வியாழன், 23 செப்டம்பர், 2021

தன்னை அறிந்தவன் தரணியில் சாதனை புரியலாம்...(24.9.2021)

தன்னை அறிந்தவன் தரணியில் சாதனை புரியலாம்

இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

தன்னை அறிந்தவன் தரணியில் சாதனைகள் புரியலாம் என்பதற்கு ஏற்ற வகையில் இன்றைய முதல் வாசகத்தில் ஆகாய வழியாக திருக்கோவிலை கட்டுவதற்கான அழைப்பு தரப்பட்டு பல தடைகளை சந்திக்கின்ற போதெல்லாம் கடவுள் நம்மோடு இருக்கிறார் அவர் நம்மை வழிநடத்துவார் நம்மில் தொடங்கிய நற்செயலை அவர் நிறைவு பெறச் செய்வார் என்ற வகையில் அவர்களை ஊக்கமூட்டி எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து கொண்டு செய்யக்கூடிய பணியினை இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிக்க கேட்போம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன்னை யார் என்ற கேள்வியை எழுப்புகிறார் பலரும் பலவற்றைச் சீமோன் பேதுரு இயேசுவை மேசியா என அறிக்கை விடுகிறார் சீமோன் பேதுருவின் வார்த்தைகளைக் கேட்டு இயேசுவை ஏற்றுக் கொள்ளாதவரை வாழ்த்துகிறார் அதேசமயம் தன் வாழ்வில் தான் படுகின்ற துன்பங்களை அறிவிக்கின்ற போது மனித இயல்புக்கு உரிய முறையில் பேதுரு துன்பங்கள் உனக்கு தேவை இல்லை என்று கூறும் போது இயேசு சீமோன் அறிந்துகொள்ளக்கூடிய தையும் இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் வாசிக்கின்றோம்.
இன்றைய வாசகங்கள் இரண்டுமே நமக்குத் தருகின்ற பாடம் தன்னை அறிந்து கொள்ளுதல் என்பது இந்த சமூகத்தில் பலவிதமான சாதனைகளை படைப்பதற்கான வழி என்பதாகும் தன்னுடன் இருந்த இறைவனை அறிந்து கொண்டிருந்தார் அந்த இறைவன் மீது அவர் கொண்டிருந்த ஆழமான நம்பிக்கைதான் மக்களை ஒருங்கிணைத்து ஆண்டவருக்காக ஆலயத்தை கட்டுவதற்கான முயற்சியில் அவரை ஈடுபட வைத்தது அது போலவே இன்றைய நற்செய்தி வாசகத்தில் இடம்பெற்ற பேதுருவும் தன்னுடன் இருந்த ஆண்டவரை யாரென அறிந்திருந்தார். எனவேதான் இயேசுவை மெசியா என அறிவித்தார் அதேசமயம் மெசியாவின் துன்பத்தை ஏற்றுக் கொள்ள இயலாத மனித இயல்புக்கு உரிய முறையில் உமக்கு துன்பங்கள் தேவையில்லை எனவும் கூறினார். 

பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்த உலகத்தில் எப்போதுமே  எதையோ ஒன்றை நோக்கி ஓடிக் கொண்டே இருக்கக்கூடிய நாம் சற்று நிதானமாக நின்று நாம் எதை நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கிறோம். நாம் யார் என்பதையும் நம்முடன் இருப்பவர்கள் யார் என்பதையும் சிந்தித்துப் பார்ப்போம். இயேசுவுடன் இருந்த சீடர்கள் இயேசுவிடம் இருந்து பலவற்றை கற்றுக் கொண்டார்கள் நம்முடன் இருந்து நம்மோடு எப்போதும் பயணம் செய்பவர்கள் நம்மிடம் இருந்து வருகின்ற நன்மைகள் என்ன சிந்தித்துப் பார்ப்போம் நம்மை நாம் அறிந்து கொண்டால் மட்டுமே நம்முடன் இருக்கும் ஆண்டு வரை அறிந்து கொள்ள மட்டும் தன்னை அறிந்து கொண்டதன் அடிப்படையில் தான் அகாய் ஆண்டவரின் ஆலயத்தை எழுப்புவதற்கு முயற்சியில் ஈடுபட்டார் அதுபோலவே தன்னை முழுமையாக அழிந்து கொண்டிருந்த காரணத்தினால் தான் விரும்பும் ஆண்டவரை மேசியா என அறிவிக்கக் கூடியவராக இருந்தார் நாம் நம்மை யார் என அறிந்து கொள்வோம் நம்மை அறிவது தரணியில் சாதனைகள் பல புரிவதற்கான படிக்கற்கள் என்பதை உணர்ந்து கொண்டு இனி வருகின்ற நாட்களில் எல்லாம் நம்மை அறிந்து கொண்டு நம் வழியாக இச்சமூகத்தை அறிந்து கொள்ள இறை அருளை இணைந்து வேண்டுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...