புதன், 30 செப்டம்பர், 2020

நாம் இவர்களை ஏற்றுக் கொள்வோமா...? (1.10.2020)


இன்று "யார் பெரியவர்?" என்ற போட்டியானது எல்லா இடங்களிலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. நமது சமுதாயத்திலும் கூட ஒரு சில கட்சியில் யார் பெரியவர்? யார் வேட்பாளர்? யார் பதவியேற்பது?போன்ற போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதை நாம் அறிவோம். ஒவ்வொருவரும் யார் பெரியவர்?என்பதை அறிந்து கொள்வதிலும் தன்னை பெரியவராக காட்டிக் கொள்வதிலும் தன்னை மற்றவர்கள் அனைவரும் பெரியவர் என்று சொல்ல வேண்டும் என்பதிலும் ஆசை கொள்ளக் கூடியவர்களாக இருக்கிறோம். ஆனால் இயேசு கூறுகிறார், பெரியவர் என்பவர் சிறு குழந்தைகளைப் போல மாற வேண்டும். 

தங்களை சுற்றி இருக்கின்ற சூழலைப் பொறுத்து அந்த குழந்தையின் நடத்தை மாறுபடுகின்றது. குழந்தைகளிடமிருந்து நாம் பலவற்றை கற்றுக் கொள்ள முடியும். சிறுகுழந்தைகள் இயல்பாக பழக கூடியவர்கள்.  மனதில் வஞ்சகம் இல்லாதவர்கள்.சிறுகுழந்தைகள் எப்போதுமே கெட்ட வார்த்தைகள் பேசுவது இல்லை. மாறாக, அவர்கள் தாங்கள் கேட்ட வார்த்தைகளையே தான்பேசுகிறார்கள். 
ஒரு குழந்தையின் வளர்ச்சி பற்றி விஞ்ஞானிகள் உலகம் இவ்வாறாகக் கூறுகிறது. ஒரு குழந்தை தன்னுடைய 40 சதவிகித அறிவை வெளியே இருந்து கற்றுக் கொள்கிறது.60 சதவிகித அறிவை தனது குடும்பத்தில் இருந்தும் தன்னை சுற்றி இருக்கின்ற மனிதர்களிடத்தில் இருந்தும் கற்றுக்கொள்கிறது. நமது செயல்பாடுகளையும் நமது வார்த்தைகளையும் தான் குழந்தைகள் கற்றுக் கொள்கின்றனர். நம்மிடமிருந்து கற்றுக் கொள்வதற்கு முன்பு வரை குழந்தைகளை குழந்தைகளாகவே இருக்கின்றனர். இவ்வாறு போட்டி இல்லாமல் பொறாமை இல்லாமல் தன்னிடம் இருப்பதை அடுத்தவரோடு பகிர்ந்து கொள்ளக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.

      குழந்தைகளின் இயல்பை குடும்பத்தின் அனுபவத்தின் வாயிலாக அறிந்து கொள்வோம். மெர்லின் என்ற ஐந்து வயது குழந்தைக்கு எட்டு வயதில் ஒரு அண்ணன். அவனுக்கு இதய நோய்‌.
அவனது பெற்றோர் மருத்துவ சிகிச்சைக்கு அவர்களது கையிலிருந்த பணத்தை செலவு செய்துவிட்டு மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துக் கொண்டிருந்தனர். அப்போது மெர்லின் தன்னிடமிருந்த சிறிது பணத்தை எடுத்துக்கொண்டு ஒரு மருந்தகத்திற்கு சென்று தன்னிடம் இருந்த ஐந்து ரூபாயைக் கொடுத்து மிராக்கில் தாருங்கள். என் அண்ணனுக்கு மருந்து கொடுக்க வேண்டும் என்று கூறினாள். ஆனால் அந்த மருந்து கடைக்காரர்  அவ்வாறு ஒரு மருந்து இல்லை என்று கூறினார். இதையெல்லாம் அதை பார்த்துக்கொண்டிருந்த அந்த மருந்து கடைக்கு அருகில் இருந்த மருத்துவர்  இவளின் வார்த்தைகளைக் கேட்டு  அவள் அருகில் வருகின்றார். உங்கள் அண்ணனைக் காப்பாற்ற முடியாது மாறாக கடவுள்தான் ஏதாவது மிராக்கல் செய்து காப்பாற்ற வேண்டும் என இதய அறுவை சிகிச்சை நிபுணர் கூறிய வார்த்தைகளை கேட்டு, அந்த மிராக்கள் என்பதை மருந்து என நினைத்துதான் அந்த சிறுமி மருந்துக் கடைக்காரரிடம் மிராக்கள்  மருந்தை கேட்டாள்.இதை அறிந்த மருத்துவர் தன்னை உன் வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு அந்த சிறுமியிடம் கூறினார்.

