ஞாயிறு, 9 ஜூன், 2024

இயேசுவின் திரு இருதயப் பெருவிழா! (7-6-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

  இன்று தாய் திரு அவையானது இயேசு கிறிஸ்துவின் திரு இருதய பெருவிழாவினை கொண்டாடி மகிழ நமக்கு அழைப்பு விடுக்கிறது. இயேசுவின் திரு இருதயத்திலிருந்து எப்போதும் அன்பும், இரக்கமும், பரிவும், மன்னிப்பும், வெளிப்பட்டது. உயிர் போகும் நிலையிலும் கூட தன்னை அவர் இந்நிலைக்கு ஆளாக்கிய மனிதர்கள் மீது அன்பு கொண்டார். அவர்கள் மீது பறிவு கொண்டார். அதன் அடிப்படையில் கடவுள் அவர்களை மன்னித்தருள வேண்டுமென மனதார கடவுளிடம் அவர்களுக்காக மன்றாடினார். இந்த இயேசுவின் இருதய அன்பில் நிலைத்திருக்க நீங்களும் நானும் அழைக்கப்படுகிறோம். நம் இதயங்களில் ஆண்டவரின் அன்பு குடி கொண்டிருக்கிறதா அல்லது பகைமை உணர்வும் வெறுப்பும் சுயநலமும் குடி கொண்டிருக்கிறதா என்பதை சீர்தூக்கி பார்த்து, நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு, இயேசுவின் இதயமாக நமது இதயத்தையும் மாற்றிக் கொண்டு, அன்பை அகிலத்தில் உள்ள அனைவரோடும் பகிர்கின்ற மனிதர்களாக நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொள்ள இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித பேதுரு பவுல் பெருவிழா! (29-6-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்று தாய் திரு அவையானது திருத்தூதரான பேதுருவையும் பவுலையும் நினைவு கூர நமக்கு அழைப்பு விட...