திங்கள், 24 ஜூன், 2024

பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்களோ, அதையே நீங்களும் மற்றவர்களுக்கு செய்யுங்கள்! (25-6-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

 இன்றைய இறைவார்த்தையானது பிறர் நமக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறோமோ அதையே நாம் அவர்களுக்கு செய்ய வேண்டும் என்பதை நமக்கு வலியுறுத்துகிறது. நாம் காணுகிற ஒவ்வொருவருமே நமக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணம் நம் எல்லோர் உள்ளத்திலும் உள்ளது அதே எண்ணத்தோடு நாம் காணுகிற அத்தனை மனிதர்களுக்கும் நன்மை செய்பவர்களாக இருக்க இன்றைய இறை வார்த்தை வழியாக அழைக்கப்படுகிறோம். 

     முப்பத்து மூன்று ஆண்டுகள் இம்மண்ணில் வாழ்ந்த இயேசுவின் வாழ்வு அவர் எங்கு சென்றாலும் நன்மை செய்தார் என அவரைப் பற்றி சுட்டிக் காட்டுகிறது. இந்த இயேசுவை பின்பற்றுகின்ற நீங்களும் நானும் நமது வாழ்வில் இறைவன் கொடுத்திருக்கின்ற இந்த இனிய நாளில் நாம் காணுகிற அத்தனை மனிதர்களுக்கும் நன்மை செய்பவர்களாக நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொள்ள இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித பேதுரு பவுல் பெருவிழா! (29-6-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்று தாய் திரு அவையானது திருத்தூதரான பேதுருவையும் பவுலையும் நினைவு கூர நமக்கு அழைப்பு விட...