புதன், 29 செப்டம்பர், 2021

ஆட்கள் தேவை.....(30.9.2021)

ஆட்கள் தேவை.....

 அன்புக்குரியவர்களே.....
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
அறுவடைக்கு ஆட்களை அனுப்புமாறு இறைவனிடம் மன்றாடுங்கள்....

இறைவார்த்தையை அறிவிப்பதற்கும், நற்செயல் செய்வதற்கும், ஆண்டவர் இயேசுவின் சீடர்களால் அவரது விழுமியங்களின் படி வாழ்வதற்கும் இன்று ஆட்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால் இதுநாள் வரை பலர் இவ்வேலைக்கு தங்களை உட்படுத்திக் கொண்டு பயணம் செய்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் முழுமையாக கொடுக்கப்பட்ட வேலையை செய்கிறார்களா? என்று கேள்வி எழுப்பும் பொழுது, அறுவடைக்கு வந்தவர்கள்தான் ஆனால் அறுவடை செய்யாது அடுத்தவர் மீது குறை காண்பவர்களாக குறைகளை மட்டுமே பெரிதுபடுத்திக், குறைகளைச் சுட்டிக் காண்பித்து தங்களது வாழ்வை நகர்த்துபவர்களாகத் தான் அதிகம் இருக்கிறார்கள்.
இயேசு இந்த மண்ணில் வாழ்ந்த போது குறைகளை சுட்டிக் காண்பித்தார். ஆனால் அதை மட்டுமே தன் நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை... பிறர் எப்படி வாழவேண்டும்? என்பதை தன் வாழ்வால் வாழ்ந்து காட்டினார். இன்று அவரை பின்பற்றி அவரது பணியில் தங்களை இணைத்துக்கொண்டு இருக்கக்கூடியவர்கள், வருகின்ற காலத்தில் அறுவடை பணியில் இணைத்துக் கொள்ள வருகின்றவர்களும், அடுத்தவரின் குறைகளை பெரிது படுத்துவதையும், சுட்டிக்காட்டுவதையும் விட தங்களது வாழ்வால்  இயேசுவைப் பல சாட்சிய வாழ்வு வாழ இன்றைய நாள் வாசகங்கள் அழைப்பு தருகின்றன.
அறுவடை மிகுதி வேலையாட்கள் குறைவு..... குறை சொல்பவர்கள் அதிகம் நிறைகளை சுட்டிக் காட்டுபவர்கள் மிகவும் குறைவு. 

நாம் குறைகளை மட்டும் பெரிதுபடுத்திக் குற்றம்சாட்டி, குற்ற உணர்வோடு வாழ மக்களை தூண்டுவதை விட, நிறைகளை பெரிதுபடுத்தி பல நிறைகளை, நல்லவற்றை நமது வாழ்வில் நாமும் செய்து நமது வாழ்வால் பிறரும் இந்த அறுவடை பணியில் தங்களை இணைத்துக் கொள்ள வழிவகை செய்யும் வகையில் நமது வாழ்வு அமைய வேண்டும் என்பதை மனதில் இருத்தியவர்களாய் இனி வருகின்ற நாட்களில் நல்ல பணியாளர்களாய் ஆண்டவரின் அறுவடையில் பங்கேற்கக் கூடியவர்களாய் மாறிட இறையருளை இணைந்து வேண்டுவோம் இன்றைய நாளில்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...