ஞாயிறு, 5 ஜூன், 2022

திருச்சபையை வழிநடத்தும் அன்னை....(6.6.2022)

திருச்சபையை வழிநடத்தும் அன்னை....

இறைவனை இயேசுவில் அன்புக்குரியவர்களே

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்
2018 ஆம் ஆண்டு நமது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒவ்வொரு வருடமும் வரக்கூடிய தூய ஆவியாரின் பெருவிழாவிற்கு அடுத்த நாளாகிய திங்கள் கிழமையை மாதா திருஅவையின் தாய் என்ற விழாவாக நினைவுகூர்ந்து கொண்டாட அழைப்பு விடுத்தார் அழைப்பின் அடிப்படையில் என்று நம் தாய் அன்னை மரியா திருஅவையின் தாய் என்பதை மகிழ்வோடு நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம் ...


அன்று இயேசு சிலுவையில் தொங்குகிற போது இதோ உன் மகன் என அன்னை மரியாவை பார்த்து இயேசு கூறிய வார்த்தைகளின் அடிப்படையில் மரியா திருஅவையின் தாயாக மாறினார்.

ஈராயிரம் ஆண்டுகளைக் கடந்து நிற்கும் என்றதொரு அவை பல நேரங்களில் பலவிதமான எதிர்மறையான மனநிலை கொண்ட மனிதர்களை சந்தித்தது அப்படி சந்தித்த தருணங்களில் எல்லாம் திருவிளக்கு படுவதற்கான சூழல்கள் பல உதயமாயின அப்படிப்பட்ட நேரங்களில் எல்லாம் திருஅவை அன்னை மரியாவின் பரிந்துரையை நாடியது ...மரியாவின் பரிந்துரை வழியாக திருஅவை சந்தித்த பலவிதமான இக்கட்டான சூழ்நிலைகளை எல்லாம் துணிவோடு எதிர்கொண்டு வந்தது.

அன்று உயிருக்கு பயந்து அஞ்சி நடுங்கி அவர்களை எல்லாம் அழைத்து மாடி அறைக்குள் அமர்த்தி இறைவனிடம் மன்றாட காரணமாயிருந்த அன்னைமரியா எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் துணிவோடு பணிசெய்ய திருஅவையின் பாதுகாவலாக இருந்து வழி நடத்தி வருகிறார் ..... 


நம்பிக்கையோடு இந்த அன்னையை நோக்கி நமது மன்றாட்டுக்கள் எழுப்புகிற போது நாம் நலன்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதை உணர்ந்தவர்களாக திருஅவை வழிநடத்தும் அன்னையோடு இணைந்து திருஅவையின் மரபுகளையும் கற்பிக்கும் பாடங்களையும் மனதில் இருத்தி நல்லதொரு பயணத்தில் ஈடுபட்டு திருஅவையின் வளர்ச்சிக்கு உதவிட திருச்சபையை வழிநடத்தும் அன்னையோடு இணைந்து பயணிப்போம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...