ஞாயிறு, 27 மார்ச், 2022

நம்பிக்கையில் வேரூன்றியவர்களாக மாறிட...(28.3.2022)

நம்பிக்கையில் வேரூன்றியவர்களாக மாறிட...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். 
     பதவிக்கு வருவதற்கு முன்பாக மக்களை தேடிச் செல்வதும், பதவியைப் பெற்ற பிறகு தன்னை தேடி மக்களை வர செய்வதுமே இன்றைய அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்களின் போக்காக இருந்து கொண்டிருக்கக்கூடிய எதார்த்தமான  சூழ்நிலையில் இன்று பிலாத்துவின் அரண்மனையில் பணி ஆற்றிய ஒரு படைத் தலைவன் தன் மகனின் நலனுக்காக ஆண்டவர் இயேசுவை நாடிச் செல்வது குறித்து நாம் வாசிக்க கேட்டோம். 

      பொதுவாகவே மனிதர்கள் தங்கள் வாழ்வில் துன்பங்கள் வருகிறபோது இறைவனை நாடக் கூடியவர்களாக இருக்கிறார்கள். சில நேரங்களில் நாமும் அப்படிப்பட்ட மனிதர்களாக இருந்திருக்கலாம்.  ஆனால் இந்த நாளில் இறைவன் மீது நம்பிக்கை கொண்ட மனிதர்களாக நாம் வாழ நமக்கு அழைப்பினை தருகிறார். நாம் பதவியில் இருந்தாலோ, சமூகத்தில்  மதிக்கத்தக்க மனிதர்களாக இருந்தாலோ, அல்லது பாமர ஏழை மக்களாக இருந்தாலோ, கடவுளின் பார்வையில் நாம் சமமானவர்கள். நம்பிக்கையோடு அவரை நாடிச் சொல்லுகிற போது அவர் நமது தேவைகளை 
நிறைவேற்றக்கூடியவராக இருக்கிறார்.

                      இந்த தவக்காலம் என்பதே ஆண்டவரோடு உள்ள உறவில் நாம் ஆழப்பட  வேண்டும் என்பதை நமக்கு வலியுறுத்துகிறது. இந்தத் தவக்காலத்தில் நாம்
நம்பிக்கையோடு ஆண்டவரை நாடிச்செல்ல அழைக்கப்படுகிறோம்.  நம்பிக்கையோடு நாடிச் செல்லுகின்ற போது நாம் அவரிடமிருந்து பல நலன்களை  பெற்றுக் கொள்ளலாம். 

                     நம்பிக்கையில் வேரூன்றியவர்களாக மாறிட, இறைவனிடத்தில் அருள்வேண்டி தொடர்ந்து இந்த திருப்பலி வழியாக செபிப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...