ஞாயிறு, 13 மார்ச், 2022

நாம் வாழ ...அவர் காட்டும் வழிகள்....(14.03.2022)

நாம் வாழ ...அவர் காட்டும் வழிகள்....


இன்றைய நாள் இறைவார்த்தை வழியாக ஆண்டவர் இயேசு கிறிஸ்து நாம் எப்படி வாழவேண்டும் என்பதை  கற்பிக்கின்றார்.
மனிதர்களாகிய நாம் சக மனிதர்களை தீர்ப்படாது வாழ வேண்டும் என்பதே இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில்  இயேசுவின் முதல் படிப்பினையாக இருக்கிறது.


தீர்ப்பிடாதீர்கள், தீர்ப்புக்குள்ளாக மாட்டீர்கள் என்பது இயேசு சொல்கிற முதல் செய்தி. பிறரை குற்றவாளி என தீர்ப்பிட எழும்போதே நாம் குற்றவாளிகளாக இருந்து கொண்டிருக்கிறோம் என்பது மிகப் பெரிய அடையாளம் என்பார்கள். 

 தீர்ப்பிடுதல் என்பது கடவுளுடைய பணி, நமது பணி அல்ல. இந்த உலகத்தைப் படைத்தவர் கடவுள்.  நமக்கு வாழ்வு என்கிற கொடையைக் கொடுத்தவர் கடவுள். கடவுள் தந்த இந்த அழகிய உலகத்தில் அடுத்தவரை குற்றவாளிகள் என நான் தீர்ப்பிடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதை இன்றைய நாள் இறைவார்த்தை வழியாக இந்த தவக்காலம் நமக்கு நினைவூட்டுகிறது.

 அதனைத் தொடர்ந்து நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில் இருப்பதை இல்லாதவரோடு பகிரக் கூடியவர்களாகவும் மன்னிக்கும் மனம் கொண்ட மாமனிதர்கள் ஆகவும் நாம் திகழ வேண்டும் என்பதை இயேசு வலியுறுத்துகிறார். இந்தத் தவக்காலத்தில் இறைவன் இறைவார்த்தை வழியாக நம்மோடு உரையாடுகின்ற இந்த வார்த்தைகளை மனதில் இருத்தி நமது செயல்களை நாம் சரி செய்து கொள்ள இந்த நாளில் இறைவன் அழைப்பு தருகிறார் . 

இறைவன் தருகின்ற அழைப்பை உணர்ந்து கொண்டவர்களாய் நாம் வாழுகிற சமூகத்தில் சக மனிதர்களை தீர்ப்பிடாமலும் மன்னிப்பை வழங்கக்கூடிய மனிதர்களாகவும் நம்மிடம் இருப்பதை இல்லாதவரோடு பகிரும் மனம் கொண்ட மனிதநேயமிக்கவர்களாகவும் வாழ  இந்த திருப்பலியில் தொடர்ந்து ஜெபிப்போம் ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...