வியாழன், 27 ஜூன், 2024

நம்பிக்கையோடு நன்மைகள் செய்வோம்! (28-6-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

 இன்றைய இறை வார்த்தையானது ஆண்டவர் மீது அசைக்க முடியாத ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ நமக்கு அழைப்பு விடுக்கிறது. இன்றைய நற்செய்தி வாசகத்தில், நம்பிக்கையோடு ஆண்டவரிடத்தில் வந்து, நீர் விரும்பினால் நான் நலம் பெற முடியும் என்று சொல்லி நம்பிக்கையோடு ஆண்டவரிடத்தில் இருந்து நலம் பெற்றுக் கொண்டு சென்ற மனிதனை குறித்து நாம் வாசிக்க கேட்டோம். இந்த மனிதரை போன்றே நீங்களும் நானும் நம்பிக்கையோடு ஆண்டவரை நாடி வந்து பல்வேறு விதமான நன்மைகளைப் பெற்றுக்கொள்ள அழைக்கப்படுகிறோம். அவர் தந்திருக்கின்ற இந்த இனிய நாளில் அவரின் துணையோடு ஆயிரக்கணக்கான இடர்பாடுகளுக்கு மத்தியிலும் நன்மைகள் செய்து நமது வாழ்வை அலங்கரித்துக் கொள்ள முடியும் என்பதை மனதில் இருத்தியவர்களாக நம்பிக்கையோடு இன்றைய நாளில் இறைவன் கொடுத்திருக்கின்ற இந்த இனிய நாளில் உறவுகள் அத்தனை பேரோடும் ஆண்டவருக்கு உகந்த ஒரு வாழ்வை நாம் நமது வாழ்வாக மாற்றிக் கொள்ளும் வண்ணமாக நம்பிக்கையோடு நல்லது செய்ய வேண்டும் என்ற மனநிலையோடு தொடர்ந்து பயணிக்க இறைவனிடத்தில் இன்றைய நாளில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...