புதன், 15 ஜூன், 2022

இறைவனோடு உரையாட...(16.6.2022)

இறைவனோடு உரையாட...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். 
இன்றைய முதல் வாசகம் சீராக்கின் ஞானம் நூலிலிருந்து எடுக்கப்பட்டது ...
இந்த நூலானது பல விதமான அறிவுரைகளை தன்னகத்தே உள்ளடக்கியது.  இந்த நூலிலிருந்து இன்று நாம் இறைவார்த்தைகளை கேட்ட முதல் வாசகமானது ஆண்டவரைப் பற்றிய புகழ்ச்சிப் பாடலாக அமைகிறது ....

இறைவாக்கினர் எலியா இறைவனோடு கொண்டிருந்த ஆழமான உறவைக் குறித்தும், அதனால் அவரால் பலவிதமான நல்ல காரியங்களை முன்னெடுக்க முடிந்தது என்பதையும் இன்றைய முதல் வாசகம் நமக்கு விளக்கிக் காட்டுகிறது.  ....

நாமும் இந்த சமூகத்தில் பல நல்ல காரியங்களை முன்னெடுக்க நமது வார்த்தைகளும், இந்த சமூகத்தில் மாற்றத்தை விளைவிக்க வேண்டுமாயின், நமக்கும் இறைவனுக்கும் இடையேயான உரையாடல் அதிகரிக்கவேண்டும். அந்த உரையாடல் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை இன்றைய நற்செய்தி வாசகத்தின் வாயிலாக இறைவன் எடுத்துரைக்கிறார்.

செபம் என்பது நமக்கும் கடவுளுக்கும் இடையேயான உரையாடல். இந்த உரையாடல் தொடர்கிறதன் வழியாக நமது உறவானது தொடரப்படுகிறது ...  எலியாவுக்கும் கடவுளுக்கும் இடையேயான உரையாடல் தொடர்ந்ததன் விளைவாகத்தான் எலியாவின் வார்த்தைகள் அனைத்தும் இந்த மண்ணில் செயல்வடிவம் பெற்றது. 

                          பரபரப்பான இந்த உலகத்தில் பல பணிகளுக்கு மத்தியில் நாமும் இறைவனோடு உரையாட நேரம் ஒதுக்கவும், இறைவனோடு இணைந்திருக்கவும் இறையருள் வேண்டி இணைந்து தொடர்ந்து இந்த திருப்பலி வழியாக செபிப்போம்.

1 கருத்து:

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...