் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதை இன்றைய நாள் வாசகங்கள் நமக்கு வலியுறுத்துகின்றன. 

விடுதலைப்பயணம் 20: 14 ல் கூறுகிறது : “விபச்சாரம் செய்யாதே” என்று. லேவியர் 20: 10 விபச்சாரத்தைக் கடுமையாகச் சாடுகிறது, “அடுத்திருப்பவன் மனைவியோடு உடலுறவு கொள்பவனும், அந்தப்பெண்ணும் கொலை செய்யப்பட வேண்டும்”. ஆனால், இயேசு அதனைவிடக் கடுமையான வார்த்தைகளைக் கையாளுகிறார், “ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும் தம் உள்ளத்தால் ஏற்கெனவே அப்பெண்ணோடு விபச்சாரம் செய்தாயிற்று” என்கிறார்.


சொல்லும் செயலும் பிறப்பதற்கு ஊற்றாக இருப்பது சிந்தனை. நம் உள்ளத்தில் ஓர் எண்ணம் எழுகின்ற போது அந்த எண்ணம் நம் கற்பனையோடு கலந்து நம் மனக் கண் முன்னே ஒரு காட்சியையே சித்தரிக்கும் தன்மை வாய்ந்தது. 

எண்ணம் முதலில் எழும்; செயல் அதைத் தொடரும். ஒரு செயலின் தொடக்கத்திலேயே அதனை சரிசெய்து கொள்ள வேண்டும் என்ற வாழ்வுக்கான பாடத்தை இறைவன் இன்று நமக்குத் தருகின்றார்.

நமது எண்ணங்களை குறித்து சந்திப்போம் நமது எண்ணங்கள் நேர்மையானதாக இறைவனின் விருப்பத்திற்கு உகந்ததாக இந்தச் சமூகத்தில் நன்மைகளை மட்டுமே முன்னெடுப்பதாக இருக்குமாயின் இறைவனுக்கு நன்றி கூறுவோம்....

இல்லை நமது எண்ணங்களில் மாற்றம் நிகழ வேண்டும் என்ற எண்ணம் நமக்குள் உருவாகுமானால்  இறைவனின் துணையை நாடுவோம்... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...