வியாழன், 8 ஏப்ரல், 2021

இறைவன் துணை நிற்பார்...? (9.4.2021)

இறைவன் துணை நிற்பார்...?

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
 இயேசுவின் பெயரால் நல்லது செய்ததற்காக பலராலும் இயேசுவின் சீடர்கள் வெறுக்கப்படுகிறார்கள். இதையே இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிக்கின்றோம்.  உயிர்த்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன்னுடைய சீடர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் அவர்களோடு மீன்பிடிக்கச் செல்கிறார். அவர்களோடு உணவருந்துகிறார் என்பதனை இன்றைய நற்செய்தி  வாசகத்தின் வழியாக அறிகிறோம்.

நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில் பல நேரங்களில் நலமான நல்ல பணிகளை நாம் முன்னெடுக்கும் போது பலவிதமான தடைகளையும் தடங்கல்களையும் சந்திக்க நேரலாம்.  உடன் இருப்பவர்களே நம்மை விட்டு ஒதுங்கி இருக்கக் கூடிய சூழ்நிலைகள் உருவாகலாம். ஆனால் எந்த நேரத்திலும் நாம் கொண்டிருக்கும் நம்பிக்கையை நாம் இழக்காது தொடர்ந்து நற்செயல்கள் செய்து கொண்டே இருக்க இன்றைய வாசகங்கள் அழைப்பு தருகின்றன. இயேசுவின் பெயரால் ஒருவரை குணப்படுத்திய போதும், ஒருவரை குணப்படுத்தியதற்காக  பலவிதமான இன்னல்களை பேதுருவும் உடனிருந்த சீடர்கள் பலரும் அனுபவித்தார்களோ,  அவர்களைப் போலவே நாமும் நலமான பணிகளை முன்னெடுக்கும் போது பலருடைய எதிர்ப்புகளை சந்திக்கும் போது, மனம் தளராது தொடர்ந்து பயணிக்க அழைக்கப்படுகிறோம். நமது  நம்பிக்கை உறுதியோடு இருக்கும் போது இறைவன் நம்மோடு இருந்து நம்மை வழி நடத்துவார். இதையே தான் இன்று ஆண்டவர் இயேசு  தன்னுடைய உயிர்ப்பிற்கு பிறகு தன்னுடைய உடனிருப்பை தன் சீடர்களோடு பகிர்ந்து கொள்வதை புரிந்து கொள்ளலாம். நாம் தொடர்ந்து நம்பிக்கையோடு பயணிக்கும் போது இறைவன் நம்மோடு இருந்து நலமான நல்ல பணிகளை செய்வதற்கு துணை நிற்பார். அவர் மீது அதீத ஆழமான நம்பிக்கை கொண்டவர்களாக தொடர்ந்து நல்ல செயல்களை முன்னெடுக்க கூடியவர்களாக இன்றைய நாளில் இறையருளை வேண்டுவோம்.

1 கருத்து:

  1. ஆம் சகோ.. உமக்கும் ஆண்டவர் எந்நாளும் துணை நிற்பார். ஆமென். இனிய நாளாக அமைய வாழ்த்துகள்.. 🙏

    பதிலளிநீக்கு

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...