செவ்வாய், 25 ஜூன், 2024

நற்கனி கொடுக்கும் மரங்களாக வளர்வோம்! (26-6-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

 இன்றைய இறை வார்த்தையானது நல்ல கனி தரும் மரங்களாக இருப்பதற்கான அழைப்பை நமக்கு தருகிறது. ஆண்டவர் படைத்த இந்த அகிலத்தில் காணுகிற மனிதர்களுக்கெல்லாம் நன்மை செய்பவர்களாக நீங்களும் நானும் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள அழைக்கப்படுகிறோம். இறைவன் நமக்கு கொடுத்திருக்கின்ற
 நற்பண்புகளை நினைவு கூர்ந்து அந்த நற்பண்புகளை மற்றவரோடு பகிர்கின்ற மனிதர்களாக நீங்களும் நானும் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள, அத்தகைய வாழ்வு வழியாக ஆண்டவர் விரும்புகின்ற இறையாட்சியை மண்ணில் வளரச் செய்யக்கூடியவர்களாக நாம் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள ஆண்டவரிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித பேதுரு பவுல் பெருவிழா! (29-6-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்று தாய் திரு அவையானது திருத்தூதரான பேதுருவையும் பவுலையும் நினைவு கூர நமக்கு அழைப்பு விட...