செவ்வாய், 21 செப்டம்பர், 2021

நம்பிச் சென்றால் ஏற்கப்படுவோம்!... (22.9.2021)

நம்பிச் சென்றால் ஏற்கப்படுவோம்!

 ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
 இன்றைய நாள் வாசகங்கள் அனைத்தும் ஆண்டவர் இயேசுவின் மீது அபரிமிதமான நம்பிக்கை கொண்டு, எந்தச் செயலையும் செய்யவேண்டும் என்ற செய்தியினை நமக்குத் தருகின்றது.  ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன்னுடைய சீடர்களாக பன்னிருவரை தேர்ந்தெடுத்தார். அவர்களுக்கு பேய்களை ஓட்டவும், வல்ல செயல்களை நிகழ்த்தவும் அதிகாரங்களை வழங்கினார்.  தான் அவர்களுக்கு கொடுத்த அதிகாரங்களின் அடிப்படையில் அவர்களை மக்களிடம் சென்று பணியாற்ற அனுப்பி வைத்தார். butஅப்படி மக்களிடையே பணி செய்யச் செல்லுகின்றவர்கள்,  ஆண்டவரை முழுமையாக நம்பிச் செல்ல வேண்டும்.  மற்றவற்றை நம்பிச் செல்ல வேண்டியதில்லை என்ற பாடத்தை அவர்களுக்குக் கற்பித்தார்.  ஆண்டவர் இயேசுவின் மீது அதீத நம்பிக்கை கொண்டவர்களாய் பயணத்தில் ஈடுபட்டவர்கள் பல விதமான வல்ல செயல்களை செய்து வந்தார்கள் என்பது தான் இயேசுவுடன் இருந்த சீடர்களின் வாழ்வு நமக்கு வெளிப்படுத்துகின்றது. இன்று இயேசுவை பின்பற்றுகிறோம் என்ற பெயரில், அவரது பணியை செய்கின்றோம் என்ற பெயரில், ஒவ்வொரு நாளும் பயணித்துக் கொண்டிருக்கக் கூடிய நாம், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மீது ஆழமான உறுதியான நம்பிக்கையோடு பயணம் செய்கிறோமா? அவரை உறுதியாகப் பற்றிப் படித்துக் கொண்டவர்களாய் நல்ல செயல்கள் செய்வதில் ஈடுபடுகிறோமா? அல்லது நமது சுய லாபத்திற்காக அவரை பயன்படுத்துகிறவர்களாக நாம் இருக்கிறோமா? கேள்வியை நமக்குள்ளாக எழுப்பிப் பார்ப்போம். 
              ஆண்டவரை இறுகப் பற்றிப் பிடித்துக் கொண்டு,  நாம் எந்தச் செயலையும் செய்ய முன்வரும் போதும் கண்டிப்பாக அச்செயலானது இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படும்.  நம்பிச் செல்லும் பொழுது மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். எனவே, அழைத்த ஆண்டவரின் மீது அதீத நம்பிக்கை கொண்டவர்களாய் தொடர்ந்து அவரது பாதையில் பயணம் செய்து அவரது பணியினை  இம்மண்ணில் மலரச் செய்ய இன்றைய நாளில் இறையருளை வேண்டுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...