சனி, 3 ஏப்ரல், 2021

அறிவோம் உயிர்ப்பு பற்றி .... (4.4.2021)

அறிவோம் உயிர்ப்பு பற்றி ....
 கிறிஸ்தவ மக்கள் நேற்றய தினத்தை பெரிய வெள்ளியாக கொண்ட்டினர் புனித சனி என்ற இன்று அவர்கள் மரித்த இயேசுவின் உயிர்ப்புக்காக காத்திருப்பர் . இயேசு , தான் வாழ்ந்துக்காட்ட வந்த இறையன்பை முழு அளவில் வெளிப்படுத்தவே தன்னுயிர் துறந்து சிலுவையில் மரித்தார் ஒரு கவிஞன் தன் கற்பனையில் எழுந்த ஒரு காட்சியை இப்படி எழுதுகிறார் இறைவனிடத்தில் , நீர் என்னை எவ்வளவு அன்பு செய்கிறேன் என்று கேட்டேன் அவர் இரண்டு கைகளையும் அகல விரித்து , இவ்வளவு அன்பு செய்கிறேன் என்று காட்டி சிலுவையில் கைகளை விரித்து மரித்தார் தான் சிலுவைச் சாவைநோக்கி செல்லும் முன்பே தாம் அன்புக்கூர்ந்த நண்பர்களை இறுதிவரை அன்புக்கூர்ந்து அவர்களோடு இறுதியாக பந்தி அமர்ந்து தன் அன்பை வெளிப்படுத்த முற்பட்டார் விருந்தாடலையே தன் நினைவுச் சின்னமாக அவர்களுக்கு கொடுத்து அதனை அவர் நினைவாக செய்யும்படி பணித்தார் . இதனையே இன்றும் கிறிஸ்த்தவர்கள் நற்கருணைப் பலியாக கொண்டாடிவருகின்றனர் . அந்த அதோடு அவர் நில்லாமல் , நான் உங்களை அன்பு செய்ததுபோல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செய்யுங்கள் , என்று ஒரு புதிய கட்டளையைப் பிறப்பிக்கிறார் இவ்வாறு தன்னுடைய அன்பையே பிறரன்புக்கு இலக்கணமாகத் தருகிறார் அவருடைய அன்பு எத்தன்மை கொண்டதாக இருந்தது ? அந்த விருந்தின்போது நடந்த ஒரு நிகழ்வே நமக்கு அதனை தெளிவுப்படுத்துகிறது அந்த பந்தியிலிருந்து அவர் எழுந்து அடிமைகளேச் செய்யத்தகுந்த பாதம் கழுவும் பணியை செய்கிறார் அதற்கு காரணம் அவருடைய நண்பர்கள் தங்களுள் யார் பெரியவர் என்ற தர்க்கத்தில் ஈடுப்பட்டு , அதிகாரப் பகிர்விற்காக போட்டியும் பொறாமையும் கொண்டவர்களாக நடந்துக்கொண்டிருந்தனர் அவர்களுள் ஒருவரும் முன்வந்து பிறருடைய பாதத்தைக் கழுவும் மனநிலையில் இருக்கவில்லை மொத்தத்தில் அது ஒரு அன்பற்ற சூழலாக இருந்தது எனலாம் . அந்த தருணத்தில்தான் இயேசு தாமாக முன்வந்து தன் நண்பர்களுடையப் பாதங்களை கழுவுகிறார் . அதில் நல்லவர் கெட்டவர் என்ற எவ்விதப் பாகுபாடுமின்றி எல்லோரையும் தன்னைக் காட்டிக்கொடுக்கவிருந்த யூதாஸின் பாதத்தையும் கழுவி முத்தமிடுகிறார்.

அன்பு என்பது ஆண்டான் அடிமை , உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற சூழலில் மலரும் . ஒன்றல்ல என்றாலும் , போட்டியும் பொறாமையும் அன்பர்கள் மத்தியில் தலைதூக்கும் போது அதற்கு ஒரே அருமருந்து தாழ்ச்சியாகும் ஆசையும் மோகமும் தூண்டும் மனதாராளமும் சகிப்புத்தன்மையும் அறுபதோ முப்பதோ நாட்களோடு மங்கிப்போவிடுவன என்பது நமக்குத் தெரிந்த ஒரு வாழ்க்கை எதார்த்தமாகும் அத்தகைய வாழ்க்கை எதார்த்தத்தின்போது அன்பை இன்னும் வளரச்செய்வது அன்பர்கள் மத்தியில் முளைத்தெழும் தாழ்ச்சியாகும் ஆசையையும் மோகத்தையும் கடந்து தாழ்ச்சிக்கலந்த , தியாகம் நிறைந்த பிறரைத் தன்னிலும் சிறந்தவராக கருதும் நேரம்தான் உண்மையான மலர்கிறது அன்பு தாழ்ச்சியோடு கைகோர்க்கும்போதுதான் அது நிறைவு தருவதாகவும் , பிறரை வாழவைப்பதாகவும் இருக்கமுடியும் என் வசதி , என் நிறைவு . என் மகிழ்ச்சி , என் விருப்பம் என்றுமட்டும் வாழும் வாழ்க்கை வெறும் என்புதோல் போர்த்த உடம்பாகவே இருக்கும் பாதம் கழுவுதல் பிறரை உயர்வாக கருதிப்போற்றும் ஒரு செயலாகும் உயர்வு என்பது நமக்கு கீழ் எத்தனைப்பேர் இருக்கின்றனர் என்பதைக் கொண்டு கணிக்கப்படும் ஒன்றல்ல . என்னால் எத்தனைப்பேர் உயர்த்தப்பட்டுள்ளனர் என்பதைக் கொண்டு கணிக்கப்படவேண்டிய ஒன்று பணிவிடைப் பெறுவதிலன்று பணிவிடைச் செய்வதிலேயே மேன்மை அடங்கியுள்ளதென்று உணர்வோமா ?

1 கருத்து:

  1. பிறரை உயர்த்தி பார்ப்பதே உண்மையான உயர்வு என்று உயர்வுக்கும் மேன்மைக்கும் இலக்கணம் வகுத்து புதிய கருத்துக்கள் தந்த அருட்சகோதரர் சகாயராஜ் அவர்களுக்கு நமது அன்பின் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...