ஞாயிறு, 27 செப்டம்பர், 2020

குழந்தை மனம் வேண்டும் (28.09.2020)


குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று! 
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று!
                         என்று அழகான கவிதை ஒன்று கூறுகிறது. 
                   இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு சிறு பிள்ளையை போல ஆண்டவரை ஏற்றுக்கொள்கின்ற எவரும் அவரை அனுப்பிய தந்தையையே ஏற்றுக் கொள்கிறார் என்கிறார்.
சிறுகுழந்தையின் உள்ளம் எப்பொழுதும் மகிழ்ச்சியை தன்னகத்தே கொண்டிருக்கும். தன்னுடைய மகிழ்ச்சியை புன்னகையின் மூலமும் மலர்ந்த முகத்தின் மூலம் வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும். ஒரு நிமிடம் அதற்கு துன்பங்கள் வந்தாலும் அடுத்த நிமிடம் அந்த துன்பத்தையும் உதறிவிட்டு வாழ்க்கையின் இயல்பான மகிழ்ச்சியோடு தன்னை இணைத்துக் கொள்ளும். 
                        இவ்வாறாக சிறு பிள்ளையை போல தன்னை ஏற்றுக் கொள்பவர் பெரிய வராகக் கருதப்படுவார் என்று இயேசு கூறுகிறார். 
                        சிறுசிறு நல்லெண்ணங்கள் நற்சிந்தனைகளை உருவாக்கும்.
நற்சிந்தனைகள் நல்ல செயல்பாடுகளை உருவாக்கும்.
நல்ல செயல்பாடுகள் நல்வாழ்க்கையை உருவாக்கும்.
                  நமது சிறிய எண்ணங்களில் சிறிய காரியங்களில் நாம் இறைவனுக்கு பிரமாணிக்கமாய் இருந்தால், பெரிய காரியங்களில் ஆண்டவர் நம்மை உயர்த்துவார். அவருடைய விண்ணகத்தில் பங்கெடுக்கும் உரிமையை நமக்கும் தருவார். 

        ஒரு பாடல் ....
குழந்தை மனம் வேண்டும்        
                             - இறைவா!
 குழந்தை மனம் வேண்டும்!

மதம் இனம் மொழி பேதங்கள் தெரியாத குழந்தை மனம் வேண்டும்!
சமத்துவம் அன்பில் நாளும் வளர்ந்திடும் குழந்தை மனம் வேண்டும்!
பகைமை கயமை சிறிதும் அறியா குழந்தை மனம் வேண்டும்!
மன்னித்து மறக்கும் பண்பு ஒன்றே கொண்டிடும் குழந்தை மனம் வேண்டும்!

மண்ணக வாழ்வின் மாண்பினை காத்திட குழந்தை மனம் வேண்டும்!
விண்ணக வாழ்வை இகமதில் கண்டிட குழந்தை மனம் வேண்டும்!
வான்புகழ் இயேசுவின் நல்லாசி பெற்றிட குழந்தை மனம் வேண்டும்!
வானக அரசின் திறவுகோல் அடைந்திட குழந்தை மனம் வேண்டும்!
     நாம் வாழும் இந்த உலகில் சிறு பிள்ளையை போன்று நமது மகிழ்வை அனைவருடனும் பகிர்ந்து கொள்பவர்களாக இம்மண்ணகத்தில் நாம் வாழும் இடங்களில் விண்ணகத்தை உருவாக்க நல்ல எண்ணம் கொண்டவர்களாக தாழ்ச்சியான உள்ளத்தோடு வாழ சிறு குழந்தையின் மனம் வேண்டும் என்று வரம் கேட்போம்!

2 கருத்துகள்:

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...