வெள்ளி, 11 மார்ச், 2022

இயேசுவின் மனநிலையில் நமது பயணம்...(12.3.2022)

இயேசுவின் மனநிலையில் நமது பயணம்

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். 
உதிக்கின்ற சூரியனும்,  பெய்கின்ற மழையும்,  அகிலத்தில் உள்ள அனைவருக்கும் உரியதாக இருக்கிறது.  உதிக்கின்ற சூரியன் நல்லோர் தீயோர் என பார்த்து தனது ஒளிக் கதிர்களை அவர்கள் மீது வீசுவதில்லை.  அனைவர் மீதும் வீசுகிறது.  விழுகின்ற மழைத்துளியானது நல்லோர் தீயோர் என பார்த்து பெய்வதில்லை. மாறாக, அது அனைவருக்குமானதாக வந்து சேருகிறது.  இந்த மழையையும் வெயிலையும்,  கதிரவனின் ஒளியையும் இறைவனது இயல்புகளாக கண்டிட இன்றைய நாள் வாசகங்கள் அழைப்பு தருகின்றன.  கடவுளின் பார்வையில் நாம் அனைவரும் சமமானவர்களே. நம்மிடையே பலவிதமான ஏற்றத்தாழ்வுகளும் பாகுபாடுகளும் பிரிவினைகளும் உருவெடுத்திருந்தாலும் கடவுளின் பார்வையில் நாம் அனைவரும் சமமானவர்கள்.  கடவுளின் இயல்பையே நாம் கொண்டிருக்க வேண்டும் என்பதை இந்த தவக்காலம் நமக்கு வலியுறுத்துகின்றது. 



ஏற்கெனவே இந்த தவக்காலத்தில், 
நாம் ஒவ்வொருவருமே ஒரு சில முயற்சிகளை மேற்கொண்டிருப்போம்.   மேற்கொள்ளுகின்ற இந்த தவ முயற்சிகளில் நாம் இன்னும் ஆழப்பட இன்றைய வாசகங்கள் நமக்கு வலியுறுத்துகின்றன. ஒவ்வொருவருமே ஆண்டவர் இயேசுவின் மனநிலையை நமது மனநிலையாகக் கொண்டிருக்கின்ற அழைக்கப்படுகிறோம்.  எப்படி கடவுள் பாகுபாடு பாராது,  நல்லோர் மேலும் தீயோர் மேலும் மழையைப் பெய்விக்கின்றாரோ, கதிரவனின் ஒளியை உதிக்கச் செய்கின்றாரோ,  அதுபோல நாமும் எந்தவித பாகுபாடுமின்றி அனைவரையும் ஏற்றுக் கொண்டு வாழக்கூடிய மனிதர்களாக இச்சமூகத்தில் இருக்க அழைக்கப்பட்டிருக்கிறோம்.  அதன் அடிப்படையில் தான் நாம் பகைவர்களையும் அன்பு செய்ய வேண்டும் என்பதை இன்றைய நாள் வாசகங்கள் வலியுறுத்துகின்றன. பகைவரையும் அன்பு  செய்வதற்கு சொல்லுவது எளிதாக இருக்கும். ஆனால் செயலில் காட்டுவதற்கு அது கடினமாகத் தோன்றலாம்.  ஆனால் இயேசு கிறிஸ்து இந்த சமூகத்தில் மனிதனாக வாழ்ந்த போது, தன்னை குற்றுயிரும் குலை உயிருமாக சிலுவையில் தொங்க வைத்தவர்களுக்கு மத்தியில், 
அந்த நிலைக்கு அவர்களை ஆளாக்கியவர்களை, மனனித்தார். அவர்களுக்காக தந்தையினிடத்தில் மன்றாடினார். 

இந்த இயேசுவைப் போல நீங்களும் நானும் மாற வேண்டும் என்பதுதான் இந்த தவக்காலம் நமக்கு வலியுறுத்துகின்ற  வாழ்வுக்கான பாடம்  என்பதை உணர்ந்து கொண்டவர்களாக,  நாம் ஆண்டவர் இயேசுவின் மனநிலையை நமது மனநிலையாக்கிக்கொள்ள இறையருள் வேண்டி இந்த தவகாலத்தில் தொடர்ந்து இணைந்து இந்த திருப்பலியில் பக்தியோடு செபிப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...