புதன், 30 மார்ச், 2022

நமது வாழ்வால் நாம் சான்று பகரும் மனிதர்களாக மாறுவோம்!...(31.3.2022)

நமது வாழ்வால் நாம் சான்று பகரும் மனிதர்களாக மாறுவோம்!

 இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். 
யூத சமூகத்தைப் பொறுத்தவரை ஒருவர் தன்னைக் குறித்து
 தானே சான்று பகர்ந்தால் அதை அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஒருவரை குறித்து இருவர் அல்லது மூவர் கூறக்கூடிய சான்றுகளின் அடிப்படையில் மட்டுமே ஒன்றின் உண்மை தன்மையை உணர்ந்து கொள்வார்கள்.  அவ்வடிப்படையில் இயேசு தன்னை கடவுளின் மகன் என அறிக்கையிட்டபோது அதை யூதர்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.  ஆனால் இயேசு விவிலியத்தின் துணை கொண்டும்  திருமுழுக்கு யோவானின் வார்த்தைகளைக் கொண்டும் இறைவாக்கினர் மோசேயின் சட்ட திட்டங்களை கொண்டும் தன்னை மெசியா எனவும் இறைமகன் எனவும் சான்று பகர்கின்றார்.  இயேசு கொடுத்த வார்த்தைகளின் அடிப்படையில் இயேசுவே உண்மையான இறைமகன் என்பதை உணர்ந்து கொள்ள மறுத்து அவரை கொலை செய்வதற்கும், அவரை அழிப்பதற்கும் வழி தேடக்கூடிய மனிதர்களாகத்தான் யூதர்களும் சதுசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் செயல்பட்டார்கள் என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு எடுத்துரைக்கிறது. 

             இன்று இந்த இறை வார்த்தை பகுதி நமக்குத் தருகின்ற வாழ்வுக்கான பாடம் என்ன என சந்திக்கின்ற போது நாம் ஒவ்வொருவருமே நமது வாழ்வால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு சான்று பகரக் கூடிய மனிதர்களாக இருக்க அழைக்கப்படுகிறோம்.

                நாம் ஆண்டவருக்கு சான்று பகர வேண்டுமாயின் நமது வாழ்வானது ஆண்டவரின் வார்த்தைகளை மையப்படுத்திய வாழ்வாக அமைய வேண்டும்.  இறைவனது வார்த்தைகளை நமது வாழ்வாக நாம் மாற்றிக் கொள்ளுகிற போது நமது வாழ்வால் இறைவனுக்கு சான்று  பகரக்கூடிய மனிதர்களாக நாம் மாறிட முடியும். அதற்கான அருள்வேண்டி இன்றைய நாளில் தொடர்ந்து இறைவனிடத்தில் செபிப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...