வியாழன், 17 செப்டம்பர், 2020

தொடர் முயற்சி தொடரட்டும் ... (18.09.2020)


ஒரு நேர்காணலில் இளைஞர்கள் பல பேர் விண்ணப்பம் போட்டிருந்தார்கள். வந்தவர்களை எல்லாம் வடிகட்டி பார்த்த போது கடைசியாக இரண்டே இரண்டு இளைஞர்கள் மட்டுமே மிஞ்சி இருந்தார்கள்.
இருவரும் தகுதியை பொறுத்தவரையில் சரிநிகர் சமமாக பெற்றவர்களாக விளங்கினர். வல்லுநர் குழு முடிவாக இருவரிடமும் ஒரே ஒரு கேள்வியை கேட்டது 

உங்களுக்கு இந்த வேலை கிடைக்கவில்லை என்றால் எப்படி உணர்வீர்கள்? 

முதல் இளைஞன் நான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என்று நினைப்பேன் என்று பதில் சொன்னான்.  வல்லுநர் குழு அவனை நீ போகலாம் என்று சொன்னது. இரண்டாவது இளைஞனிடம் அதே கேள்வியை கேட்டார்கள். நீங்கள் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என்று நினைப்பேன் என்று மறுமொழி கூறினான். நீ வேலையில் சேரலாம் என்று ஒருமித்த குரலில் உடனே வேலை வாய்ப்பை வழங்கியது அந்த வல்லுநர் குழு.  

கூர்மையாக சிந்தித்துப் பார்த்தால் இரண்டு இளைஞர்களும் சொன்ன பதில்களில் உள்ள வேறுபாடு நமக்குப் புலனாகும். நான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என்று நம்பிக்கை இல்லாமல் விரக்தியான ஒரு மனநிலையில்  முதல் இளைஞன்.  ஆனால் இரண்டாவது இளைஞனும் நம்பிக்கை ததும்பி நிற்கும் வண்ணம் எழுச்சிமிக்க மனநிலையோடு நீங்கள் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என்று உரைத்தான். வேலைவாய்ப்பு என்ற வெற்றிக்கனியை அவன் எட்டிப்பிடித்தான்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு நகர் நகராக ஊர் ஊராகச் சென்று இறையாட்சி பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றி வந்தார்.  மேலும் பல விதமான நோய்களில் இருந்து மக்களை குணமாக்கினார் என நாம் வாசிக்க கேட்கின்றோம். இன்றைய வாசகங்கள் வழியாக நாம் அனைவரும் எந்த ஒரு செயலை செய்தாலும் முழுமையான மனநிறைவோடு நம்பிக்கையோடு தொடர்ந்து செய்திட வேண்டும் என்பதை இயேசுவிடம் இருந்த நாம் கற்கலாம்.  

மேலே சொன்ன கதையில் இறுதி நேரம் வரை நம்பிக்கையை இழக்காது உறுதியோடு இருந்த இளைஞன் தன் வார்த்தைகளால் தன் வேலையை தனக்கு உரியதாக மாற்றிக் கொண்டது போல,  இயேசுவும் இந்த மண்ணில் வாழ்ந்த காலத்தில் பல நேரங்களில் பல விதமான எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் இறைபணியை நம்பிக்கையை இழக்காது, முழுமூச்சோடு செய்து வந்தார் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.  

இயேசுவின் இந்த உறுதியான தன்னம்பிக்கை நிறைந்த, நம்பிக்கை ஊட்டக்கூடிய இந்த பணியின் விளைவாக பலர் தங்களது உடைமைகளை விற்று அவருக்கு பணிவிடை செய்தார்கள் என நாம் இன்றைய வாசகங்களில் வாசிக்கின்றோம்.  

இன்று நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில் தடைகளை கண்டு துவண்டுவிடாமல், கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி, தன்னம்பிக்கையோடும், நம்பிக்கையோடும் எடுத்த செயலில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு தொடர் முயற்சியில் ஈடுபட நாம் அனைவரும் அழைக்கப்படுகிறோம் . 
வாழ்க்கையில் நாம் எப்போதும் வாய் மூடி மவுனியாக அடங்கி ஒடுங்கி இருக்க வேண்டும் என்பதில்லை. சில நேரங்களில் நம் சுயரூபத்தைக் காட்ட வேண்டும். தேவைப்பட்டால் சில நேரங்களில் விஸ்வரூபம் எடுக்கும் வேண்டும். அப்போதுதான் வாழ்க்கையில் நாம் முத்திரையை பதிக்க முடியும் . 

விழிகளுக்கு தெரியாமல் புதைந்து கிடப்பதை தோண்டிப் பார்க்க துடைப்பவனே சிகரத்தை தொடுகிறான்

என்பார்கள் நாமும் நமது வாழ்வில் விடாமுயற்சியோடும், தன்னம்பிக்கையோடும் இயேசுவைப் போல இறுதிவரை இறையாட்சி பணியாற்றுவதில் தொடர்ந்திட இறை அருளை வேண்டியவர்களாலலாய் இயேசுவின் சீடர்களாக அவரை பின் தொடர்வோம். 

1 கருத்து:

  1. தன்னம்பிக்கைக்கும் இறை நம்பிக்கைக்கும் சிறந்த எடுத்துக்காட்டு இன்றைய வாசகமும் விளக்கமும்! வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...