ஞாயிறு, 9 ஜூன், 2024

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வாழ்வோரின் கடவுள்! (5-6-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
 இன்றைய இறை வார்த்தையில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இடத்தில் சந்தேகங்களை கேட்பது போல இயேசுவின் வார்த்தைகளை வைத்து, அவர் மீது குற்றம் சாட்டலாம் என்ற மனநிலையோடு பலரும் அவரை சூழ்ந்து நின்றார்கள். இறப்புக்குப் பிறகாக எப்படிப்பட்ட வாழ்வு உண்டு என்பது குறித்து இயேசுவின் இடத்தில் கேள்வி எழுப்பிய போது, இயேசு அவர்களின் கேள்விக்கு அறிவு தெளிவோடு பதில்களை கொடுத்துவிட்டு, ஆண்டவராகிய கடவுள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்களாக, நாம் இருக்க வேண்டும். ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் என முன்னோர்களின் வழித்தோன்றலாக, கடவுள் நம்பிக்கையில் நிலைத்திருந்த அந்த முன்னவர்களை சுட்டிக்காட்டி, அவர்களைப் போல நாம் நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொள்ளுகிற போது, ஆண்டவருக்கு உகந்தவர்களாக வாழ முடியும் என்பதை இன்றைய இறை வார்த்தை வழியாக இறைவன் எடுத்துரைப்பதை நாம் வாசிக்க கேட்டோம். இந்த வார்த்தைகளை இதயத்திலிருந்து நமது வாழ்க்கையை சீர்தூக்கி பார்த்து, நாமும் நம்பிக்கையில் நாளும் வளர்ச்சி பெற இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறையருள் வேண்டுவோம்.இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித பேதுரு பவுல் பெருவிழா! (29-6-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்று தாய் திரு அவையானது திருத்தூதரான பேதுருவையும் பவுலையும் நினைவு கூர நமக்கு அழைப்பு விட...