வியாழன், 30 செப்டம்பர், 2021

தாய்க்குரிய நல்ல மகனாக மாறிட...(1.10.2021)

தாய்க்குரிய நல்ல மகனாக மாறிட...


இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

இயேசுவை பின்பற்றி கொண்டிருக்கக்கூடிய அனைவரும் கிறிஸ்தவர்கள் என அழைக்கப்படுகிறார்கள். இந்த கிறிஸ்தவர்களின் இறையியல் என்பதை கோழிக்கஞ்சு இறையியல் என குறிப்பிடுவார்கள்.

அதாவது, ஒரு கோழியானது தனது குஞ்சுகளோடு இரையைத் தேடிக் கொண்டிருக்கும் பொழுது குஞ்சுகளுக்கு ஏதேனும் ஆபத்து வருகிறது என தெரிந்தால், தாய்க்கோழி குரலெழுப்பும். தாயின் குரல் ஓசையை புரிந்துகொண்டு அனைத்து குஞ்சுகளும் ஓடிவந்த தாய்க்கோழியின் இறக்கைகளின் அடியில் தங்களை மறைத்துக் கொண்டு பாதுகாப்பை பெரும். அதுபோலவேதான் கிறிஸ்தவர்களாகிய ஒவ்வொருவரும் வாழ்வில் அறநெறி தவறி நடக்கின்ற போது அவர்களின் வாழ்வு தவறானது என்ற செய்தியானது இறைவனால் பல நபர்கள் வழியாக வழங்கப்படுகிறது. அதை உணர்ந்து கொண்டு தங்கள் வாழ்வை சரி செய்து கொண்டு அந்த ஆண்டவரிடத்தில் வந்து தங்களை முழுமையாக சரணாகதி அடைந்து, பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்ற இறையியல் கருத்தானது கிறிஸ்தவத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது.

இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவர் தாய் போல நம்மை தேற்றுவதாக குறிப்பிடுகின்றார். தாயாக இருந்து நம்மை பாதுகாக்கவும், பராமரிக்கவும், நமது குற்றம் குறைகளை மன்னித்து, நம்மை நேரிய வழியில் நடக்கவும், வழிகாட்டக்கூடிய பணியினை இறைவன் ஒவ்வொரு நாளும் பல மனிதர்கள் வழியாக செய்து வருகிறார். 
தவறு செய்கின்ற ஒரு குழந்தையை தாயானவள் கண்டிக்கவும், தவறான வழியை சுட்டிக்காட்டவும், சரியான வழியில் நடக்க அறிவுறுத்தும், அவ்வழியில் அழைத்துச் செல்லவும் முயல்வது போல, இறைவனும் நமது வாழ்வில் நாம் நல்ல மனிதர்களாக, இறைவன் விரும்பக் கூடியவர்களாக, ஒரு தாய் விரும்பக்கூடிய பிள்ளையை போல், இந்த உலகத்தில் இறைவன் விரும்பக்கூடிய மனிதர்களாக நாம் வளர வேண்டும் என்பதற்காக இறைவன் பல நேரங்களில் பல மனிதர்கள் வழியாக பல வழிகாட்டல்களை நமக்கு வழங்கிக் கொண்டிருக்கிறார். அவரின் வழிகாட்டல்களை கண்டு கொண்டு வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு அவரது பாதையில் பயணிக்க கூடிய குழந்தைகளாக நாம் மாறிட வேண்டும். 

 குழந்தைகள் எப்படி அடித்தாலும் அடித்தவரிடமே  சென்று ஒட்டிக் கொள்கிறதோ, அது போல நமது வாழ்வில் ஏதேனும் துன்பங்கள், துயரங்களை நாம் சந்திக்கின்ற போதெல்லாம், நம் துன்ப துயரங்களில், நம்மைவிட அதிகம் துயர் அடைவது...  நம் தாயாக இருக்கும் இறைவனே என்பதை உணர்ந்து கொண்டு அந்த தாயின் வழிகாட்டலின் அடிப்படையில் செயல்பட்டு, வாழ்வில் நல்ல மனிதர்களாக இயேசு விரும்பக்கூடிய நல்ல சீடர்களாக, பணியாளர்களாக தாய்க்குரிய நல்ல மகனாக மாறிட இன்றைய நாளில் இறைவன் அழைக்கின்றார்.
நமது வாழ்வு முறையை சீர்தூக்கிப் பார்த்து, தாயாம் இறைவன் காட்டுகின்ற வழியில் அவரைப் பின்பற்றி, வாழ்வில் மாற்றத்தை உருவாக்கி, சொல்லிலும், செயலிலும்  தாய்க்கு நல்ல குழந்தைகள் நாம் என்பதை வெளிக்காட்ட கூடியவர்களாக மாறிட இறையருள் வேண்டும

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...