ஞாயிறு, 9 ஜூன், 2024

தூய கன்னி மரியாவின் மாசற்ற இருதய பெருவிழா! (8-6-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

 மற்றவர்களின் பார்வைகளை புறம் தள்ளிவிட்டு, கடவுளின் பார்வைக்கு முதன்மையான இடம் கொடுத்தவர்களாக, நமது சொல்லையும் செயலையும் அமைத்துக் கொள்ள இன்றைய இறைவார்த்தை நமக்கு அழைப்பு விடுக்கிறது.

   தன் பிழைப்புக்காக வைத்திருந்த தொகையைக் கூட கடவுளின் ஆலயத்தில் காணிக்கையாக கொடுத்துவிட்டு அடுத்த வேளைக்கு ஆண்டவர் பார்த்துக்கொள்வார் என்ற ஆழமான நம்பிக்கை கொண்டிருந்த ஒரு ஏழை கைம்பெண்ணின் காணிக்கையை இயேசு அனைவரும் அறிந்து கொள்ளுகிற வகையில் சுட்டிக் காண்பிக்கின்றார். அந்த பெண்ணிடம் காணப்பட்ட ஆழமான நம்பிக்கையை நமது நம்பிக்கையாக நாம் மாற்றிக்கொள்ள அழைக்கப்படுகிறோம். ஆனால் பல நேரங்களில் நாம் பரிசேயர் சரிசெய்யர்களை அமைத்துக் கொள்ளுகிறோம் அத்தகைய வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு அனைத்து ஆண்டவரின் மீது ஆழமான நம்பிக்கை கொண்ட ஒரு வாழ்வை நம் வாழ்வாக மாற்றிக்கொள்ள இன்றைய இறைவாதையின் அடிப்படையில் இதயத்தில் உறுதி ஏற்போம் இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...