ஞாயிறு, 30 ஜூன், 2024

கடவுளுக்கு உகந்தவராய் வாழ்வோம்! (1-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

 இன்றைய இறை வார்த்தையானது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வாழ்வோடு நமது வாழ்வை ஒப்பிட்டுப் பார்க்க அழைப்பு விடுகிறது. மானிட மகனுக்கு தலை சாய்க்கக் கூட இடமில்லாத சூழலில் தான் இயேசுவின் வாழ்வு இந்த அகிலத்தில் இருந்தது. ஆனால் அவர் கடவுள் மீது கொண்டிருந்த ஆழமான நம்பிக்கை அனைத்து விதமான கவலைகளையும் மறக்கடிக்க வைத்தது. கடவுளின் காரியங்களில் கருத்தோன்றியவராக ஒரு மனிதன் இந்தச் சமூகத்தில் எப்படி வாழ வேண்டும் என்பதற்கான மிகச் சிறந்த சான்றாக இயேசுவை நாம் நமது வாழ்வில் அடையாளம் கண்டு கொள்ள அழைக்கப்படுகிறோம். கடவுளை மட்டுமே நம்பி கடவுளின் துணையோடு கடவுளுக்கு உகந்த ஒரு வாழ்வை ஒவ்வொருவரும் வாழ முடியும் என்பதை தன் வாழ்வால் இயேசு நமக்கு வெளிக்காட்டினார். 

   இந்த இயேசுவை நாம் மனதில் இருத்தி அவரைப்போல ஆண்டவருக்கு உகந்த காரியங்களை ஆர்வத்தோடு செய்ய இறையருள் வேண்டி இன்றைய நாளில் மன்றாடுவோம். இறைவன் நம்மைத் தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...