வெள்ளி, 28 ஜூன், 2024

புனித பேதுரு பவுல் பெருவிழா! (29-6-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!


 இன்று தாய் திரு அவையானது திருத்தூதரான பேதுருவையும் பவுலையும் நினைவு கூர நமக்கு அழைப்பு விடுக்கிறது. திரு அவையின் இரு பெரும் தூண்களாக இவர்கள் இருவரும் கருதப்படுகிறார்கள். ஒருவர் படிப்பில் மிகச் சிறந்தவராக இருந்தார், மற்றவரோ படிப்பறிவு அற்றவராக இருந்தார். ஆனால் இவர்கள் இருவருமே இணைந்து இயேசுவின் பணியை இவ்வகிலத்தில் மூலை முடுக்கெல்லாம் கொண்டு போய் சேர்த்தார்கள். நம்பிக்கையோடு ஆண்டவரை நாடி வரவேண்டும் என்பது இவர்களின் வழிகாட்டலாக அமைந்தது.

 இந்த இரு திரு தூதர்களை நினைவு கூருகிற இந்நன்னாளில் நீங்களும் நானும், இன்று நாம் நினைவு கூறுகின்ற திருத்தூதர்களைப் போல இயேசுவின் மீது ஆழமான நம்பிக்கை கொண்டு வாழவும், அந்த நம்பிக்கையின் அடிப்படையில் பல நல்லவர்களை இச்சமூகத்தில் உதயமாக செய்வதில் நமது பங்களிப்பை வழங்கவும் வேண்டியது நமது கடமை என்பதை உணர்ந்தவர்களாக இத்திருத்தூதர் பவுல் மற்றும் திருத்தூதர் பேதுருவின் வாழ்வில் இருந்து நமது வாழ்வுக்கான ஆழமான நம்பிக்கையை நாம் எடுத்துக் கொண்டு இறைவன் கொடுத்த இந்த அகிலத்தில் இணைந்து பயணிக்க இன்றைய நாளில் இதயத்தில் உறுதி ஏற்போம் இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...