வியாழன், 10 மார்ச், 2022

சரி செய்ய....(11.03.2022)

சரி செய்ய....

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
 இன்று நம் தாய் திரு அவையானது நமது சக உடன் பிறந்தவர்களோடு உள்ள உறவில் நாம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை நமக்கு எடுத்துரைக்கிறது.  சகோதர சகோதரிகளை முட்டாள் என திட்டுபவர் கூட,  கடுமையான தண்டனைக்கு உள்ளாவார்கள் என இறைவன் இயேசு வலியுறுத்துகிறார். நம்மோடு பிறந்தவர்களோடு நாம் நல்லுறவை கொண்டு வாழ வேண்டும் என்பதே இறைவன் இந்த நாளில் நமக்கு தருகின்ற செய்தி.  பல நேரங்களில் பல ஆண்டுகளாக நம் உடன் பிறந்தவர்களுடன் முறையான உறவு இல்லாமல் சண்டையோடும் சச்சரவுகளோடும் பிரிவினைகளோடும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் உறவுகளோடு மனவருத்தங்கள் உருவானாலும் அதனையெல்லாம் மன்னித்து அவர்களை ஏற்றுக் கொண்டு நல்ல முறையில் இணைந்து வாழ வேண்டும் என்பதே இறைவன் இன்றைய நாளில்
வலியுறுத்துகிறார். 

             இந்த தவக்காலத்தில் நமது உறவுகளை குறித்து நாம் சிந்திக்க கடமைப்பட்டிருக்கிறோம். பிரிந்து போன உறவுகளை சரி செய்து கொண்டு ஒருவர் மற்றவரை அன்பு செய்யவும், முழுமையான மனதோடு ஏற்றுக் கொள்ளவும் அருள் வேண்டி இந்த திருப்பலியில் பக்தியோடு இணைவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...