மெர்லின் அவரை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றாள். அந்தப் புதிய மனிதர் மெர்லின் தன் அண்ணன் மேல் கொண்டிருந்த பாசத்தை கண்டு வியந்தார். ஒரு இதய அறுவை சிகிச்சை நிபுணராக இருந்த படியால் அந்த சகோதரனுக்கு தேவையான மருத்துவ சிகிச்சையையும் மருத்துவச் செலவையும் தானே ஏற்றுக்கொண்டார். சில நாட்களின் தொடர் சிகிச்சைக்குப் பிறகு கடின முயற்சியால் அண்ணன் நலமாக வீடு திரும்பினான்.


இன்று ஒரு குழந்தையை சுற்றி இருக்கக் கூடிய சூழல் தான் அக்குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு குழந்தையின் வளர்ச்சியில் அக் குழந்தையை சுற்றி இருக்கக் கூடிய அனைவருக்கும் பொறுப்பு உள்ளது.இத்தகைய குழந்தைகளைப் போலவே நாம் வாழ வேண்டும் என்று இயேசு அழைப்பு விடுக்கிறார்.இந்தக் குழந்தைகளைப் போல இச்சமூகத்தில் இருக்கக்கூடிய சில நல்லவர்களை நாம் கண்டு கொள்ளவும் அவர்களை ஏற்றுக் கொள்ளவும் இன்றைய நாளில் இயேசு வலியுறுத்துகிறார்.

இந்தக் குழந்தைகளைப் போல நல்ல உள்ளம் கொண்டவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களை நல்லவர்களை இன்றைய நாளில் நாம் கண்டு கொள்ளவும் அவர்களை கடவுளின் பெயரால் ஏற்றுக் கொள்கிறவரும் விண்ணரசில் மிகப் பெரியவர் ஆவார். 

அடுத்தவர்களின் நலனுக்காக ஒருவர் வீதியில் இறங்கி போராடுகின்றார் என்றால் அவரை நம் சகோதரராக பாவிப்போம்.
ஏனெனில் குழந்தைகள்  அவர்களை கடவுளின் பெயரால் ஏற்றுக் கொள்பவரே விண்ணரசில் மிகப் பெரியவர்.


குழந்தைகள் சண்டைகள் வந்தாலும் இணைந்து விளையாட கூடியவர்களாக இருக்கக்கூடியவர்கள். இந்த குழந்தைகளை போலவே சமூகத்தில் எத்தனை அநீதிகள் நடந்தாலும்அதைத் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியாக கருதி அடுத்தவரின் நலனுக்காக அவரது தோள் மேல் கை போட்டுக் கொண்டு, அவர்களோடு இணைந்து செல்லக்கூடிய குழந்தைகளைப் போல எளிய மனம் கொண்ட சில நல்ல உள்ளங்கள் உண்டு. இவர்களை கடவுளின் பெயரால் ஏற்றுக் கொள்ள இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்பு விடுக்கின்றன.  

    இவ்வாறாக நல்மனம் படைத்தவர்களில் ஒருவர்தான் இன்று நாம் விழா காணும் புனித குழந்தை ஏசுவின் சிறுமலர் தெரசா. இவர் 1863 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இரண்டாம் நாள், பிரான்ஸ் நாட்டில் உள்ள லூயிஸ் மார்ட்டின் தம்பதியருக்கு கடைசி குழந்தையாக பிறந்தார். மிகுந்த பக்தி நிறைந்த இவரது குடும்ப பாரம்பரியத்தை பின்பற்றி இவரும் தன்னுடைய மூத்த சகோதரிகளைப் போல துறவற வாழ்விற்கு தன்னை அர்ப்பணிக்க விரும்பினார். 
     1890ஆம் ஆண்டில் இவர் கார்மெல் மடத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். அங்கு தெரேசா தான் செய்த அனைத்தையும் கிறிஸ்துவின் மீது கொண்ட அன்பினால் செய்தார்.
      தனது இல்ல தலைவியின் உத்தரவிற்கு கீழ்ப்படிந்த வராங்க தனது வாழ்வின் நிகழ்வுகளை எல்லாம் ஓர் ஆன்மாவின் கதை என்னும் நூலாக தொகுக்கின்றார். அவர் குறிப்பிட விரும்பும் காரியம் "சிறிய வழி "ஆகும்.தான் செய்யும் சிறு சிறு செயல்களிலும் இயேசுவின் மீது கொண்ட அன்பினால் அவற்றைச் செய்து அதன் வழியாக விண்ணகத்திற்கு ஆன்மாக்களை சேர்த்தவர். இன்று மறைபரப்பு நாடுகளுக்கு பாதுகாவலராக போற்றப்படுகின்றார்.
              இன்று நமது செயல்பாடுகளிலும் இயேசுவின் மீது நாம் கொண்டிருக்கும் அன்பு வெளிப்பட, எளிய மனமும் எல்லோரிடமும் அன்பும் கொண்டவர்களாக விண்ணரசில் பெரியவர்களாக வாழ்ந்திட இன்றைய நாளில் இறையருள் வேண்டுவோம்!

2 கருத்துகள்:

  1. குழந்தை தெரசாவின் சிறிய வழியை நமதாக்கி இறைவனின் கரத்தில் அழகிய மலராக அழகிய பந்தாக இறைவனின் இதயமாக உண்மையாக அன்போடு வாழ்வோம்!

    பதிலளிநீக்கு

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...