ஞாயிறு, 9 ஜூன், 2024

எந்த அதிகாரத்தால் இவற்றை செய்கிறீர்? (1-6-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

 
 இயேசு நன்மைகளை செய்த போது, அவரை சுற்றி இருந்தவர்கள் பலரும் எந்த அதிகாரத்தை கொண்டு இவற்றையெல்லாம் செய்கிறீர்?  உமக்கு அதிகாரம் வழங்கியவர்  யார்? என்ற கேள்விகளை எழுப்பி, அவரது பணி வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைக்க முனைந்தார்கள். ஆனால் இயேசு அவர்களின் வார்த்தைகளுக்கு செவி கொடுக்காமல், தான் செய்ய விரும்பிய நன்மைகளை தொடர்ந்து செய்பவராகவே இயேசு தன் வாழ்வை அமைத்துக் கொண்டார். 

    இந்த இயேசுவைப் போலவே நீங்களும் நானும் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள, இன்றைய இறைவார்த்தை வழியாக இதயத்தில் உறுதி ஏற்போம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித பேதுரு பவுல் பெருவிழா! (29-6-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்று தாய் திரு அவையானது திருத்தூதரான பேதுருவையும் பவுலையும் நினைவு கூர நமக்கு அழைப்பு விட...