செவ்வாய், 15 மார்ச், 2022

வாழ்வுக்கான முத்தான சிந்தனைகள்...(16.3.2022)

வாழ்வுக்கான மூன்று முத்தான சிந்தனைகள்...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். 
   இன்றைய இறைவார்த்தை பகுதியானது வாழ்வுக்கான  முத்தான சிந்தனைகளை...வழங்குகிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தனது சாவினை மூன்றாம் முறையாக சீடர்களுக்கு அறிவுறுத்துகிறார்.  தான் எத்தகைய துன்பங்களை எல்லாம் படப் போகிறோம் என்பதை நன்கு அறிந்திருந்த நிலையிலும் துன்பத்தை எதிர்கொள்வதற்கு துணிவோடு இயேசு செல்வதை இயேசுவின் வாழ்வு நமக்கு வெளிப்படுத்துகிறது.  

இன்றைய வாசகங்கள் இயேசு என்னுடைய துன்ப கிண்ணத்தில் உங்களால் பருக இயலுமா? என்ற கேள்வியை எழுப்புகிறார்.


பொதுவாக யூதர்கள் அப்பத்தை பகிர்தல் என்பதை மகிழ்வின் அடையாளமாகப் பார்த்தனர்.  அதே சமயம் யூத சமூகத்தில் கிண்ணத்தை பகிர்தல் என்பது துன்பத்தை பகிர்தல் என்ற அடிப்படையில் பார்க்கப்பட்டது.  

      என்னுடைய கிண்ணத்தில் உங்களால் பருக இயலுமா?  என்ற இயேசுவின் கேள்விக்கு சீடர்கள் அறிந்தும் அறியாமலும், இயலும் என்றார்கள். இயேசுவும் ஆம்! நீங்கள் என் கிண்ணத்தில் பருகுவீர்கள் என்று கூறினார்.  எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதை அறிந்தவராய், இவர்கள் எந்த அளவிற்கு தனக்கு சாட்சி உள்ளவர்களாக இருப்பார்கள் என்பதை நன்கு அறிந்தவராய், இயேசு அவர்களின் வார்த்தைகளை கேட்டு அதற்கு பதில்  மொழி தருகிறார்.

         இன்று உம்மோடு இருப்போம்,  உமது துன்பத்தில் பங்கெடுப்போம் என சொல்லக் கூடியவர்கள் எல்லாம், தன்னை விட்டுவிட்டு ஓடி விடுவார்கள் என்பதையும் இயேசு அறிந்திருந்தார்.  அதே இயேசு தனது இறப்பு உயிர்ப்புக்கு பிறகாக இவர்கள் மீண்டும் நம்பிக்கைக்குரிய சாட்சிய வாழ்வு வாழ்வார்கள் என்பதையும் அறிந்திருந்தார்.


துன்பங்களுக்கு மத்தியிலும் தன்னுடன் இருப்பவர்கள் தன்னை விட்டுவிட்டு செல்வார்கள் என்பதை அறிந்திருந்த நிலையிலும் ஆண்டவர் இயேசுகிறிஸ்து அனைத்தையும் ஏற்றுக்கொள்ள தன்னை தகுதி படுத்திக் கொண்டார்.  துணி போட்டு துன்பத்தையும் துரோகத்தையும் ஏற்றுக்கொள்ள தயாரானார் வளர வேண்டும் என்பதை இறைவன் நமக்கு உணர்த்துகின்றன பாடமாக உள்ளது. 
 இயேசு கொண்டிருந்த அதே மன நிலையை நாமும் கொண்டிருக்க இன்றைய நாள் வாசகங்கள் நமக்கு அழைப்பு விடுக்கிறன.



இயேசு தனது துன்பத்தை பற்றி பேசிக்கொண்டிருக்க,   தன்னுடைய மகனின் நலன்களை மட்டுமே முன்னிறுத்தியவளாய் செபதேயுவின் மனைவியானவள் தன் பிள்ளைகளுக்கு பதவி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, வலப்புறமும் இடப்புறமும் அரியணையில் இடம் கேட்டு நிற்கிறாள். 

      தாய்மார்களின் குணம் பெரும்பாலும் தன் குழந்தைக்கு எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான். இன்று தன் குழந்தைக்கு எல்லாம் கிடைக்க வேண்டுமென சேர்த்து வைப்பதை விட தன் குழந்தைக்கு தேவையானதை அவர்களே உழைத்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற பாடத்தினை கற்பிக்க வேண்டிய கட்டாயம் நம் மனதில் இருக்கிறது. பிள்ளைகளின் மீது நாம் கொண்டிருக்கின்ற பாசம் என்பது அவர்களுக்கான இடத்தினை, அவர்களுக்கான வாழ்வை ஏற்படுத்திக் கொடுப்பதில் அல்ல. மாறாக, அவர்களுக்கான வாழ்வை அவர்களே ஏற்படுத்திக்கொள்ள அவர்களை தகுதிப்படுத்துவது என்பதை உணர்ந்துகொள்ள இன்றைய வாசகம் நமக்கு அழைப்பு விடுக்கிறது. 


 

    இன்றைய வாசகம் நமக்கு வெளிப்படுத்துகிற வாழ்வுக்கான பாடத்தை கற்க முயல்வோம்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...